search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூராட்சி"

    • 1- வது வார்டு பகுதியில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • நான்கு வழி சாலை பணி நடைபெற்று வரும் பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பேரூராட்சி யில் மொத்த முள்ள 15 வார்டுகளில் 1,2,9,10,11,12 மற்றும் 14 ஆகிய வார்டுகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் இந்த வார்டுகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 1- வது வார்டு பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டதால் அங்குள்ள மக்கள் அன்றாடம் பயன் படுத்தும் தண்ணீரையும் விலை கொடுத்தே வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நெல்லை - தென்காசி நான்கு வழி சாலை பணி நடைபெற்று வரும் பகுதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் உடைப்பு சரி செய்யப்படாததால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் பாய்ந்து வீணாகிறது.

    இது குறித்து பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திற்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடுமையான கோடையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் தட்டுப்பட்டால் தவித்து நிற்கும் வேளையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் சாலையில் பாயும் தண்ணீரைக் கண்டு பொதுமக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். பேரூராட்சியின் 1 மற்றும் 2-வது வார்டுகளில் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து குடிநீரை விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வரும் சூழல் காணப்படுகிறது.

    அதிகாரிகள், வீணாகச் செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தினாலே பொது மக்களுக்கு தாராளமாக குடிநீர் கிடைக்கும் என்பது ஆலங்குளம் பேரூராட்சி மக்களின் எண்ணமாக உள்ளது.

    • சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 15 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். இதில், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பணி யாளர்கள் 70 பேர் பங்கேற்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில செயற்குழு உறுப்பினர் அறிவழகன் தலைமை வகித்தார். இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் திட்ட பராமரிப்பு, துாய்மைப்பணி தனியார் வசம் ஒப்படைப்பு அரசாணை எண்.139-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். இதில், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பணி யாளர்கள் 70 பேர் பங்கேற்றனர்.

    • நடுவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
    • பேரூராட்சி மன்றத் தலைவி பாக்கியலட்சுமி அறவாழி உள்ளிட்ட பலர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள நடுவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு செபத்தையாபுரம் லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் விஸ்வநாதன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் ஆலயமணி, சங்கத் தலைவர் ஜெயராஜ் சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவி பாக்கியலட்சுமி அறவாழி, சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா, கூட்டுறவு பண்டக சாலை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் த.அறவாழி, நகர தி.மு.க. செயலாளர் நா.கண்ணன், பேரூராட்சி துணை தலைவர் பிரியா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெப தங்கம் பிரேமா ஜெயக்குமார், எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், முத்துராஜ்,இந்திரா, சுமதி, அமுதா, ப்ளாட்டினா மேரி, மற்றும் சாயர்புரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் நாகராஜன், பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் பேரூராட்சி ஊழியர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க செயலர் சாலொமோன் பொன்ராஜ், செபத்தையாபுரம் ஊர் நலக் கமிட்டி தலைவர் அமிர்தராஜ் மற்றும் எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • சோழவந்தான் பேரூராட்சியில் திட்டப் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    மூலதன மானியத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் நவீன எரிவாயு தகனமேடை, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்படும் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணிகள், வளமைப்பு பூங்காவில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தனர்.

    பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிகாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன், பேரூராட்சி செயல் அலுவலர், சகாய அந்தோனியூசின், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • அவிநாசி வருமானம் மற்றும் தொழில் நகரமாக வளா்ச்சியடைந்து உள்ளது.
    • 38 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டதாக உள்ளது.

    அவினாசி :

    நடப்பு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்க வேண்டும் என நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவா் முதல்வா் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிா்வாகத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    நீலகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருப்பூா் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி சுமாா் 38 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டதாக உள்ளது. குறிப்பாக கோவை-சேலம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவிநாசிக்கு நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் அளவிற்கு வருமானம் மற்றும் தொழில் நகரமாக வளா்ச்சியடைந்து உள்ளது. ஆகவே இப்பகுதி வளா்ச்சிக்கு சாதகமாக சூழ்நிலை ஏற்படுத்தும் வகையில் நடப்பு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அவிநாசி பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

    • உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாக பதவியேற்றபோது பேரூராட்சி மன்றத்தின் கடன் ரூபாய் ஒரு கோடி என்று கூறப்பட்டது.
    • பேரூராட்சியில் உள்ள பல்வேறு பகுதிக்கு எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சிமன்ற கூட்டம் மன்றவளாகத்தில் இன்று நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு, பேரூராட்சி மன்ற தலைவர் எம்.ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கலாதரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மன்ற பொருட்களை இளநிலை உதவியாளர் முருகவேல் வாசித்தார். அப்பொழுது டெங்கு காய்ச்சலுக்காக மருந்து அடித்ததாக சுமார் ரூ.2 லட்சம் செலவு செய்ததாக கணக்கு கூறினார்களாம். மேலும், மழை நீர் கால்வாய்க்கு மூடி அமைப்பதில் பல்வேறு கணக்கு குளறுபடி இருப்பதாக மன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்டனர். மேலும், சுப்ரமணிய நகர் பகுதியில் சாலை அமைக்காமலேயே பில் போட்டதாக பேரூராட்சி மன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினார்.

    மேலும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாக பதவியேற்றபோது பேரூராட்சி மன்றத்தின் கடன் ரூபாய் ஒரு கோடி என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது மூன்று கோடி கடன் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பேரூராட்சியில் உள்ள பல்வேறு பகுதிக்கு எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. அப்படி இருக்க கடன் ஏன்? கூடியது. என்று காரசாரமாக பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேற்கண்ட குற்றச்சாட்டுக்கு பேரூராட்சி மன்ற தலைவரும், செயல் அலுவலரும் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொன்னரசி, சுஜாதா, சுகன்யா, அருணா, சதீஷ், முனுசாமி, குமார், ரகுமான்கான் உள்ளிட்டோர் கூட்டத்தை புறக்கணித்து மன்றவளாகத்தை விட்டு வெளியேறி வெளிநடப்பில் ஈடுபட்டனர். மேலும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுகுமார் மன்ற பொருட்களை வாசிக்கும் முன்னரே கூட்டத்தை புறக்கணித்து வெளிநாட்டில் ஈடுபட்டார். இதனால் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களது குறைகள் அடங்கிய மனுவை பேரூராட்சி இயக்குனர் மாவட்ட கலெக்டர், தமிழக முதல்வர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.

    • சாயர்புரம் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க பணி நடைபெற்றது.
    • புளிய நகர் விநாயகர் கோவில் குளக்கரைகளில் குப்பைகள் அகற்றப்பட்டது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள 10- வது வார்டு புளிய நகரில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க பணி நடைபெற்றது. சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புளிய நகர் விநாயகர் கோவில் குளக் கரைகளில் உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி மரகன்றுகள் நட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் புளிய நகர் ஊர் கமிட்டி தலைவர் அறவாழி, ஞானராஜ், முன்னாள் கவுன்சிலர் வேல்முருகன், நந்தகோபால புரம் பரமசிவன், புளிய நகர் இளைஞர் நற்பணி மன்றத்தினர், சாயர்புரம் பேரூராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நன்றி கூறினார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சுசீந்திரம் கீழ ரதி வீதியில் நடந்தது.

    கன்னியாகுமரி:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி. ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சுசீந்திரம் கீழ ரதி வீதியில் நடந்தது.

    கூட்டத்துக்கு அகஸ் தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் ஜெஸீம் தலைமை தாங்கி னார். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொடைவள்ளல் எம்.ஜி.ஆர். என்ற மாமனிதர் உருவாக்கிய இயக்கம்தான் அ.தி.மு.க. இந்த இயக்கத்தின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவில் இந்த இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து பணியாற்றி வந்த மூத்த கழக முன்னோடிகளுக்கு இன்று பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் பெயரை சொல்லாத அரசியல் கட்சித் தலைவர்களே கிடையாது. இப்போது இருக்கிற முதல்-அமைச்சர் கூடதான் ஒரு எம்.ஜி.ஆரின் ரசிகர் என்றும் எம்.ஜி.ஆர். எனது பெரியப்பா என்றும் சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கு ஒரு மாமனிதராக எம். ஜி.ஆர். திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

    தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் அளித்த வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுப்போம் என்று சொன்னார்கள். இதுவரை கொடுக்கவில்லை. அதேபோல ஊராட்சிகளை போல் பேரூராட்சிகளில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வருவோம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை அந்த திட்டமும் நிறைவற்றப்படவில்லை.

    வருகிற பாராளு மன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் பாரதிய ஜனதாவுடன்தான் அ.தி.மு.க. தொடர்ந்து கூட்டணி வைத்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. என்றும் யாருக்கும் துரோகம் செய்யாது. இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் கன்னியா குமரி சட்டமன்ற தொகுதியில் உள்ள அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 மூத்த கழக முன்னோடிளுக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கவுரவப்படுத்தினார்.

