search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேர்கிளம்பி பேரூராட்சியில் சாலை சீரமைப்பு பணி
    X

    வேர்கிளம்பி பேரூராட்சியில் சாலை சீரமைப்பு பணி

    • வேர்கிளம்பி பேரூராட்சியில் முண்ட விளை முதல் செங்கோடி வரை உள்ள சாலையானது சேதமடைந்து காணப்பட்டது.
    • இந்த சாலை சீரமைப்பு பணியை வேர்கிளம்பி பேரூராட்சி மன்ற தலைவர் சுஜீர் ஜெபசிங்குமார் தொடங்கி வைத்தார்

    திருவட்டார்:

    வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட முண்ட விளை முதல் செங்கோடி வரை சுமார் 3 கிலோமீட்டர் அளவில் சாலை உள்ளது. இந்த சாலையானது சேதமடைந்து குண்டும் குளியுமாக காணப்பட்டது.

    இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஒட்டிகள் தினமும் அந்த பாதையில் சென்று வர சிரமப்பட்டார்கள் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் சுஜீர்ஜெபசிங்குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர் அந்த கோரிக்கையை பேரூராட்சி மன்றத்தில் ஒப்பதல் பெற்று நிதி ஒதுக்கினார்.


    தொடர்ந்து சாலை சீரமைக்கும் பணியை வேர்கிளம்பி பேரூராட்சி மன்ற தலைவர் சுஜீர் ஜெபசிங்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஐ. ரெகுகுமார், பேரூராட்சி துணைத் தலைவர் துரைராஜ் மனுவேல், வார்டு உறுப்பினர் சுந்தர் சிங், மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×