search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேர்கிளம்பி"

    • மேக்கோடு கிராம நிர்வாக அதிகாரி செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    • வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார் முதியோர்களுக்கு வேட்டி-சேலை வழங்கினார்.

    திருவட்டார்:

    வேர்கிளம்பி பேரூராட் சிக்குட்பட்ட பகுதி முதியோர் உதவித்தொகை வாங்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு தீபாவளிக்கு வேட்டி-சேலை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார் முதியோர்களுக்கு வேட்டி-சேலை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் துரைராஜ் மனுவேல் மேக்கோடு கிராம நிர்வாக அதிகாரி செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வேர்கிளம்பி பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட முண்டவிளை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து இருந்தது. அதை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி வார்டு உறுப்பினர் லலிதா கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக் கையை ஏற்று ரூ.3.35 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடியில் சுற்று சுவர் சீரமைத்தல், குடிநீர் வசதி செய்து கொடுத்தல், சாலை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாலை சீரமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங் குமார் தொடங்கி வைத்தார்.

    வேர்கிளம்பி பேரூராட்சியும், தனியார் மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

    கன்னியாகுமரி:

    வேர்கிளம்பி பேரூராட்சியும், தனியார் மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாமை கல்லங்குழி பகுதியில் நடத்தியது.

    முகாமில் இதயநோய், சர்க்கரை நோய், கண் மருத்துவம், பல் மருத்துவம் போன்ற பல்வேறு நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் துரைராஜ் மனுவேல், முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ஐஜிபி.லாரன்ஸ், மாவட்ட துணைத்தலைவர் ராஜரெத்தினம், முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வின்ஸ்எல்ஜின், மாவட்ட செயலாளர் வர்க்கீஸ், பேரூராட்சி கவுன்சிலர்கள் சென்றில்லதா சுஜிர், லாசர், மேரி அனிதா, சஜின், ஒமணா, ஜாஸ்மின் ஜெயந்தி, கட்சி நிர்வாகிகள் புரோசன், கிங்ஸிலி, நெல்சன், விஜயன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரு.11.80 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    வேர்க்கிளம்பி பேரூ ராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரு.11.80 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்.

    வேர்க்கிளம்பி பேரூ ராட்சி தலைவர் சுஜீர் ஜெபசிங் குமார், துணைத் தலைவர் துரைசிங் மனு வேல், செயல் அலுவ லர் சதீஷ் குமார், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலை வர் டாக்டர் பினுலால் சிங், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தின குமார், திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெகன்ராஜ், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோண், மாவட்ட செயலாளர் ஜாண் இக்னேஷியஸ், காட்டாத்துறை காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாம் டிக்சன், காட்டாத்துறை ஊராட்சி தலைவர் இசை யாஸ், மற்றும் வேர்கிளம்பி பேரூராட்சி வார்டு உறுப்பி னர்கள், பொது மக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • காரில் இருந்து கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிபகிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
    • கைது செய்யப்பட்ட டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை போலீசாரும், வருவாய் துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து தடுத்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து உணவு கடத்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் மூலச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டியும் கார் நிறுத்தாமல் சென்றுவிட்டது.

    தொடர்ந்து போலீசார் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று வேர்கிளம்பி பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். காரை ஓட்டி வந்த ஓட்டுநரையும் கைது செய்தனர். மேலும் காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. காரில் இருந்து கைப்பற்றப் பட்ட ரேஷன் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர் வோர் வாணிபகிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் கைது செய்யப்பட்ட ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது அவர் திருவட்டார் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பது தெரியவந்தது. மேலும் டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதலி உள்பட 4 பேர் மீது போலீசில் புகார்
    • சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மேற்கு மாவட்டம் வேர் கிளம்பி பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் டிப்ளமோ படித்து விட்டு தற்போது வெல்டிங் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதி யைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட் டது. இதையடுத்து இருவ ரும் நேரில் சந்தித்து பேசி னார்கள். தங்களது காதலை வளர்த்து வந்த நிலையில் காதல் விவகாரம் இருவர் வீட்டு பெற்றோருக்கும் தெரிய வந்தது.

    இந்த நிலையில் பெற் றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். 2 ஆண்டு களுக்கு பிறகு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்டதையடுத்து காதலர்கள் இருவரும் உல்லாச வானில் சிறகடித்து பறந்தனர். காதலிக்கு ஏராள மான பரிசு பொருட்க ளையும் அவர் வாங்கிக் கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் கல்லூரி மாணவி கடந்த சில மாதங்களாக தனது காதலனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் காதலனுக்கு தனது காதலி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை சில நாட்களாக பின் தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது கல்லூரி மாணவி அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த டிரைவர் ஒருவருடன் நெருங்கி பழகுவது தெரிய வந்தது. இருவரும் மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்தனர்.