    கூட்டத்தில் அகஸ தீஸ்வரம் ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம் வரவேற்றுப் பேசினார். முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், தோவாளை பஞ்சாயத்து யூனியன் தலைவி சாந்தினி பகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், பேரூர் கழகச் செயலாளர்கள் குமார், ராஜபாண்டியன், மணிகண்டன், தாமரை தினேஷ், சீனிவாசன் மனோகரன், ஆடிட்டர் சந்திரசேகரன், ஊராட்சி செயலாளர்கள் செல்லம்பிள்ளை, லீன், தேரூர் பேரூராட்சி தலைவி அமுதாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுசீந்திரம் நகர செயலாளர் குமார் நன்றி கூறினார்.

    • தலைஞாயிறு பேரூராட்சியை தாலுகாவாக அறிவிக்க வேண்டும்.
    • தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் கலைஞர் உணவகம் திறக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் நடைபெற்றது.

    தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார், பேரூர் செயலாளர் சுப்பிரமணியன்முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் தலைஞாயிறு பேரூராட்சியை தாலுகாவாக அறிவிக்க வேண்டும், தலைஞாயிறு பேரூராட்சி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் கலைஞர் உணவகம் திறக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், ஒன்றிய குழுதலைவர் தமிழரசி, வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் மறைமலை, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தாமரைசெல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆருர் மணிவண்ணன், கற்பகம் நீலமேகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சோழன், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் அன்பரசு, ஜெய்சங்கர், பாரிபாலன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் சத்யா, இளைஞர் அணி விக்னேஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரு.11.80 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    வேர்க்கிளம்பி பேரூ ராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரு.11.80 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்.

    வேர்க்கிளம்பி பேரூ ராட்சி தலைவர் சுஜீர் ஜெபசிங் குமார், துணைத் தலைவர் துரைசிங் மனு வேல், செயல் அலுவ லர் சதீஷ் குமார், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலை வர் டாக்டர் பினுலால் சிங், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தின குமார், திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெகன்ராஜ், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோண், மாவட்ட செயலாளர் ஜாண் இக்னேஷியஸ், காட்டாத்துறை காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாம் டிக்சன், காட்டாத்துறை ஊராட்சி தலைவர் இசை யாஸ், மற்றும் வேர்கிளம்பி பேரூராட்சி வார்டு உறுப்பி னர்கள், பொது மக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • நெற்குப்பை பேரூராட்சி மன்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி மன்ற மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது.

    சேர்மன் புசலான் தலைமை வகித்தார். செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். மாதாந்திர வரவு-செலவு கணக்குகள் உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டது. பேரூராட்சியில் நடை பெற்று வரும் பணிகளின் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    திட்ட இயக்குநரின் வேண்டு கோளுக்கிணங்க பேரூராட்சிகளில் அன்றாட பணிகள் மேற்கொள்ள உதவியாளர், எழுத்தாளர், மின் மற்றும் குடிநீர் பராமரிப்பு மேற்கொள்ள உதவியாளர், புள்ளிவிவர தொகுப்பாளர், அலுவலக காவலர், டிராக்டர் ஓட்டுநர் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு சுமார் 10 பேரை பணி நியமனம் செய்தல், மலம், ஜலம் கழிப்பில்லா பேரூராட்சியாக மாற்ற உறுதிமொழி எடுத்தல், குப்பை இல்லாத பேரூராட்சியாக மாற்றி நட்சத்திர அங்கீகாரம் பெற உறுதிமொழி எடுத்தல், போன்ற பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

    இளநிலை உதவியாளர் சேரலாதன், மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • மணவாளக்குறிச்சி பாலம் அருகில் செல்லும் போது அங்கு வந்த வேன் மோதியது.
    • மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் பாலஜெகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி பிள்ளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் கேசவதாஸ் (வயது 52).

    இவர் மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் எலக்ட்ரீசி யனாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கேசவதாஸ் அம்மாண்டி விளையிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அவர் மணவாளக்குறிச்சி பாலம் அருகில் செல்லும் போது அங்கு வந்த வேன் மோதியது. இதில் கேசவதாஸ் படுகாயமடைந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மணவாள க்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் பாலஜெகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    ×