search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Summer summer season"

    • தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்பநாதன் நீர்-மோர் பந்தலை திறந்து வைத்தார்.
    • பெரும்பத்து தொழிலதிபர் பரமசிவன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சி ஆசீர்வாதபுரத்தில் தி.மு.க. சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் ஏற்பாட்டில் நீர்,மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்பநாதன் நீர்-மோர் பந்தலை திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் மகேஷ்மாயவன் தலைமை தாங்கினார்.

    இதில் துணைத்தலைவர் அரசகனி, வார்டு உறுப்பினர்கள் லெட்சுமி லிவிங்ஸ்டன், ஜெயா முருகன், ரஞ்சிதா பிரபு, வேல்சாமி, வைத்திலிங்கராஜன் மற்றும் டேனியல், வினிங்ஸ்டன் பிரபு, கதிரேசன், ரவி, அருள், கடையம் பெரும்பத்து தொழிலதிபர் பரமசிவன், ஒன்றிய அவைத்தலைவர் ரவி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் காளித்துரை, மாவட்ட பிரதிநிதி அன்பழகன், வளர்மதி ராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ரம்யாராம் குமார், நாகல்குளம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சொட்டு, சுப்பிரமணியன்,

    ஆசீர் தினகரரூபன், சிவன் பாண்டியன், செந்தூர் முருகன், கணேசன், மேசியா, வெங்கடேசன், கிறிஸ்டோபர், மோசஸ், ஞானையா, குட்டி, குமார், திருமலை, கப்பல், ராமர், லெட்சுமணன், ஆனந்த், சிவனையா அருள், ஞானராஜ், ராம்ராஜ், மகேஷ் , அற்புதராஜ், முருகன், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×