    இது குறித்து அந்த வாலிபர் தனது காதலியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்று கூறியதுடன் எனது பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மனமுடைந்தார்.

    பின்னர் தனது காதலி யிடம் தான் கொடுத்த பரிசு பொருட்களை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார்.இந்த நிலையில் நேற்று கல்லூரி மாணவி தனது முன்னாள் காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது வேர் கிளம்பி பகுதிக்கு வருமாறும் தான் பரிசுப் பொருட்களை திரும்ப தருவதாகவும் கூறி னார்.

    இதையடுத்து அந்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் வேர் கிளம்பி பகுதிக்கு வந்தார். அப்போது கல்லூரி மாணவி தனது புதிய காதலனுடன் மோட் டார் சைக்கிளில் வந்து இறங்கினார். அப்போது தனது பழைய காதலனிடம் பரிசு பொருட்களை தர முடியாது என்று கூறி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். உடனே இவரும் அந்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்றார்.

    திடீரென மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் இவரை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கினார்கள். அப்போது கல்லூரி மாணவி யும் அவரது காதலனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.படுகா யம் அடைந்த வாலிபர் சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டார்.

    இது குறித்து கொற்றி கோடு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில் தன்னை தாக்கிய இரண்டு வாலிபர்கள் மீதும் தனது காதலி மற்றும் டிரைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யுள்ளார். மேலும் அவர்கள் தாக்குவது போன்ற சி.சி.டி.வி. காட்சிகளையும் அவர் போலீசாரிடம் ஒப்ப டைத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகி றார்கள். பரிசுப் பொருட் களை வாங்க வரவழைத்த இடத்தில் காதலனை வாலி பர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

    • விஜய்வசந்த் எம்.பி தொடங்கி வைத்தார்
    • குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. நிதியில் இருந்து ரூ. 11 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    கன்னியாகுமரி:

    வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகம் அருகில் அங்கன்வாடி செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் பழுதடைந்து மிக மோசமாக காணப்பட்டது. அதை மாற்றி புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் சுஜீர் ஜெபசிங்குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.

    அந்த கோரிக்கையை ஏற்று குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. நிதியில் இருந்து ரூ. 11 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து அதற்கான கட்டுமான பணியினை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங் குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் துரைராஜ் மனுவேல் முன்னிலை வகித்தார் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், வட்டார தலைவர் ஜெகன்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ஏசுராஜா, காட்டாத்துறை ஊராட்சி தலைவர் இசையாஸ், துணைத் தலைவர் ஜெபதாஸ், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோண், வட்டார துணைத் தலைவர் ஒஸ்டின் ஞான ஜெகன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று குமரன்குடி ஊராட்சி புல்லாணி பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் எம்.பி நிதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான பணிகளையும் விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    • வேர்கிளம்பி பேரூராட்சியில் முண்ட விளை முதல் செங்கோடி வரை உள்ள சாலையானது சேதமடைந்து காணப்பட்டது.
    • இந்த சாலை சீரமைப்பு பணியை வேர்கிளம்பி பேரூராட்சி மன்ற தலைவர் சுஜீர் ஜெபசிங்குமார் தொடங்கி வைத்தார்

    திருவட்டார்:

    வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட முண்ட விளை முதல் செங்கோடி வரை சுமார் 3 கிலோமீட்டர் அளவில் சாலை உள்ளது. இந்த சாலையானது சேதமடைந்து குண்டும் குளியுமாக காணப்பட்டது.

    இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஒட்டிகள் தினமும் அந்த பாதையில் சென்று வர சிரமப்பட்டார்கள் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் சுஜீர்ஜெபசிங்குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர் அந்த கோரிக்கையை பேரூராட்சி மன்றத்தில் ஒப்பதல் பெற்று நிதி ஒதுக்கினார்.


    தொடர்ந்து சாலை சீரமைக்கும் பணியை வேர்கிளம்பி பேரூராட்சி மன்ற தலைவர் சுஜீர் ஜெபசிங்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஐ. ரெகுகுமார், பேரூராட்சி துணைத் தலைவர் துரைராஜ் மனுவேல், வார்டு உறுப்பினர் சுந்தர் சிங், மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×