search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாயர்புரம்"

    • என்.எஸ்.எஸ். மாணவிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அறவாழி செய்திருந்தார்.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள 10-வது வார்டு புளியநகர் பகுதியில் நாசரேத் பிள்ளையன் மனை மர்காஷியஸ் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. என்.எஸ்.எஸ். மாணவிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டனர். சுத்தம் செய்த இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    சாயர்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஞானராஜ் வரவேற்று பேசினார். நாசரேத் பிள்ளையன்மனை மர்காஷியஸ் நாட்டு நலபணி திட்ட அணிகள் எண் 59,63,131, ஆசிரியர்கள் சாந்தி சலோமி, சீயோன் செல்ல ரூத், பியூலா.ஹேமலதா, சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் மற்றும் கல்லூரி மாணவிகள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அறவாழி ஏற்பாடு செய்திருந்தார். தூய்மை பணி செய்த மாணவிகளை புளிய நகர் ஊர் பொதுமக்கள் பாராட்டினார்.

    • நடுவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
    • பேரூராட்சி மன்றத் தலைவி பாக்கியலட்சுமி அறவாழி உள்ளிட்ட பலர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள நடுவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு செபத்தையாபுரம் லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் விஸ்வநாதன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் ஆலயமணி, சங்கத் தலைவர் ஜெயராஜ் சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவி பாக்கியலட்சுமி அறவாழி, சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா, கூட்டுறவு பண்டக சாலை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் த.அறவாழி, நகர தி.மு.க. செயலாளர் நா.கண்ணன், பேரூராட்சி துணை தலைவர் பிரியா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெப தங்கம் பிரேமா ஜெயக்குமார், எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், முத்துராஜ்,இந்திரா, சுமதி, அமுதா, ப்ளாட்டினா மேரி, மற்றும் சாயர்புரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் நாகராஜன், பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் பேரூராட்சி ஊழியர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க செயலர் சாலொமோன் பொன்ராஜ், செபத்தையாபுரம் ஊர் நலக் கமிட்டி தலைவர் அமிர்தராஜ் மற்றும் எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • சாயர்புரம் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க பணி நடைபெற்றது.
    • புளிய நகர் விநாயகர் கோவில் குளக்கரைகளில் குப்பைகள் அகற்றப்பட்டது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள 10- வது வார்டு புளிய நகரில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க பணி நடைபெற்றது. சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புளிய நகர் விநாயகர் கோவில் குளக் கரைகளில் உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி மரகன்றுகள் நட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் புளிய நகர் ஊர் கமிட்டி தலைவர் அறவாழி, ஞானராஜ், முன்னாள் கவுன்சிலர் வேல்முருகன், நந்தகோபால புரம் பரமசிவன், புளிய நகர் இளைஞர் நற்பணி மன்றத்தினர், சாயர்புரம் பேரூராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நன்றி கூறினார்.

    • சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி அந்தமானில் நடந்தது.
    • விஜய் மற்றும் எமிலி ஆகியோர் சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றனர்.

    சாயர்புரம்:

    சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி அந்தமானில் நடந்தது. இதில் சாயர்புரம் கோல்டு ஸ்டார் சிலம்பாட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இதில் சாயர்புரம் கூட்டுறவு சங்க தலைவர் புளியநகர் அறவாழி, சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்மி ஆகியோரின் மகன் விஜய் மற்றும் க.சாயர்புரம் ஆறுமுகம், கவுசல்யா என்பவர்களது மகள் எமிலி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

    வெற்றி பெற்ற 2 பேருக்கும் சாயர்புரம் மெயின் பஜாரில் பொது மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டாளங்குளம் பஞ்சாயத்து தலைவர் சங்கரேஸ்வரி ஏசுவடியான் கலந்து கொண்டு மாணவ, மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பயிற்சி அளித்த கோல்டு ஸ்டார் சிலம்ப மாஸ்டர் சண்முகசுந்தரம், மாஸ்டர் மணிகண்டன் ஆகியோரை கட்டாளங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஏசுவடியான், சாயர்புரம் வட்டார நடைபயிற்சி குழு தலைவர் பிச்சைமுத்து மற்றும் பட்டுபுதியவேல், ராஜா, அசோக், பரமசிவம், தங் ராஜ் மற்றும் ஊர் பொது மக்கள் பாராட்டினார்.சாயர்புரம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அறவாழி நன்றி கூறினார்.

