search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேர்கிளம்பி பேரூராட்சியில் முதியோர்களுக்கு வேட்டி-சேலை வழங்கல்
    X

    வேர்கிளம்பி பேரூராட்சியில் முதியோர்களுக்கு வேட்டி-சேலை வழங்கல்

    • மேக்கோடு கிராம நிர்வாக அதிகாரி செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    • வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார் முதியோர்களுக்கு வேட்டி-சேலை வழங்கினார்.

    திருவட்டார்:

    வேர்கிளம்பி பேரூராட் சிக்குட்பட்ட பகுதி முதியோர் உதவித்தொகை வாங்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு தீபாவளிக்கு வேட்டி-சேலை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார் முதியோர்களுக்கு வேட்டி-சேலை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் துரைராஜ் மனுவேல் மேக்கோடு கிராம நிர்வாக அதிகாரி செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வேர்கிளம்பி பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட முண்டவிளை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து இருந்தது. அதை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி வார்டு உறுப்பினர் லலிதா கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக் கையை ஏற்று ரூ.3.35 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடியில் சுற்று சுவர் சீரமைத்தல், குடிநீர் வசதி செய்து கொடுத்தல், சாலை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாலை சீரமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங் குமார் தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×