search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி மாவட்டத்தில்"

    • 28-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை நடக்கிறது
    • தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    தபால்துறையின் கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோவில் தலைமை தபால் நிலையம், தக்கலை தலைமை தபால் நிலையம், அகஸ்தீஸ்வரம், ஆரல்வாய்மொழி, அருமனை, ஆசாரிபள்ளம், அழகியபாண்டியபுரம், அழகப்பபுரம், பூதப்பாண்டி, குளச்சல், ஈத்தாமொழி, இடைக்கோடு, களியக்காவிளை, கன்னியாகுமரி, காப்புக்காடு, கருங்கல், காட்டாத்துறை, கொல்லங் கோடு, கோட்டார், கொட்டாரம், குலசேகரம், குழித்துறை, மணவா ளக்குறிச்சி, மார்த் தாண்டம், மேக்காமண்டபம், முளகுமூடு, நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பகுதி, நாகர்கோவில் டவுண், நாகர்கோவில் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், நெய்யூர், பாலப்பள்ளம், பளுகல், புதுக்கடை, புத்தளம், எஸ்.டி.மாங்காடு, சுசீந்திரம், திக்கணங்கோடு, திருவிதாங் கோடு, வெட்டூர்ணிமடம், வடிவீஸ்வரம் உள்ளிட்ட 40 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் சிறப்பு முகாம் வருகிற 28-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    காலை முதல் மாலை வரை இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த சேவை தொடர்பான ஏதேனும் புகார்களுக்கு தபால் கோட்ட கண்காணிப்பாளர், கன்னியாகுமரி கோட்டம், நாகர்கோவில் என்ற முகவரியிலும், 04652-232032, 232033 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது புகார்
    • கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள் நடந்துள்ளது. நாகர்கோவில் சப்-டிவிஷனலுக்குட்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது.

    விபத்தில் காயமடைந்த வர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி களில் சேர்க்கப்பட்டுள்ள னர். தீபாவளியன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நடந்த விபத்துகளில் சுமார் 30 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக விபத்துகளில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக மாவட்டம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் வடசேரி, நேசமணி நகர், கோட்டார், ஆசாரிப்பள்ளம் பகுதியில் தீபாவளி பண்டிகையை யொட்டி குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக 10-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள். தகராறில் ஈடுபட்டு காயமடைந்தவர்களில் ஒரு சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச் சையில் உள்ளனர். இதேபோல் கன்னியா குமரி சப்-டிவிசனலுக் குட்பட்ட பகுதியிலும் குடி போதையில் வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குளச்சல், தக்கலை பகுதியிலும் குடி போதையில் மோதலில் ஈடுபட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கோவில்களில் கூட்டம் அலைமோதியது.
    • வானை அலங்கரிக்கும் வகையில் பட்டாசுகள் இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி புதுமணத் தம்பதியினர் புத்தாடைகளை அணிந்து பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். குழந்தைகளுடன் பெற்றோர்கள் மற்றும் அவர்களது தாத்தா, பாட்டிகள் பட்டாசுகள் வெடித்தனர். வானை அலங்கரிக்கும் வகையில் பட்டாசுகள் இருந்தது. நாகர்கோவில் மாநகர பகுதியில் ராக்கெட்டுகள் பறக்க விடப்பட்டது. இரவை பகலாக்கும் வகையில் பட்டாசு வெளிச்சங்கள் இருந்தது. பட்டாசு சத்தங்கள் காதை பிளக்கும் வகையில் இருந்தன.

