search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் புதர்மண்டி காணப்படும் ரெயில்வே பிளாட்பாரங்கள்
    X

    குமரி மாவட்டத்தில் புதர்மண்டி காணப்படும் ரெயில்வே பிளாட்பாரங்கள்

    • சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?
    • நாகர்கோவில் ரெயில் நிலையம் அதிக வருவாய் கிடைக்கும் ரெயில் நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ரெயில் நிலையம் அதிக வருவாய் கிடைக்கும் ரெயில் நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூர், கோவை, மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவிலில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வருவதால் கூட்டம் எப்பொழுதும் அதிகமாக காணப்படும். காலை, மாலை நேரங்களில் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு வேலைக்கு செல்பவர்கள் ரெயில்களை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக உள்ள ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்கள் நின்று செல்லும்.

    இந்த ரெயில் நிலையத்தில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் பயணம் செய்து வருகி றார்கள். ஆனால் ஆரல்வா ய்மொழி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    பிளாட்பாரங்களில் முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். முட்பு தருக்குள் விஷ ஜந்துக்கள் இருந்தால் கூட தெரியாத அளவிற்கு வளர்ந்து காணப்படுகிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கையாக ஆரல்வாய்மொழி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள முட்புதர்களை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது ரெயில் பயணிகளையும் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்க மாகவும் அதிக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவ னந்தபுரத்திற்கு காலை நேரங்களில் பாசஞ்சர் ரெயிலும் செல்கிறது. இந்த ரெயில்களை வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மார்க்கமாக உள்ள ரெயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுவதாக ரெயில் பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இரணியல், பள்ளியாடி, குழித்துறை ரெயில் நிலை யத்தில் அதிக அளவு முட்பு தர்கள் உள்ளது. அதை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×