search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் பெண்களுக்கு ரூ.1000 வழங்க 4.58 லட்சம் விண்ணப்பங்கள் தயார்
    X

    வேலூர் மாவட்டத்தில் பெண்களுக்கு ரூ.1000 வழங்க 4.58 லட்சம் விண்ணப்பங்கள் தயார்

    • செப்டம்பர் 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
    • வீடு வீடாக விண்ணப்பம் வினியோகம்

    வேலூர்:

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை வாரியாக அந்தந்த பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் வினியோகம் செய்வதற்காக சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு 4 லட்சத்து 58 ஆயிரத்து 473 விண்ணப்பங்கள் வேலூருக்கு வந்தது. இந்த விண்ணப்பங்கள் 70 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் 699 ரேசன் கடைகள் உள்ளது. இந்தகடைகளில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 942 ரேசன் அட்டைகள் உள்ளது. இந்த குடும்ப அட்டைகள் அனைத்துக்கும் விண்ணப்பங்கள் வினியோகம் செய் யப்பட உள்ளது.

    இதற்கான விண்ணப்பங்கள் வந்துள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருந்து அந்தந்த ரேசன்கடைகளுக்கு பிரித்து அனுப்புவதற்கான பணிகள் நடக்கிறது. கடைகளுக்கு விண்ணப்பங்கள் சென்றவுடன் பொதுமக்களுக்கு வீடு வீடாக வினியோகிக்கப்படும்.

    பின்னர் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்காக பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×