search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பந்தல்"

    • மாநாட்டில் 100 அடி உயர கொடி கம்பம், கார் பார்க்கிங் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • அமைச்சர் மேடை அமைக்கும் பணியினை பார்வையிட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தி.மு.க. மாநில இளைஞரணி இரண்டாவது மாநாடு வருகின்ற 24-ந் தேதி நடைபெறுகிறது. அதற்காக 100 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு பந்தல் அமைக்கும் பணி, உணவருந்தும் இடம், கட்சி நிர்வாகிகள் அமருமிடம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்குமிடம், மாநாட்டில் 100 அடி உயர கொடி கம்பம், கார் பார்க்கிங் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்று வருகிறது.


    தினமும் காலை மாலை இரு வேலையும் அமைச்சர் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியினை பார்வையிட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இந்த நிலையில் திடீரென அமைச்சர் புல்லட் வண்டியைதானே ஓட்டி சென்று பணிகளை சுற்றி பார்வையிட்டார் அவருடன் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்டச் துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

    • தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வருகிற 24 ந் தேதி நடைபெறுகிறது.
    • 100 அடி உயரத்தில் கட்சிக் கொடி ஏற்ற பிரம்மாண்ட கம்பமும் நடப்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வருகிற 24 ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். அவர்கள் அமருவதற்கான பந்தல், தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்வதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே .என். நேரு ஆய்வு செய்து பந்தல் அமைப்பு குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தற்போது மாநாட்டு முகப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருவதற்கான பாதை, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமருமிடம் , உணவருந்துமிடம், கட்சி தொண்டர்கள் உணவு அருந்தும் இடம் மற்றும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் உருவ சிலைகள் அமைக்கும் இடத்தையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். மாநாட்டிற்காக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்தும் இடமும் தயாராகி வருகிறது. பந்தல் உள் பகுதியில் திரைச் சேலைகளால் அலங்காரம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. மேலும் மாநாட்டை சுற்றிலும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 100 அடி உயரத்தில் கட்சிக் கொடி ஏற்ற பிரம்மாண்ட கம்பமும் நடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    அமைச்சர் நேருவுடன் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் .ஆர் . சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் டி .எம். செல்வகணபதி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    • மாநாட்டை வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பாக நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
    • இனி வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.

    ஆத்தூர்:

    தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பாக நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இதையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மாநாடு குறித்த மோட்டார் சைக்கிள் பேரணியை கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். அந்த பேரணி 234 தொகுதிகளுக்கும் சென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்தது. இந்த ஊர்வலத்தில் வந்தவர்களை அமைச்சர் கே.என்.நேரு பாராட்டியதுடன் தானும் மோட்டார் சைக்கிளை ஓட்டி உற்சாகபடுத்தினார்.

    மாநாட்டு பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றும் வரும் நிலையில் பந்தலுக்காக பில்லர்கள் நடப்பட்டு விரைவில் தகர கூரைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. பிரமாண்ட முகப்பு தோற்றத்துடன் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பந்தல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1.5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தினமும் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் மாநாட்டு பந்தலை ஆய்வு செய்தனர். அப்போது பந்தல் அமைக்கும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். அதில் இனி வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.

    மேலும் மாநாட்டு திடலில் ஒரே நேரத்தில் உணவு உண்ணக்கூடிய அளவில் உணவு அரங்கம், கழிப்பிட வசதி, சாலை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளையும் அமைச்சர்கள் பார்வை யிட்டனர்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட அவை தலைவர் கருணாநிதி, நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் முத்துலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் அன்பு என்கிற மருதமுத்து, சிவராமன், மூர்த்தி, பெத்ததநாயக்கன் பாளையம் நகர செயலாளர் வெங்கடேசன், பேரூராட்சி தலைவர் பழனியம்மாள், ஏத்தாப்பூர் பேரூர் செயலாளர் பாபு, பேரூராட்சி தலைவர் அன்பழகன், ராஜாமணி, வார்டு கவுன்சிலர்கள் கலைச்செல்வி, பெத்தநாயக்கன்பாளையம் தகவல் தொழில் நுட்ப பிரிவு ரகு, தனபால், ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • வருகிற 24-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூர் தொட்டிப்பாளையத்தில் நடக்கிறது.
    • 40 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    காங்கயம்:

    தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் வருகிற 24-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூர் தொட்டிப்பாளையத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 50 சட்டமன்றத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பங்கேற்கிறார்கள். திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்பட 7 வருவாய் மாவட்டத்தில் உள்ள கட்சியின் 14 மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதற்காக 40 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மேடை அமைப்பு, இருக்கை வசதி, பந்தல் அமைப்பது, கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துசாமி தொட்டிப்பாளையத்தில் உள்ள கூட்டம் நடக்கும் மைதானத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன், அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், நிர்வாகி திலகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • நாளை ஆவணி முதல் ஞாயிறு
    • நாகராஜருக்கு தீபாராதனையும், அபிஷேகங்களும் நடக்கிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நாகராஜா கோவில் நாகதோஷம் தீர்க்கும் புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

    இதனால் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாகராஜரை வழிபட்டு செல்கிறார்கள். குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையான நாளை (20-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து நாகராஜருக்கு தீபாராதனையும், அபிஷேகங்களும் நடக்கிறது. கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளையும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    சுட்டெரிக்கும் வெயில் அடித்து வரும் நிலையில் பக்தர்களுக்கு வசதியாக கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாகர் சிலைகளுக்கு பால் ஊற்ற செல்லும் பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வரிசையாக நின்று சாமி கும்பிட வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் கோவிலுக்குள் சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் அதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவில் முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டாரை அடுத்த செங்கோடி மாத்தாரை சேர்ந்தவர் மணிதாஸ் (வயது 59 ), பந்தல் தொழிலாளி.

    இவர் மாத்தார் பகுதியில் உள்ள காவு கோவில் திருவிழாவுக்காக பந்தல் அமைக்கும் வேலையில் ஈடுபட்டார். அப்போது மேல் பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மணிதாஸ், நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி மணிதாஸ் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மணிதாசின் உடல் உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது. அவருக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

    • திருச்சியில் முதன்முறையாக சிக்னலில் கோடை பந்தல் அமைக்கபட்டது
    • திருச்சி தலைமை தபால்நிலையம் அருகில் உள்ள ரவுண்டானா சிக்னலில் கோடைப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது

    திருச்சி:

    தமிழகத்தில் அக்கினி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கோடை மழையுடன் தொடங்கினாலும், அதன்பிறகு வந்த நாட்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வெப்ப அலைகளை அள்ளித்தெளித்து வருகிறது. திருச்சியில் தினமும் 103 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வரும் நிலையில் வாகன ஓட்டிகள் வெயிலிலிருந்து தப்பிக்க தற்காலிக ஏற்பாடாக தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருச்சி தலைமை தபால்நிலையம் அருகில் உள்ள ரவுண்டானா சிக்னலில் கோடைப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


    • அலங்காநல்லூர், பாலமேட்டில் அ.ம.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • மகேந்திரன் நீர்-மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு நீர்-மோர் வழங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் செல்வம், மேற்கு ஒன்றிய செயலாளர் ரகு, நகர செயலாளர் ராஜபிரபு, இணைச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் கலந்துகொண்டு நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் பழம், இளநீர், மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார். முன்னதாக கேட்டுக்கடையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விவசாய அணி பிச்சை, இளைஞரணி செயலாளர் வக்கீல் சந்திரசேகர், மாணவரணி செயலாளர் அசோக், ஜெயலலிதா பேரவை கணேசன், ஓட்டுனர் அணி திருப்பதி, நீதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பாலமேடு பேரூர் கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் கழுவம்பாறை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் நீர்-மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு நீர்-மோர் வழங்கினார்.

    • செஞ்சி பேரூராட்சியில் 7 இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி பேரூராட்சியில் பேரூராட்சி அலுவலகம், காந்தி கடை வீதி, பஸ் நிலையம், விழுப்புரம் சாலை, திருவண்ணாமலை சாலை, திண்டிவனம் சாலை ஆகிய 7 இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தந்த பகுதி வார்டு கவுன்சிலர்கள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயக்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

