search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Upload Camp"

    • ராஜபாளையம் தொகுதியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவேற்ற முகாம் நடந்தது.
    • இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம்

    முதல்-அமைச்சரின் சிறப்பான திட்டமென பொதுமக்களின் வரவேற்பு பெற்றுவரும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளின் விண்ணப்ப படிவங்கள் இணைய தளத்தில் சரியாக பதி வேற்றம் செய்யப்படுகிறதா? என்பதை ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கிராமம் கிராமாக சென்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

    முகவூர் ஊராட்சி காமராஜ் திருமண மண்டபத்தி லும், முத்துச்சாமியாபுரம் ஊராட்சி காமராஜ் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், சுந்தரராஜபுரம் ஊராட்சி சமுதாயக்கூடத்திலும் நடைபெற்றுவரும் முகாம்க ளுக்கு அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. கூறுகையில், முதல்-அமைச்சரின் இந்த திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. இத்திட்டம் மூலம் கோடிக் கணக்கான பெண்கள் பயன் பெற உள்ளதாக கூறினார்.

    அப்போது அங்கு வந்த அழகம்மாள் என்பவர் முதல்-அமைச்சரின் திட்டத்தை குலவையிட்டு வாழ்த்தினார்.

    ஆய்வின்போது ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன் வட்டார வழங்கல் அலுவலர் தன்ராஜ், காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, கிளை செயலாளர்கள் தொந்தியப்பன், கனகராஜ், மாடசாமி ஒன்றிய இளைஞ ரணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டி அருகே விவசாயிகளின் அடிப்படை விவர பதிவேற்ற முகாம் நடந்தது.
    • இந்த முகாமை வேளாண் ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விராலிப் பட்டி பஞ்சா யத்தில் வேளாண்மை அடுக்கு என்ற விவசாயிகள் அடிப்படை விவரங்களை பதிவேற்றும் முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமை வேளாண்மை உற்பத்தி ஆணையர்-அரசு செயலாளர் சமயமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    விராலிப்பட்டி ஊராட்சி யில் மொத்தம் 804 புலஎண்களில் 517 புல எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மீதமுள்ள புல எண்கள் விரைந்து பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. நில விவரங்கள் இணைக்கப் பட்ட விவசாயிகளின் விவரங்களை வேளாண் சார்ந்த 13 துறைகளின் திட்டங்களை ஒற்றை சாளர வலைதளம் மூலம் விவசாயிகள் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    நிதி திட்ட பலன் ஆதார் எண் அடிப்படையில் வங்கிக் கணக்கிற்கு நேரடி பண பரிமாற்றம் மூலம் அனுப்பப் படும். இந்த வலைதளம் பதிவேற்றம் செய்வதன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைய முடியும். விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்ட பலன் பெறலாம்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப் படும் திட்டங்கள், 300 குடும்பங்களுக்கு 2 தென்னங் கன்று வழங்குதல், திரவ உயிர் உரம், தெளிப்பான்கள் மற்றும் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தார்பாலின், ஜிப்சம், ஜிங் சல்பேட், பண்ணை கருவிகள், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வழங்கப் படும் பவர் டிரில்லர், பண்ணை குட்டை அமைத்தல் மற்றும் ஆதிதிராவிடர் விவசாயி களுக்கு ஆழ்துளை கிணறு ஆகியவை மானியத்தில் வழங்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கலெக்டர் சங்கீதா, வேளாண்மை இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர் (மத்திய திட்டம்) அமுதன் மற்றும் அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் ஜெயபாலன், துணைத்தலை வர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர் செந்தாமரை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×