search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூராட்சி"

    • சத்துணவுக்கூடம் மற்றும் கூடுதலாக கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.53 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது :- ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், ஊத்துக்குளி பேரூராட்சியில் உள்ள பல்வேறுபகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த வகையில், எஸ்.பெரியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம்மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி , ஊத்துக்குளி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவுக்கூடம் மற்றும் கூடுதலாக கட்டப்பட்டு வரும்புதிய வகுப்பறை கட்டடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படும்பாடத்திட்டங்கள் குறித்து நேரில் பார்வையிட்டும், ஊத்துக்குளி ஆர்.எஸ்நியாயவிலைக்கடையிலுள்ள அத்தியாவசயப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம்குறித்தும், அதே பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்குவழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகளின் தரம் குறித்தும் அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டு அறியப்பட்டது.

    மேலும் ஊத்துக்குளி தேர்வு நிலை பேரூராட்சி வார்டு எண்.8 கிழக்கு வீதியில்மூலதான மான்ய திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும்வாரச்சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்குவழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தும், மருந்துகளின்இருப்பு குறித்தும், ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பல்லேகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவான பள்ளிஉள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிகட்டடம் பழுது பார்த்தல் பணி உள்பட மொத்தம் ரூ.3.53 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.

    முன்னதாக, ஊத்துக்குளி டவுன் அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினால் இறப்பைத் தடுக்க தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் இருவார முகாமினை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு ஓஆர்எஸ்., பவுடர் வழங்கப்பட்டது. இந்த முகாம் இன்று முதல் 25.6.2023 வரை நடைபெறவுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 5-வயதிற்குட்பட்ட 1,77,901குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் ., பவுடர் வழங்கப்படவுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களதுகுழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைந்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    அப்போது துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்)ஜெகதீஸ்குமார், ஊத்துக்குளி பேரூராட்சித்தலைவர் பழனியம்மாள்,ஊத்துக்குளி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார், சாந்தி லட்சுமி, உதவிப் பொறியாளர்கள் முத்துக்குமார், இளங்கோ மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • 2 விதவைகளுக்கு தலா 3 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் திருவட்டார் தெற்கு ஒன்றியம் ஆற்றூர் பேரூ ராட்சிக்குட்பட்ட ஆற்றூர் புளியமூடு முதல் ஞாறாகுளம் பள்ளிக்குழி விளை வரை செல்லும் சாலை மிகவும் மோச மடைந்து காணப் பட்டது.

    அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தமிழக பால்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.89.5 லட்சம் மதிப் பீட்டில் தார் சாலை அமைக்க நிதி பரிந்துரைக்க ப்பட்டது.

    இந்த சாலை பணியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். ஆற்றூர் பேரூர் செயலாளர் சோழராஜன் தலைமை தாங்கினார். ஆற்றூர் பேரூராட்சி தலைவர் பீனா அமிர்தராஜ், துணை தலைவர் தலைவர் தங்க வேல், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற தலைவர் றூஸ், திருவட்டார் ஒன்றிய மீனவரணி துணை அமைப்பாளர் ஆன்றனி, வார்டு கவுன்சிலர்கள் ஜேம்ஸ், பாபுராஜ், கவி, ராஜகுமாரி மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து 2 விதவைகளுக்கு தலா 3 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டது. ஏழை மாணவனுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு கல்வி உதவி தொகையும் வழங்கப்பட்டது.

    • சிவகிரி பேரூராட்சி சார்பில் ஒட்டு மொத்த தூய்மை பணியை முன்னிட்டு வாறுகால்கள் சுத்தம் செய்தல் பணி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரையின் படி, சிவகிரி பேரூராட்சி சார்பில் ஒட்டு மொத்த தூய்மை பணியை முன்னிட்டு வாறுகால்கள் சுத்தம் செய்தல், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரித்தல், சுவர்களில் போஸ்டர்களை கிழிக்கும் பணிகள், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், வார்டு கவுன்சிலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் குமார், இசக்கி, தினேஷ் குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். இதில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் அலுவலகர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் 1 மற்றும் 2 வார்டுகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • இந்நிலையில் பணி நடைபெற்று வருவதை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் 1 மற்றும் 2 வார்டுகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பணி நடைபெற்று வருவதை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க பணியாளர்களுக்கு அறிவுறு த்தினர். ஆய்வின்போது பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலக்ஷ்மி செயல்மணி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கல் குவாரியை தடை செய்ய வலியுறுத்தி நடத்தினர்
    • நள்ளிரவு 1 மணி வரை இந்த போராட்டம் நடந்ததால் பதட்டம் ஏற்பட்டது.

