search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pavilion"

    • வருகிற 24-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூர் தொட்டிப்பாளையத்தில் நடக்கிறது.
    • 40 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    காங்கயம்:

    தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் வருகிற 24-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூர் தொட்டிப்பாளையத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 50 சட்டமன்றத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பங்கேற்கிறார்கள். திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்பட 7 வருவாய் மாவட்டத்தில் உள்ள கட்சியின் 14 மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதற்காக 40 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மேடை அமைப்பு, இருக்கை வசதி, பந்தல் அமைப்பது, கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துசாமி தொட்டிப்பாளையத்தில் உள்ள கூட்டம் நடக்கும் மைதானத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன், அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், நிர்வாகி திலகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்பநாதன் நீர்-மோர் பந்தலை திறந்து வைத்தார்.
    • பெரும்பத்து தொழிலதிபர் பரமசிவன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சி ஆசீர்வாதபுரத்தில் தி.மு.க. சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் ஏற்பாட்டில் நீர்,மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்பநாதன் நீர்-மோர் பந்தலை திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் மகேஷ்மாயவன் தலைமை தாங்கினார்.

    இதில் துணைத்தலைவர் அரசகனி, வார்டு உறுப்பினர்கள் லெட்சுமி லிவிங்ஸ்டன், ஜெயா முருகன், ரஞ்சிதா பிரபு, வேல்சாமி, வைத்திலிங்கராஜன் மற்றும் டேனியல், வினிங்ஸ்டன் பிரபு, கதிரேசன், ரவி, அருள், கடையம் பெரும்பத்து தொழிலதிபர் பரமசிவன், ஒன்றிய அவைத்தலைவர் ரவி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் காளித்துரை, மாவட்ட பிரதிநிதி அன்பழகன், வளர்மதி ராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ரம்யாராம் குமார், நாகல்குளம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சொட்டு, சுப்பிரமணியன்,

    ஆசீர் தினகரரூபன், சிவன் பாண்டியன், செந்தூர் முருகன், கணேசன், மேசியா, வெங்கடேசன், கிறிஸ்டோபர், மோசஸ், ஞானையா, குட்டி, குமார், திருமலை, கப்பல், ராமர், லெட்சுமணன், ஆனந்த், சிவனையா அருள், ஞானராஜ், ராம்ராஜ், மகேஷ் , அற்புதராஜ், முருகன், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×