search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம்
    X

    முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம்

    • முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • தரமான பைப்புகளை வாங்கி குடிநீர் குழாய்களை பதிக்க வேண்டும்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் ஷாஜகான் தலைமையில், உதவி சேர்மன் வயணப்பெருமாள் முன்னிலையில் நடந்தது. செயல் அலுவலர் மாலதி வரவேற்றார். மொத்தம் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மோகன்தாஸ்

    (7-வது வார்டு தி.மு.க.): 2023-24 சொத்துவரி செலுத்துபவர்களுக்கு அெஜண்டாவில் உள்ளபடி ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சேர்மன், சொத்துவரி 2023-24-க்கு முழுமையாக கட்டினால் 5 சதவீத ஊக்கத்தொகை கழித்தே பெற்றுக்கொள்ளப்படும் என்றார். சேகர் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்): முதுகுளத்தூரில் மட்டுமே டெண்டரில் குறைத்து போடப்படுகிறது. சமரசம் பேச வேண்டும் என்றார். சேர்மன்: எல்லா இடத்திலும் அப்படித்தான் நடக்கிறது. காண்ட்ராக்டர்கள் ஒத்துழைத்தால் போகலாம். கவுன்சிலர் மோகன்தாஸ்: தரமான பைப்புகளை வாங்கி குடிநீர் குழாய்களை பதிக்க வேண்டும். சேர்மன்: அரசு விதிமுறைப்படிதான் வாங்க முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×