    • நட்டாத்தி பட்டாண்டி விளையில் செபத்தையாபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழப்புணர்வு முகாம் நடந்தது.
    • முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஊசி போடப்பட்டது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி பட்டாண்டி விளையில் செபத்தையாபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழப்புணர்வு முகாம் நடந்தது.இதில் தோல் கழலை நோய் விழிப்புணர்வு முகாமிற்கு நட்டாத்தி பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார்.நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்து‌ராஜ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் ஜோசப்ராஜ், கால்நடை உதவி மருத்துவர் வேல்மாணிக்க வள்ளி, கால்நடை ஆய்வாளர்கள் சாந்தி சுப்பிரமணியன், கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் கோமதி லெட் சுமி, பேச்சியம்மை, டி.வி.எஸ். தொண்டு நிறுவனத்தில் இருந்து செல்வி, வார்டு உறுப்பினர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கால்நடை சுகாதாரம் மற்றும் பராமரிப்பு பற்றி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஊசி போடப்பட்டு சத்துமாவுகள் மாத்திரைகள் வழங்கப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகளை பராமரிப்பவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் நட்டாத்தி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கால்நடை வளர்க்கும் மக்கள் கால்நடையுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை செபத்தையாபுரம் கால்நடை மருத்துவமனை ஏற்பாடு செய்து இருந்தது.

    • இந்த வருடம் படித்த பள்ளியிலேயே சந்திப்பு நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது.
    • தூத்துக்குடி மற்றும் பல ஊர்களில் இருந்து மாணவர்கள் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரத்தில் அமைந்துள்ள போப் நினைவு மேல்நிலைப்பள்ளியில் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளியில்1983-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மற்றும் 1978 முதல் 1983 -ம் ஆண்டு வரை அதே பள்ளியில் ஒன்றாக படித்த மாணவர்கள் இருப்பிடம் மற்றும் தொலைபேசி நம்பர்களை திரட்டி ஒன்றாக வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி அதன் மூலம் பல தகவல்களை பெற்று பல ஊர்களில் பிரிந்து இருக்கும் மாணவர்களை ஒன்றிணைத்து கடந்த மே மாதம் வால்பாறையில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

    அப்போது பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே இந்த வருடம் 40 -ம் ஆண்டில் படித்த பள்ளியிலேயே சந்திப்பு நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை, பாண்டிச்சேரி, சேலம், கோவை, நாகப்பட்டினம், ஆத்தூர், புதுக்கோட்டை, மதுரை, வால்பாறை, சோளிங்கர், உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் சிவத்தையாபுரம், சேர்வைக்காரன் மடம், ஆறுமுக மங்கலம், குமாரபுரம் சிவஞானபுரம், சாயர்புரம், தூத்துக்குடி மற்றும் பல ஊர்களில் இருந்து மாணவர்கள் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இந்த சந்திப்பு நிகழ்ச்சில் சிறப்பு விருந்தினர்களாக கற்பித்த ஆசிரியர்கள் மார்ட்டின், தங்கராஜ், சாமுவேல் ராஜ், ஜேக்கப் டேவிட், ராஜ்குமார் அகதாஸ், டேவிட் சாமுவேல், ராமச்சந்திரன், விக்டர், தனசிங் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு முன்னாாள் மாணவர்களை வாழ்த்தி பேசினார். விழாவில் ஒவ்வொருவரும் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் சாம்ராஜ் நன்றி கூறினார்.

    • சிவத்தையாபுரத்தில் தீவிர தூய்மைப்பணி மற்றும் எனது குப்பைக்கு நானே பொறுப்பு என்ற பெயரில் விழிப்புணர்வு முகாம் தூரிதப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
    • சாயர்புரம் பேரூராட்சியை தூய்மையான பகுதியாக மாற்றுவோம் என பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சி சார்பில் சிவத்தையாபுரத்தில் தீவிர தூய்மைப்பணி மற்றும் எனது குப்பைக்கு நானே பொறுப்பு என்ற பெயரில் விழிப்புணர்வு முகாம் தூரிதப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி தலைமை தாங்கி மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    இதில் சாயர்புரம் பேரூராட்சி பகுதியை தூய்மையான பகுதியாக மாற்றுவோம் என பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பிரவினா சொரிமுத்துபிரதாபன், சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் அறிவாழி, ஸ்ரீவைகுண்டம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சிவத்தையாபுரம் சொரிமுத்துபிரதாபன், பேரூராட்சி மேஸ்திரி கல்யாண் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • புனித அடைக்கல அன்னை ஆலய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.
    • சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட நடுவைகுறிச்சி பகுதியில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி துணைத் தலைவர் பிரியா மேரி மற்றும் 13-வது வார்டு கவுன்சிலரும், சாயர்புரம் நகர தி.மு.க. செயலாளருமான கண்ணன், சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அறவாழி முன்னிலை வகித்தனர்.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அல்போன்ஸ் ஷா மேரி வரவேற்றார். பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×