search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலக்ட்ரீசியன்"

    • மணவாளக்குறிச்சியிலிருந்து மண்டைக்காடு நோக்கி வேகமாக வந்த கார், மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • சி.சி.டி.வி.கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மணவாளக்குறிச்சி :

    குளச்சல் அருகே உள்ள குறும்பனையை சேர்ந்தவர் டையோன்சியஸ் (வயது 48), எலக்ட்ரீசியன். இவர் தற்போது ராஜாக்கமங்கலம் அருகே காரவிளையில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் டையோன்சியஸ் காரவிளைக்கு சென்று கொண்டிருந்தார். கூட்டுமங்கலம் பகுதியில் சென்றபோது, மணவாளக்குறிச்சியிலிருந்து மண்டைக்காடு நோக்கி வேகமாக வந்த கார், மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்தில் டையோன்சியஸ் பலத்த காயம் அடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு உடையார்விளை யில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர். அப்பகுதி சி.சி.டி.வி.கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • இவரது மனைவி திருமணமான 3 மாதத்தில் பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தை வீடு அருகே உள்ள லைன் வீட்டில் வாடகைக்கு தனியாக வசித்து வந்தார்.
    • தனபாலின் குடும்பத்தினரை பற்றி கார்த்திகேயன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாராயண நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). எலக்ட்ரீசியன்.

    இவரது மனைவி திருமணமான 3 மாதத்தில் பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தை வீடு அருகே உள்ள லைன் வீட்டில் வாடகைக்கு தனியாக வசித்து வந்தார்.

    குடிப்பழக்கம் காரணமாக கார்த்திகேயன் தினமும் வீட்டிற்கு போதையில் வருவார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பரான தனபால் (45) மற்றும் சிலருடன் கார்த்திகேயன் மது குடித்துள்ளார். அப்போது தனபாலின் குடும்பத்தினரை பற்றி கார்த்திகேயன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

    போதை தலைக்கேறிய தனபாலுக்கு குடும்பத்தை இழிவாக பேசிய கார்த்திகேயன் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். அவர் வெளியே வந்ததும் குடும்பத்தினரை பற்றி இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்கும்படி கூறியுள்ளார். ஆனால், கார்த்திகேயன் மறுத்துவிட்டார்.

    இதனால் மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை போட்டுக்கொண்டனர். இதில் வீட்டு வாசலில் தடுமாறி விழுந்த கார்த்திகேயனை தனபால் கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு ஓடிவிட்டார். அப்போது கார்த்திகேயன் கதறி துடித்துள்ளார். ஆனால், போதையில் வழக்கம்போல் கூச்சல் போடுவதாக நினைத்து அருகில் வசிப்பவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து சிறிது நேரத்தில் கார்த்திகேயன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கார்த்திகேயன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் தவமணி, கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் பெயிண்டர் வேலை பார்க்கும் தனபால் உள்பட 2 பேரை பிடித்து வந்து விசாரித்து வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கட்டமரவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி எலக்ட்ரீசியன் தற்பொழுது சாமியானா பந்தல் அமைக்கும் பணி செய்துவருகிறார்.
    • குப்புச்சிபாளையத்தை சேர்ந்த மோகன்( 40) என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சுப்பிரமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கட்டமரவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (64). எலக்ட்ரீசியன் தற்பொழுது சாமியானா பந்தல் அமைக்கும் பணி செய்துவருகிறார். இந்நிலையில் சுப்பிரமணி தனது மோட்டார் சைக்கிள் மோகனூர்- பரமத்தி வேலூர் சாலையில் இரவு சுமார் 7.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பொய்யேரி அருகே உள்ள திருமணிமுத்து ஆறு பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் சாலையில் காமாட்சி நகர் செல்வதற்காக குப்புச்சிபாளையத்தை சேர்ந்த மோகன்( 40) என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சுப்பிரமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. கார் டிரைவர் மோகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சுப்பிரமணி நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைபார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி

    வைத்தனர். அங்கு சுப்பி ரமணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுப்பிர மணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி

    வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மோகன் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மோகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ரவுடி மீது கொலை முயற்சி வழக்கு
    • மதன்ராஜ் பெயர் ஏற்கனவே ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் மீனாட்சி செட்டி தெருவை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 29). இவர் பறக்கை சந்திப்பில் உள்ள டீக்கடை யில் டீ குடித்துவிட்டு அங்குள்ள கியூ.ஆர். கோடு மூலம் பணம் செலுத்தினார். அப்போது கோட்டார் பகுதியை சேர்ந்த பரிமளக்கண்ணன் என்பவருக்கும், மதன்ராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பரி மளக்கண்ணன் அவரது நண்பர்கள் பிரவீன், ஆகாஷ் ஆகியோருடன் சேர்ந்து மதன்ராஜ் வீட்டிற்கு சென்று வீட்டின் ஜன்னல் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.

