search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூராட்சியில்"

    • மேக்கோடு கிராம நிர்வாக அதிகாரி செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    • வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார் முதியோர்களுக்கு வேட்டி-சேலை வழங்கினார்.

    திருவட்டார்:

    வேர்கிளம்பி பேரூராட் சிக்குட்பட்ட பகுதி முதியோர் உதவித்தொகை வாங்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு தீபாவளிக்கு வேட்டி-சேலை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார் முதியோர்களுக்கு வேட்டி-சேலை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் துரைராஜ் மனுவேல் மேக்கோடு கிராம நிர்வாக அதிகாரி செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வேர்கிளம்பி பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட முண்டவிளை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து இருந்தது. அதை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி வார்டு உறுப்பினர் லலிதா கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக் கையை ஏற்று ரூ.3.35 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடியில் சுற்று சுவர் சீரமைத்தல், குடிநீர் வசதி செய்து கொடுத்தல், சாலை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாலை சீரமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங் குமார் தொடங்கி வைத்தார்.

    • தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தொடங்கி வைத்தார்
    • நெய்யூர் பேரூராட்சி தலைவி பி.வி. பிரதீபா பணிகளை தொடங்கி வைத்தார்.

    இரணியல்:

    நெய்யூர் பேரூராட்சி 12-வது வார்டு கொடுமுட்டி சந்திப்பு முதல் சானல்கரை வரை சாலை சிமெண்ட் தளம் அமைக்க ரூ.9 லட்சமும், 6-வது வார்டு இலந்தவிளை குருசடி முதல் இலந்தவிளை அங்கன்வாடி வரை செல்லும் சாலை கருந்தளம் அமைக்க ரூ.7 லட்சமும் என ரூ.16 லட்சத்திற்கான சாலை வளர்ச்சி பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகள் தொடக்க விழா அந்தந்த பகுதிகளில் நடந்தது.

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா முன்னிலையில், நெய்யூர் பேரூராட்சி தலைவி பி.வி. பிரதீபா பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், நிர்வாகிகள் ஜெரோம்பெனடிக்ட் மற்றும் ஊர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×