    கன்னியாகுமரி :

    கப்பியறை பேரூ ராட்சிக்குட்பட்ட ஓலவிளை பகுதியில் அரசு அனுமதியுடன் ஒரு கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதனை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கல்குவாரி செயல்படுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் கூறி வருகின்றனர். மேலும் குவாரியை தடைசெய்யவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பிரின்ஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் மறியல் போராட்டம் உட்பட பல போராட்டங்களும் நடைபெற்றன. மேலும் கப்பியறை பேரூராட்சி மன்றத்திலும் குவாரியை தடை செய்ய கேட்டு தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

    இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கப்பியறை பேரூராட்சி தலைவர் அனிஷா கிளாடிஸ் தலைமையில் கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணி வரை இந்த போராட்டம் நடந்ததால் பதட்டம் ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் செயல் அலுவலர் ராஜேந்திரன், கருங்கல் போலீஸ சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.
    • 20 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 299 பேர் என மொத்தம் 486 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

    இதற்கான ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புறப் பகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

    பின்னர் அவர் தெரிவித்தாவது:மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 28 பேர், தஞ்சாவூர் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் 51 பேர், கும்பகோணம் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் 48 பேர், பட்டுக்கோட்டை நகர் மன்ற வார்டு உறுப்பினர்கள் 33 பேர், அதிராம்பட்டினம் நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் 27 பேர், 20 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 299 பேர் என மொத்தம் 486 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கான வரைவு வாக்காளார் பட்டியல் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளான தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகங்கள், தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி அலுவலகம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகங்கள், உதவி இயக்குநர் (பேரூரா ட்சிகள்) அலுவலகம், 20 பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில் வட்டாட்சியர் (தேர்தல்) ராமலிங்கம், தி.மு.க ஒன்றியச் செயலர் முரசொலி, அ.தி.மு.க ஒன்றியச் செயலர் முத்துமாறன், காங்கிரஸ் மாவட்டப் பொதுச் செயலர் மோகன்ராஜ், பா.ஜ.க காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சாயல்குடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • புதிய பைப் லைன்கள் அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் மாரியப்பன் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்து ராமலிங்கம் வரவேற்றார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணை சேர்மன்: சாயல்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகில் உள்ள இடத்தை சுத்தம் செய்து அந்த பகுதியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் காமராஜ்: 14-வது வார்டில் உள்ள குடிநீர் பைப் லைன்கள் 40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டவை. அவை சேதமடைந்துஅந்த பகுதியில் பொதுமக்கள் குடிநீர் பெற முடியாமல் உள்ளனர். புதிய பைப் லைன்கள் அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

    சாயல்குடி வி.வி.ஆர். நகர், நொண்டி பெருமாள் ஊரணி பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க பலமுறை வலியுறுத்தியும் பூங்கா அமைக்கவில்லை. விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் அழகர் வேல் பாண்டியன்: சாயல்குடி பொது மயானத்தை மின்சார மயானமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் மாணிக்கவேல்: 15-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் மற்றும் தார் சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் குமரையா: சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இருந்து அண்ணாநகர் வழியாக இரு வேலி பகுதிக்கு தார்சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர்ச ண்முகத்தாய் சுப்பிரமணியன்: சாயல்குடி சிவன் கோவில் ஊரணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாயல்குடி பெரிய கண்மாயில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக குளியல் தொட்டி அமைக்க வேண்டும்..

    கவுன்சிலர் ஆபிதா அனிபா: அண்ணா, இருவேலி பகுதியில் இருந்து பெரிய கண்மாய் கரை முதல் கூரான் கோட்டை விலக்கு ரோடு வரை கண்மாய் கரையில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் இந்திரா செல்லத்துரை: எனது வார்டில் இதுவரை எந்த பணிகளும் செய்து தரவில்லை எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் மாணிக்க வள்ளி பால்பாண்டியன், இந்திராணி பானுமதி, அமுதா உள்ளிட்ட கவுன்சிலர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களாக அளித்தனர். இந்த கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி பெற்று பணிகள் நடைபெறும் என சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தெரிவித்தார்.

    • முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • தரமான பைப்புகளை வாங்கி குடிநீர் குழாய்களை பதிக்க வேண்டும்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் ஷாஜகான் தலைமையில், உதவி சேர்மன் வயணப்பெருமாள் முன்னிலையில் நடந்தது. செயல் அலுவலர் மாலதி வரவேற்றார். மொத்தம் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மோகன்தாஸ்

    (7-வது வார்டு தி.மு.க.): 2023-24 சொத்துவரி செலுத்துபவர்களுக்கு அெஜண்டாவில் உள்ளபடி ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சேர்மன், சொத்துவரி 2023-24-க்கு முழுமையாக கட்டினால் 5 சதவீத ஊக்கத்தொகை கழித்தே பெற்றுக்கொள்ளப்படும் என்றார். சேகர் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்): முதுகுளத்தூரில் மட்டுமே டெண்டரில் குறைத்து போடப்படுகிறது. சமரசம் பேச வேண்டும் என்றார். சேர்மன்: எல்லா இடத்திலும் அப்படித்தான் நடக்கிறது. காண்ட்ராக்டர்கள் ஒத்துழைத்தால் போகலாம். கவுன்சிலர் மோகன்தாஸ்: தரமான பைப்புகளை வாங்கி குடிநீர் குழாய்களை பதிக்க வேண்டும். சேர்மன்: அரசு விதிமுறைப்படிதான் வாங்க முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது.

