search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் மேடை, பந்தல் அமைக்கும் பணி
    X

    குமரியில் மேடை, பந்தல் அமைக்கும் பணி

    • கே.எஸ்.அழகிரி இன்று பார்வையிட்டார்
    • ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.பாதயாத்திரை தொடக்க விழா வருகிற 7- தேதி கன்னியாகுமரியில் நடக்கிறது.

    இதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார்கள்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி குமரி மாவட்டத்தில் முகாமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

    ராகுல் காந்தியை வரவேற்பது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் ராகுல் காந்தியை வரவேற்கும் வகையில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுக்களுடன் கே.எஸ் அழகிரி நாகர் கோவிலில் ஆலோசனை நடத்தினார்.

    இதை தொடர்ந்து இன்று காலை கன்னியாகுமரிக்கு சென்ற கே.எஸ்.அழகிரி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடப்பதை அழகிரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவருடன் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், எம்.பி.க்கள் விஜய் வசந்த், திருநாவுக்கரசு, ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×