search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் 7 இடங்களில் நீர் மோர் பந்தல்
    X

    செஞ்சி பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் 7 இடங்களில் நீர் மோர் பந்தல்.

    செஞ்சி பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் 7 இடங்களில் நீர் மோர் பந்தல்

    • செஞ்சி பேரூராட்சியில் 7 இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி பேரூராட்சியில் பேரூராட்சி அலுவலகம், காந்தி கடை வீதி, பஸ் நிலையம், விழுப்புரம் சாலை, திருவண்ணாமலை சாலை, திண்டிவனம் சாலை ஆகிய 7 இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தந்த பகுதி வார்டு கவுன்சிலர்கள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயக்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

    இதில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் அஞ்சலை, சங்கீதா, சுமித்ரா, லட்சுமி, சீனிவாசன், மோகன், பொன்னம்பலம், புவனேஸ்வரி, நூர்ஜகான், மகாலட்சுமி மற்றும் நிர்வாகிகள் தண்டபாணி, தனசேகர், பாஷா, அறிவு, ராம்ராஜ், ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×