search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேர்கிளம்பி அருகே நடுரோட்டில் வாலிபரை சரமாரியாக தாக்கிய கும்பல்
    X

    கோப்பு படம் 

    வேர்கிளம்பி அருகே நடுரோட்டில் வாலிபரை சரமாரியாக தாக்கிய கும்பல்

    • காதலி உள்பட 4 பேர் மீது போலீசில் புகார்
    • சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மேற்கு மாவட்டம் வேர் கிளம்பி பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் டிப்ளமோ படித்து விட்டு தற்போது வெல்டிங் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதி யைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட் டது. இதையடுத்து இருவ ரும் நேரில் சந்தித்து பேசி னார்கள். தங்களது காதலை வளர்த்து வந்த நிலையில் காதல் விவகாரம் இருவர் வீட்டு பெற்றோருக்கும் தெரிய வந்தது.

    இந்த நிலையில் பெற் றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். 2 ஆண்டு களுக்கு பிறகு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்டதையடுத்து காதலர்கள் இருவரும் உல்லாச வானில் சிறகடித்து பறந்தனர். காதலிக்கு ஏராள மான பரிசு பொருட்க ளையும் அவர் வாங்கிக் கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் கல்லூரி மாணவி கடந்த சில மாதங்களாக தனது காதலனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் காதலனுக்கு தனது காதலி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை சில நாட்களாக பின் தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது கல்லூரி மாணவி அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த டிரைவர் ஒருவருடன் நெருங்கி பழகுவது தெரிய வந்தது. இருவரும் மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்தனர்.

    இது குறித்து அந்த வாலிபர் தனது காதலியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்று கூறியதுடன் எனது பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மனமுடைந்தார்.

    பின்னர் தனது காதலி யிடம் தான் கொடுத்த பரிசு பொருட்களை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார்.இந்த நிலையில் நேற்று கல்லூரி மாணவி தனது முன்னாள் காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது வேர் கிளம்பி பகுதிக்கு வருமாறும் தான் பரிசுப் பொருட்களை திரும்ப தருவதாகவும் கூறி னார்.

    இதையடுத்து அந்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் வேர் கிளம்பி பகுதிக்கு வந்தார். அப்போது கல்லூரி மாணவி தனது புதிய காதலனுடன் மோட் டார் சைக்கிளில் வந்து இறங்கினார். அப்போது தனது பழைய காதலனிடம் பரிசு பொருட்களை தர முடியாது என்று கூறி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். உடனே இவரும் அந்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்றார்.

    திடீரென மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் இவரை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கினார்கள். அப்போது கல்லூரி மாணவி யும் அவரது காதலனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.படுகா யம் அடைந்த வாலிபர் சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டார்.

    இது குறித்து கொற்றி கோடு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில் தன்னை தாக்கிய இரண்டு வாலிபர்கள் மீதும் தனது காதலி மற்றும் டிரைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யுள்ளார். மேலும் அவர்கள் தாக்குவது போன்ற சி.சி.டி.வி. காட்சிகளையும் அவர் போலீசாரிடம் ஒப்ப டைத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகி றார்கள். பரிசுப் பொருட் களை வாங்க வரவழைத்த இடத்தில் காதலனை வாலி பர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

    Next Story
    ×