    சுசீந்திரம், கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், தக்கலை, குலசேகரம், குளச்சல், களியக்காவிளை, மார்த்தாண் டம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிராமப்புறங்களில் தீபாவளி பண்டிகையை யொட்டி விளையாட்டு போட்டிகள் நடந்தது. தீபாவளி பண்டிகையையடுத்து சுசீந்திரம் தாணு மாலய சாமி கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்தோடு வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    சொத்தவிளை கடற்கரை, வட்டக்கோட்டை கடற்கரை, முட்டம் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நேற்று மாலை பொதுமக்கள் குடும்பத்தோடு குவிந்திருந்தனர். கன்னியாகுமரியில் சூரியன் மறைவதை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். பத்நாபபுரம் அரண்மனை, நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    • சுமார் 100-க்கும் மேற்பட்ட மொத்த, சில்லறை விற்பனையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது
    • தீயணைப் புத்துறை அலுவலர்கள் கொண்ட 18 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    நாகர்கோவில் : குமரி மாவட்டத்திலுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட மொத்த, சில்லறை விற் பனையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன்.ஆர்.டி.ஓ , சேதுராமலிங்கம் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர் பட்டாசு விற்பனை குறித்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் பட்டாசு சில்லறை மற்றும் மொத்த விற்பனை உரிமம் பெற்ற இடங்கள், பட்டாசு தயாரிக்க உரிமம் பெற்ற இடங்கள் மற்றும் பட்டாசு விற்பனை செய்வதை கண்காணிக்கும் பொருட்டு தாசில்தார்கள், காவல்துறை அலுவலர்கள், தீயணைப் புத்துறை அலுவலர்கள் கொண்ட 18 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    குழு அலுவலர்கள் கடை பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், கையாளப்படுகின்ற நட வடிக்கைகள் குறித்து தொழிற்சாலை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆகியோர்களால் பயிற்சி வழங்கப்பட்டது.

    ஆய்வின்போது பட்டாசு உரிமம் பெற்ற இடத்தில் அல்லாது வேறு இடங்களில் விற்பனை செய்வதோ அனுமதி பெற்ற இடத்தை விட அதிகமான இடங்களில் அமைத்து விற்பனை செய்வ தோ கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த பட்டாசு களை தீயணைப்பு அலுவலர் பறிமுதல் செய்து பாது காப்பாக செயலிழக்க செய்ய வேண்டும்.

    அரசு வழிகாட்டி நடை முறை பின்பற்றாமல் பட்டாசு விற்பனை உரிமம் புதுப்பிக்க விண்ணப்பித்த வர்கள் உரிய வழிமுறையி னை பின்பற்றாமல் இருப்பது விசாரணை யின்போது கண்டறியப் பட்டுள்ளது. இதுபோன்ற உரிமங்களின் உரிமதாரர்கள் உரிய வழிகாட்டு நெறி முறைப்படி விற்பனை உரிம இடங்களில் மாற்றங்கள் செய்வதோடு வேறு இடங்களில் விற்பனை செய்திட வேண்டும். பட்டாசு விற்பனை கடை முன்பு பட்டாசு வெடிக்க கூடாது என்ற வாசகமும், புகைப்பிடித்தல் கூடாது என்ற வாசகமும் கொண்ட எச்சரிக்கை பலகை அல்லது பேனர் பொதுமக்கள் அறி யும் வண்ணம் கடைகளின் முன்பு வைக்கப்பட வேண் டும்.

    வெடிபொருட்கள் விதி 2008-ன் படி அங்கீகரிக்கப் பட்ட உரிமம் பெற்ற தயா ரிப்பாளர்களிடமிருந்து ஒப்புதல் அளிக்கப்பட்ட முத்திரையுடைய பெட்டி களையே பட்டாசு விற்பனை யாளர்கள் வாங்க வேண்டும். டிரக், கார் போன்ற வாகனங்களை பட்டாசு விற்பனை கடை அருகில் நிறுத்தம் செய்வதை தவிர்த்திட வேண்டும். மேற்படி வாகனங்களை இயக்கும்போது தீப்பொறி ஏற்பட்டு விபத்து நடைபெற வாய்ப்புள்ளதால் இவற்றை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும்.

    உதிரி பட்டாசுகளை விற்பனை செய்வதைத்த விர்க்க வேண்டும். கடை களை மூடும்போது அனைத்து மின் இணைப்பு களையும் துண்டித்த பின்னரே கடையை மூட வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய பெயிண்ட், எண்ணெய் மற்றும் காகி தங்களை கடைகளிலோ அல்லது கடைகளின் அரு கிலோ சேமித்தல் கூடாது. பட்டாசு, அதிர்வேட்டு போன்ற வெடி பொருட் களை உரிமம் பெறாத இடத்தில் தயார் செய்யக் கூடாது.

    அவ்வாறு தயார் செய்வது கண்டறியப் பட்டால் வெடி பொருள் சட்ட விதிகளின்படி குற்ற வியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எக்காரணம் கொண்டும் ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் பட்டாசு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. அவசர கால கட்டணமில்லா தொலைபேசி எண்.112-னை பொதுமக்கள் பயன் படுத்தலாம். சீன பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்டந்தோறும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகிறது.
    • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பிறகு 2 நாட்களுக்குள் வீடு திரும்பி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டந்தோறும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் கடந்த 1-ந்தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் தினமும் நான்கு இடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறப்பு முகாம் நடத்தி காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று காலையிலும் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது.

    முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு முகாம் நடைபெற்ற பகுதியில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர். மருத்துவ முகாமில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, மேல்புறம், ராஜாக்கமங்கலம், முஞ்சிறை, கிள்ளியூர் உள்பட 9 ஒன்றியங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் இதுவரை 11,594 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 33 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் உள்ளது. தற்பொழுது டெங்கு அறிகுறியுடன் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் 2 பேரும், தக்கலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பிறகு 2 நாட்களுக்குள் வீடு திரும்பி வருகிறார்கள்.

    • திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்
    • இரவு 10 மணி வரை மழை பெய்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழு வதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் இடைவிடாது 5 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. நாகர்கோவிலில் மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை முதலில் லேசாக தூரத்தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதி கரித்தது. பின்னர் இடை விடாது மழை கொட்டிக் கொண்டே இருந்தது. இரவு 10 மணி வரை மழை பெய்தது. இதனால் சாலை களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டார் சாலை, மீனாட்சி புரம் சாலை, அவ்வை சண்முகம் சாலை, கேப் ரோடு மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    இன்று காலையிலும் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட் டது. அவ்வப் போது மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி, தக்கலை, இரணியல், ஆரல்வாய் மொழி, கோழிப்போர்விளை, குருந்தன்கோடு, மாம் பழத்துறையாறு பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. மாம்பழத்துறையாறில் அதிகபட்சமாக 40.4 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்மிய மான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரு கிறது.

    கடந்த 2 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தடை நீக்கப்பட்டுள்ளது. அருவி யில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். அணையின் நீர்பிடிப்பு பகுதி களிலும், மலையோர பகுதிகளி லும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதி கரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1¼ அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 1½ அடியும், மாம்பழத்து றையாறு அணை நீர்மட்டம் 6 அடியும், முக்கடல் அணை நீர்மட்டம் 2¾ அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 32.03 அடியாக இருந்தது. அணைக்கு 1747 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யிலிருந்து 278 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 59.30 அடியாக உள்ளது. அணைக்கு 1167 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 80 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 14.40 அடியாக உள் ளது. அணைக்கு 270 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. சிற்றாறு-2 அணை யின் நீர்மட்டம் 14.49 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 9.20 அடியாகவும், மாம் பழத்துறை யாறு அணை யின் நீர்மட்டம் 30.18 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்கள் கிடுகிடு வென உயர்ந்து வருகிறது. இன்று அணை யின் நீர்மட்டம் 12.70 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 5.8, பெருஞ்சாணி 17.2, சிற்றாறு 1-4, சிற்றாறு 2-6.2, பூதப்பாண்டி 35.2, களியல் 9.4, கன்னிமார் 13.2, கொட்டாரம் 36.4, குழித்துறை 13.4, மயிலாடி 40.4, நாகர்கோவில் 21.2, புத்தன் அணை 16.6, சுருளோடு 6.2, தக்கலை 23, குளச்சல் 16.4, இரணியல் 12, பாலமோர் 13.2, மாம்பழத்துறையாறு 48, திற்பரப்பு 8.4, ஆரல் வாய்மொழி 7.2, கோழிப்போர்விளை 32.5, அடையாமடை 17.2, குருந்தன் கோடு 38, முள்ளங் கினாவிளை 7.4, ஆணைக் கிடங்கு 45.2, முக்கடல் 12.2.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்துதுறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், எதிர்வரும் வடகிழக்கு பருவ மழை காலத்தை எதிர் கொள்ள தயார்நிலை யில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி, பேசியதாவது:- குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் தேவையான தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், பெருவெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய கால்வாய் மற்றும் குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. கடலோரப்பகுதிகளில் மற்றும் வெள்ள அபாய பகுதிகளில் பாதிக்கப்படும் நபர்களை மீட்க தேவையான மீட்பு உபகரணங்களை தயார்நிலையில் வைக்க மீன்வளத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

    தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்டறிந்து உடன் நட வடிக்கை எடுக்கவும், மேலும் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளவும் பொது சுகாதாரத்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்தான நெடுஞ்சாலைகள், பள்ளிகள் மற்றும் பிற பகுதிகளில் நிற்கும் மரங்களை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் அகற்றப்பட்டதை உறுதி செய்ய அனைத்து தாசில் தார்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பருவமழை காலங்களில் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், ஜே.சி.பி., மின்மோட்டார் போன்றவற்றை போதுமான அளவில் தயார்நிலையில் வைக்கவும், தற்காலிக தங்கும் முகாம்களை உடனடியாக பார்வையிட்டு அவற்றில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பதை உறுதி செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டது. பழுதான நிலையில் உள்ள அபாயகர மான கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த சம்மந்தப் பட்ட அலுவலருக்கு அறிவு றுத்தப்பட்டது. 15 தினங்களுக்கு ஒருமுறை ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய வற்றில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளை குளோரினேசன் செய்ய அதிகாரிகளுக்கு அறி வுறுத்தட்டது.

    மரங்கள் மற்றும் மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது தொட்ட நிலையில் காணப்பட்டால் மின்சார வாரியம் மூலம் மரம் மற்றும் மரக்கிளைகளை வெட்டி அகற்றவும், மின்பழுது தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் 9498794987 என்ற தொலைபேசி எண் செயல்பட்டு வருவதை பொதுமக்களுக்கு தெரிவிக்க மின்சாரவாரிய அலுவ லருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் வீடு மற்றும் அலுவலகங்களின் மேல் பகுதியில் குப்பைகள் மற்றும் மரத்தின் இலைகள் காணப் பட்டால் அவற்றை அப்புறப் படுத்தி தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு மழைக் காலங்களில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பருக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிளாஸ்டிக் பாட்டில், டயர்கள், தேங்காய் சிரட்டைகள் இவற்றில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஏற்பட்டு டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவ வாய்ப்புள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தி எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காய்ச்சல், சளி இது போன்ற அறிகுறிகள் தென் பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று பரிசோதனை மேற் கொள்ளுமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. கால்நடை களுக்கு நோய்தொற்று ஏற்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகவும் மற்றும் கால்நடைகள் இறந்தால் அவற்றை உட னடியாக அப்புறப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மழை வெள்ள பாதிப்பு சேதங்கள் தொடர் பான 24 மணி நேரமும் இயங்கும் மாவட்ட கட்டுப் பாட்டு அறை கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

    பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆறு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை மேற்படி பகுதிகளுக்கு அழைத்துச்செல்லாமல் தற்காத்துக்கொள்ளவும், தன்னார்வலர்கள் தங்கள் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் கேட்டுக்கொள் ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பால சுப்பிரமணியம், பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், உதவி கலெக்டர் (பயிற்சி) ராஜட் பீட்டன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாரா யணன், செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) ஜோதிபாசு, தோட்டக்லைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா உட்பட அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • கலைஞர் உரிமை மகளிர் திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது
    • 2000 பயனாளிகளுக்கு கலைஞர் உரிமை மகளிர் திட்டத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து பேசினார்

    நாகர்கோவில் : கலைஞர் உரிமை மகளிர் திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் இன்று தொடங்கி வைத்தார். குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பேரூராட்சி வட்டம் பகுதியில் அமைந்துள்ள சமுதாய நலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    விழாவில் 2000 பயனாளிகளுக்கு கலைஞர் உரிமை மகளிர் திட்டத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-சென்னையில் இருக்கும் ஒரு கோவிலுக்கு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைக்க நான் சென்றேன். சாப்பிட்டுக்கொண்டிருந்த இடத்தில் ஒரு வயதான அம்மா இருந்தார். அவருடைய பிள்ளைகள் அவரை கோவிலில் விட்டுவிட்டு சென்று விட்டனர். கோவில் அன்னதானம் சாப்பிட்டு வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் இதுபோன்று அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு சுமார் 13 அல்லது 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். ஒரு காலத்தில் கணவன் இறந்துவிட்டால் அந்த சிதையிலே மனைவியும் போட்டு எரிக்க வேண்டும். பெண்ணுக்கு சொத்தில் உரிமை கிடையாது. பெண் கேள்வி கேட்கக்கூடாது. ஆளுகின்ற எந்த பொறுப்புக்கும் பெண் வரக்கூடாது. இப்படி எல்லாம் இருந்தது. குமரி மாவட்டத்தில் தான் பெண்கள் முறையான ஆடை அணிவதற்கு உரிமை கோரி போராடினார்கள்.