    • செஞ்சி பேரூராட்சியில் 7 இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி பேரூராட்சியில் பேரூராட்சி அலுவலகம், காந்தி கடை வீதி, பஸ் நிலையம், விழுப்புரம் சாலை, திருவண்ணாமலை சாலை, திண்டிவனம் சாலை ஆகிய 7 இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தந்த பகுதி வார்டு கவுன்சிலர்கள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயக்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

    இதில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் அஞ்சலை, சங்கீதா, சுமித்ரா, லட்சுமி, சீனிவாசன், மோகன், பொன்னம்பலம், புவனேஸ்வரி, நூர்ஜகான், மகாலட்சுமி மற்றும் நிர்வாகிகள் தண்டபாணி, தனசேகர், பாஷா, அறிவு, ராம்ராஜ், ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கானாடுகாத்தானை குப்பை இல்லாத பேரூராட்சியாக மாற்றுவோம் என தலைவர் ராதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பேரூராட்சி தமிழ்நாட்டின் முன்மாதிரி பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி கானாடுகாத்தான் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் குப்பைத் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் ராதிகா ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

    செயல் அலுவலர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார். இதில் வணிக நிறுவனங்களுக்கு குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டு  மட்கும் குப்பை, மட்கா குப்பை என பிரித்து வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் குப்பைகளை பிரித்து வழங்கவும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தினர்.

    கானாடுகாத்தான் பேரூராட்சியை குப்பைகள் இல்லாத பேரூராட்சியாக மாற்றுவோம் என தலைவர் ராதிகா ராமச்சந்திரன் கூறினார்.

    இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அன்புக்கரசி, வசந்தி, சுரேகா, பாண்டிச்செல்வம், கருப்பையா உள்பட பேருராட்சி அலுவலர்கள், துப்புறவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வத்திராயிருப்பு

    விருதுநகர் வத்திராயிருப்பு தேர்வுநிலை பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இந்த பேரூராட்சியின் மேலப்பாளையம் 6-வது வார்டு பகுதியில் பேவர் பிளாக் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. 

    கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் தற்போது பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் அப்பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

    4 நாட்களாக பணிகள் நடைபெறாததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் போது எடுக்கப்பட்ட படிக்கட்டுகள் இல்லாமல் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் நேற்று வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    பின்னர் பேரூராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பேரூராட்சி தலைவர் தவமணி முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    இளையான்குடி புதிய பஸ் நிலைய விவகாரத்திற்காக பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்ற 31-ந் தேதி போராட்டம் நடக்கிறது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பொது மக்களின் எதிர்ப்பை மீறி ஊருக்கு வெளியே 3 கி.மீ தொலைவில் புதிய பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. 

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இளையான்குடியில் ஊருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும்  அரசியல் கட்சியினர், ஜமாத்தார்கள், வணிகர்கள், பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய மக்கள் நல கூட்டமைப்பு தொடங்கப்பட்டு அதன் சார்பில் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து கடையடைப்பு போராட்டம், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம், முதல்வருக்கு 5 ஆயிரம் தபால்கள் அனுப்பும் இயக்கம் என தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. 

    அதைத் தொடர்ந்து  அமைச்சர் கே. என். நேரு பஸ் நிலையம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும் என போராட்டக் குழுவினரிடம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன.

    புதிய பஸ் நிலையத்தை ஊருக்கு வெளியே அமைக்கப்படுவதைக் கண்டித்தும், தற்போதைய இளையான்குடி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரியும் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் வருகிற 31-ந் தேதி (செவ்வாய்கிழமை)   இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இளையான்குடியில்இந்தகூட்டமைப்பினர்,பொதுமக்கள் பங்கேற்ற கூட்டத்தில் போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. கூட்டமைப்பின் நிர்வாகிகள் துருக்கி ரபீக் ராஜா,ஜபிபுல்லா, கார்த்திமற்றும் முன்னாள் பேரூராட்சி தலைவர்,துணை தலைவர், வணிகர்சங்க நிர்வாகிகள் நகருக்கு வெளியே பஸ்நிலையம் அமைக்ககூடாது என வலியுறுத்தி பேசினர்.

    ×