search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேர்கிளம்பி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை படத்தில் காணலாம் 

    வேர்கிளம்பி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    • காரில் இருந்து கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிபகிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
    • கைது செய்யப்பட்ட டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை போலீசாரும், வருவாய் துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து தடுத்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து உணவு கடத்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் மூலச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டியும் கார் நிறுத்தாமல் சென்றுவிட்டது.

    தொடர்ந்து போலீசார் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று வேர்கிளம்பி பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். காரை ஓட்டி வந்த ஓட்டுநரையும் கைது செய்தனர். மேலும் காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. காரில் இருந்து கைப்பற்றப் பட்ட ரேஷன் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர் வோர் வாணிபகிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் கைது செய்யப்பட்ட ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது அவர் திருவட்டார் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பது தெரியவந்தது. மேலும் டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×