    பெண்கள் சமூகத்தில் சமநிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு புதுமைபெண் திட்டத்தை தொடங்கினார்கள். நாட்டில் பெண்கள் படித்துவிட்டு உயர் கல்விக்கு செல்வது 24 சதவீதம் தான். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 72 சதவீதம் பெண்கள் உயர்கல்வி செல்கிறார்கள்.

    நாடும், உலகமும் நம்மை திரும்பி பார்க்கின்ற அளவிற்கு நம்முடைய பெண்கள் இன்றைக்கு அதிகாரபடுத்தப்பட்டு உள்ளார்கள். மேலும் பெண்களுக்கு இலவச பஸ் பயணமும் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் விஜய்வசந்த் எம்.பி., மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீபா ஆல்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்
    • தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டங்களான தனி நபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கையினை கலைஞர்களுக்கு கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தினை சிறு பான்மையினர் மக்கள் அறிந்து கடன் பெற்று வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் வகையில் கடன் விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் வருகிற 22-ந்தேதி அன்றும், திருவட்டார் தாலுகா அலு வலகத்தில் 28-ந்தேதி அன்றும், கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் 24-ந்தேதி அன்றும், கல்குளம் தாலுகா அலுவலகத்தில் 28-ந்தேதி அன்றும், தோவாளை தாலுகா அலுவலகத்தில் 31-ந்தேதி அன்றும் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெறும், சிறப்பு முகாம்களில் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

    தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை நகல், தொழில் திட்ட அறிக்கை கூட்டுறவு வங்கி புத்தக நகல் மற்றும் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங் கள் சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுரை
    • ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டம், மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அதனடிப்படையில், மேல்புறம் ஊராட்சி ஒன்றி யம் முழுக்கோடு ஊராட்சிக்கு ட்பட்ட பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் புண்ணியம் மாத்தூர்கோணம் சாலை பணிகளும், வெள்ளாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் சிதறால் பட்டன்விளை ஆட்டுக்கடவு சாலை பணிகளும், ரூ.35 லட்சம் மதிப்பில் பனிச்சமூடு கிருஷ்ணன்கோவில் சாலை பணிகளும், ரூ.38 லட்சம் மதிப்பில் வெள்ளாங்கோடு, செட்டிவிளை (பள்ளி கோணம் ஆர்.சி.சர்ச் சாலை) சாலை பணிகளும், மாஞ்சாலுமூடு பகுதியில் ரூ.46 லட்சம் மதிப்பில் கைதகம் படப்பச்சை சாலை பணிகளும், மலையடி ஊராட்சிக்குட்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பில் காங்கோடு சாணி சாலை பணிகளும், ரூ.24 லட்சம் மதிப்பில் உத்திரங்கோடு சண்டிப் பாறை சாலை பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வன்னியூர் ஊராட்சிக் குட்பட்ட செழுவன்சேரி-மஞ்சவிளை சாலை, துப்பிறமலை சாலை பணிகளும், மருதங்கோடு ஊராட்சிக்குட்பட்ட காணாகும் கொடி யூர்க்கோணம் சாலை பணிகளும், விளவங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மடிச்சல் சாட்டுமுக்கு சாலைப்ப ணிகளும், முழுக்கோடு, வெள்ளாங்கோடு ஆகிய ஊராட்சிகளில் முதல்-அமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.6 கோடி மதிப்பிலான சாலை பணிகளும் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

    இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பொதுமக்கள் அதிர்ச்சி
    • இந்த கும்பல் மாபெரும் மோசடி கும்பல் என தெரியவந்துள்ளது.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட விவசாயி ஒருவரின் மகள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் மாணவிடம் இருந்த செல்போனுக்கு அவ்வப்போது குறுந்தகவல்கள் வந்து கொண்டிருந்துள்ளது. அந்த குறுந் தகவலில் நீ அழகாக இருக்கிறாய் என்றும், உன்னை நான் காதலிக்கிறேன் என்றும் தகவல்கள் வந்து கொண்டே இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் மாணவியும் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் தனது பங்கிற்கு பதிலை அனுப்பி உள்ளார்.