    இதில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் அஞ்சலை, சங்கீதா, சுமித்ரா, லட்சுமி, சீனிவாசன், மோகன், பொன்னம்பலம், புவனேஸ்வரி, நூர்ஜகான், மகாலட்சுமி மற்றும் நிர்வாகிகள் தண்டபாணி, தனசேகர், பாஷா, அறிவு, ராம்ராஜ், ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தலை ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
    • கோட்டைமேடு பாலன் வரவேற்றார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில், வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு கோடைகால நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் மு.காளிதாஸ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். மாநில பேரவை துணைச் செயலாளர் தனராஜ், மாநில இணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் வக்கீல் திருப்பதி, ராமகிருஷ்ணன்.பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன், மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோட்டைமேடு பாலன் வரவேற்றார். இதில் குலசேகரன்கோட்டை பாண்டி, மற்றும் நிர்வாகிகள் அழகர், குழந்தைவேலு, ராமநாதன், நாகமணி, பிச்சை, மலைச்சாமி, வி.எஸ் பாண்டி பிரசன்னா, மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணி வித்து புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை ஆர்.பி.உதயகுமார் ஒன்றிய செயலாளர் காளிதாசிடம் வழங்கினார்.

    • கே.எஸ்.அழகிரி இன்று பார்வையிட்டார்
    • ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.பாதயாத்திரை தொடக்க விழா வருகிற 7- தேதி கன்னியாகுமரியில் நடக்கிறது.

    இதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார்கள்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி குமரி மாவட்டத்தில் முகாமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

    ராகுல் காந்தியை வரவேற்பது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் ராகுல் காந்தியை வரவேற்கும் வகையில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுக்களுடன் கே.எஸ் அழகிரி நாகர் கோவிலில் ஆலோசனை நடத்தினார்.

    இதை தொடர்ந்து இன்று காலை கன்னியாகுமரிக்கு சென்ற கே.எஸ்.அழகிரி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடப்பதை அழகிரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவருடன் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், எம்.பி.க்கள் விஜய் வசந்த், திருநாவுக்கரசு, ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • மழை காலங்களில்தக்காளி செடி பாதிப்பதோடு, மண்ணில் விழுந்து காய்களும் அழுகி வீணாகி நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வரும் சூழல் உள்ளது.
    • பந்தல் அமைக்கும் பொழுது மண்ணோடு செடி, காய்கள் ஒட்டாதததோடு மழை பெய்தாலும், தரமான தக்காளி அறுவடை செய்ய முடியும்.

    உடுமலை :

    உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக மாறியுள்ளது. ஆண்டு முழுவதும் சாகுபடி சீசன் காலங்களில் ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு வரை சாகுபடி செய்யப்படுகிறது. மழை காலங்களில்தக்காளி செடி பாதிப்பதோடு, மண்ணில் விழுந்து காய்களும் அழுகி வீணாகி பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வரும் சூழல் உள்ளது.

    இதற்கு தீர்வு காணும் வகையில்தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளிச்செடிகளுக்கு குச்சி நட்டு, கம்பி கட்டி நவீன முறையில் பந்தல் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதோடு விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

    உடுமலை பகுதிகளுக்கு இத்திட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில் நடப்பாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-

    மழை காலங்களில் தக்காளி செடிகள் மற்றும் காய்கள் மண்ணில் விழுந்தும், மழை நீர் வடியாமலும், ஒட்டுமொத்த சாகுபடியும் பாதிக்கிறது.இதற்கு தக்காளி நடவு செய்த வயல்களில் 6 அடி குச்சி நட்டு, 3 வரிசை கம்பி கட்டி, செடிகளை, கயிறு வழியாக இணைத்து, பாதுகாக்கும் தக்காளி பந்தல் நடைமுறை உள்ளது.இவ்வாறு செய்யும் போது மண்ணோடு செடி, காய்கள் ஒட்டாததோடு மழை பெய்தாலும், தரமான தக்காளி அறுவடை செய்ய முடியும்.

    கூடுதல் மகசூல் பெறமுடியும். நடப்பாண்டு முதல் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பந்தல் அமைத்தால் தோட்டக்கலைத்துறை சார்பில், ஹெக்டருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 100 ஹெக்டர் பரப்பளவில், மானியம் வழங்க இலக்கு நிர்ணயித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனவே, விவசாயிகள் இந்த நடைமுறையில், பந்தல் அமைத்து, உரிய பில், ஆவணங்களுடன் விண்ணப்பித்து, பின்னேற்பு மானியமாக தொகையை பெற்றுக்கொள்ளலாம்.மேலும், விபரங்களுக்கு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    ×