search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச சிறப்பு"

    • ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் 4 இடங்களில் நடைபெற உள்ளது.
    • வரும் 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை நடக்கிறது.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் வரும் முன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதல்- அமை ச்சரின் வழிகாட்டுதலின்படி சுகாதாரத்துறை அமை ச்சரின் அறிவுறுத்தலின் படி வரும் 24-ந் தேதி (சனி க்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்களில் தாய் சேய் நல மருத்துவம், இருதய நோய், சரக்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் சிகிச்சை, அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பு, தோல், கண், பல், காது, மூக்கு தொண்டை சிகிச்சை மருத்து வம், மனநல மருத்துவம், பொது நல மருத்துவம், பெண்நல மருத்துவம், புற்றுநோய் பரிசோதனை மற்றும் பொது மருத்துவம், சித்த மருத்துவம் ஆகியவை களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் ஸ்கேன் வசதி, செமி ஆட்டோ அனலைசர் மூலம் ரத்தப்பரிசோதனை, ரத்தம், சர்க்கரை, கொழுப்பு, மலேரியா பரிசோதனை, அல்ட்ராசோனோ கிராம், கண்புரை ஆய்வு, கர்ப்ப ப்பை வாய் புற்று நோய் பரிசோதனை ஆகிய பிரிவுகள் செயல்பட்டு மேல்சிகி ச்சைக்காக பரி ந்துரை செய்யப்பட உள்ளது.

    மேல்சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் முதல்- அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக செய்யப்படும். காப்பீட்டு திட்ட பழைய அட்டை உள்ளவர்கள் புதுப்பித்து மாற்றிக் கொள்ளவும், புதிய அட்டை தேவைப்படு பவர்கள் தங்களது குடும்ப அட்டை ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்கு கீழ்வருமா னம் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலரின் சான்றையும் ஆவணங்களாக எடுத்து வருமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் 4 இ டங்களில் நடைபெற உள்ளது. முகாம்கள் ஈரோடு ராஜாஜிபுரம் காமராஜர் மேல்நிலைப்பள்ளி, பவானி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி, கவுந்த ப்பாடி, அந்தியூர் வட்டா ரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, அந்தியூர், சத்தியமங்கலம் வட்டாரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி, ரங்கசமுத்திரம் பகுதிகளில் வரும் 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை நடக்கிறது.

    எனவே ஈரோடு மாவட்ட பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளுக்கு அருகா மையில் நடைபெறும் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை, பரி சோதனையும் செய்து கொள்ளலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    வேர்கிளம்பி பேரூராட்சியும், தனியார் மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

    கன்னியாகுமரி:

    வேர்கிளம்பி பேரூராட்சியும், தனியார் மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாமை கல்லங்குழி பகுதியில் நடத்தியது.

    முகாமில் இதயநோய், சர்க்கரை நோய், கண் மருத்துவம், பல் மருத்துவம் போன்ற பல்வேறு நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் துரைராஜ் மனுவேல், முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ஐஜிபி.லாரன்ஸ், மாவட்ட துணைத்தலைவர் ராஜரெத்தினம், முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வின்ஸ்எல்ஜின், மாவட்ட செயலாளர் வர்க்கீஸ், பேரூராட்சி கவுன்சிலர்கள் சென்றில்லதா சுஜிர், லாசர், மேரி அனிதா, சஜின், ஒமணா, ஜாஸ்மின் ஜெயந்தி, கட்சி நிர்வாகிகள் புரோசன், கிங்ஸிலி, நெல்சன், விஜயன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×