    ஒரு கட்டத்தில் இருவரும் பல மணி நேரம் தங்களது தகவல்களை பகிர்ந்து கொண்டதோடு, காதலையும் வளர்த்து கொண்டனர். மேலும் அந்த வாலிபர் தான் சாப்ட்வேர் என்ஜினீயர் என்றும் தனது நண்பர்களிடமும் நீ நட்பாக பேசு எனவும், கூறி அவரது நம்பரை சக நண்பர்களுக்கும் போன் நம்பரை பகிர்ந்து உள்ளார். சக நண்பர்களும் இவரிடம் ஆபாசமாக பேச தொடங்கியுள்ளனர்.

    இதில் மிரண்டு போன மாணவி தனது ஆண் நண்பரிடம் தகவலை கூறியுள்ளார். இதற்கு அந்த ஆண் நண்பர் கவலைப்படாதே உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி, வீட்டை விட்டு வந்து விடு என கூறியுள்ளார். மேலும் வீட்டிலிருந்து பணத்தையும் நகையையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

    மாலையில் வீடு வந்து சேராத மாணவியின் தந்தை, உறவினர்கள் வீடுகள் மற்றும் தெரிந்தவர்கள் வீடு ஆகியவற்றில் தேடிப் பார்த்துள்ளார். மாணவி எங்கு சென்றார் என எந்த துப்பும் துலங்கவில்லை. அவரது போனுக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து வேறு வழி இல்லாமல் மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக விரைந்து சென்று அந்த வாலிபரின் வீட்டை சோதனை செய்தபோது வாலிபர் சர்வ சாதாரணமாக தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், தான் வீட்டில் இருப்பதாகவும் கூறினர்.

    அதேபோன்று அந்த வாலிபரின் பெற்றோரும் உறுதியாக தங்களது மகன் வீட்டில் தான் இருக்கிறான் என தெரிவித்தனர். அதன் பின்னர் போலீசார் விசாரணையில் இறங்கியபோது தான் தெரிந்தது. அது ஒரு தனி நபர் அல்ல அது ஒரு கும்பல், அந்த கும்பல் இளம்பெண்களை மற்றும் மாணவிகளை காதலித்து ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் என தெரியவந்தது.

    இதையடுத்து அந்த கும்பலை கைது செய்ய மாணவி இருக்கும் இடமான சென்னை நோக்கி போலீஸ் படை விரைந்தது. இதை தெரிந்து கொண்ட அந்த கும்பல் மாணவியை அங்கு விட்டு விட்டு தலைமறைவானது. மாணவியை மீட்ட போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. அந்த வாலிபர் நண்பர்களின் போன் நம்பர்களை கொடுத்து வாலிபர்களிடம் பேச வைத்தது தெரியவந்தது. மேலும் இந்த கும்பல் மாபெரும் மோசடி கும்பல் எனவும் தெரியவந்துள்ளது. மாணவியை பெற்றோருடன் அறிவுரை கூறி அனுப்பி வைத்த போலீசார், அந்த கும்பல்களை சேர்ந்தவர்கனின் முழு விவரங்களையும் சேகரித்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண்கள் மற்றும் மாணவிகளை குறிவைத்து காதலித்து ஏமாற்றும் கும்பலால் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • 2-வது நாளாக இன்றும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகம்
    • நேற்று மாவட்டம் முழுவதும் 400 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடக்கிறது.

    முதல் கட்ட முகாம் நடைபெற உள்ள பகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்களை ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று வீடு வீடாக சென்று வழங்கினார்கள். நேற்று மாவட்டம் முழுவதும் 400 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கனை வழங்கினார்கள். முதல் நாளில் குமரி மாவட்டத்தில் 65 ஆயிரம் குடும்பத்தலைவிகளுக்கு விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இன்று 2-வது நாளாகவும் அகஸ்தீஸ்வரம், கல்குளம், தோவாளை தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்களை வழங்கி வருகிறார்கள். இந்த விண்ணப்ப படிவங்கள் நாளையும், நாளை மறுநாளும் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து 24-ந்தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த சிறப்பு முகாமில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

    விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யும் குடும்ப அட்டைதாரர்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு கார்டு மற்றும் பேங்க் பாஸ்புக் ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும். இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 2-ம் கட்டமாக முகாம் நடைபெறும் பகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடுத்த கட்டமாக விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×