    மேலும் மதன்ராஜை கம்பியால் தாக்கினார்கள். இதுகுறித்து மதன்ராஜ் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பரிமளக்கண்ணன், பிரவீன், ஆகாஷ் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கோட்டார் வாகையடி தெற்கு தெருவை சேர்ந்த ஆகாஷ் (22). இவர் கோட்டார் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறி யிருப்பதாவது:-

    நான் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறேன். என்னுடைய நண்பர்கள் பிரவீன், பரிமளக்கண்ணனுடன் பறக்கை சந்திப்பில் டீ குடித்துக் கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த மதன்ராஜ் என்பவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஆறுமுகம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மதன்ராஜ் என்னை அவதூறாக பேசியதுடன் கத்தியால் குத்தினார்.

    இதில் எனது கண் மற்றும் முதுகில் ரத்த காயம் ஏற்பட்டது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியி ருந்தார். இதன் பேரில் போலீசார் மதன்ராஜ் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதன்ராஜ் பெயர் ஏற்கனவே ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • எலக்ட்ரீசியன் மாயமானார்.
    • இன்ஸ்பெக்டர் கோட்டசாமி வழக்கு ப்பதிவு செய்து வாலிபரை தேடி வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே சின்னபெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன், எலக்ட்ரீ சியன். வேலைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் அருண் பாண்டியனின் தந்தை அழகர் கொடுத்த புகாரி ன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டசாமி வழக்கு ப்பதிவு செய்து வாலிபரை தேடி வருகிறார்.

    • போலீசார் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
    • துடியலூர் போலீசார் தலைமறைவாக இருந்த ஆல்பர்டை கைது செய்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் அருகே உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜசிம்மா (வயது 46). இவர் அந்த பகுதியில் பாத்திர கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் தனது கம்பெனியை மூடும் போது ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கல்லா பெட்டியில் வைத்து விட்டு சென்றார். மறுநாள் கம்பெனிக்கு சென்றார். அப்போது கல்லா பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து ராஜசிம்மா துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதே கம்பெனியில் கடந்த 4 ஆண்டுகளாக எலக்ட்ரிசீயனாக வேலை பார்த்து வந்த கணபதியை சேர்ந்த ஆல்பர்ட் (29) என்பவர் திருடிச் சென்றது தெரிய வந்தது. அவர் கம்பெனியை மூடும் போது உள்ளே யாருக்கும் தெரியாமல் மறைந்து கொண்டார். பின்னர் கல்லா பெட்டியை உடைத்து பணத்தை கொள்ளையடித்து பைப் வழியாக தப்பிச் சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து துடியலூர் போலீசார் தலைமறைவாக இருந்த ஆல்பர்டை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • ஜேடர் பாளையத்தில் இருந்து சோழசிராமணி நோக்கி எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
    • இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த கோபிநாத் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம், குரும்பலமகாதேவி அருகே உள்ள எலந்தகுட்டையைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கோபிநாத் (வயது 29) எலக்ட்ரீசியன். இவர் தனது நண்பர் செல்வராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஜேடர்பாளையம் சென்றார்.

    அப்போது ஜேடர் பாளையத்தில் இருந்து சோழசிராமணி நோக்கி எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது செல்வராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த கோபிநாத் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செல்வராஜ் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

    மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கோபாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை வேலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு- நசியனூர் ரோட்டில் குமார் மயங்கிய நிலையில் விழுந்து இறந்து கிடந்தார்.
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    திருபுவனம் மாவட்டம் கோதன்குளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (46) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி திருசாடை என்ற மனைவியும், தினேஷ் பிரபு, லோகேஷ் என்ற 2 மகன்களும், திவ்யதர்ஷினி என்ற ஒரு மகள் உள்ளனர்.

    குமார் நசியனூரில் உள்ள ஒரு தனியார் நிறுவ னத்தில் எலக்ட்ரீனாக பணியாற்றி வந்தார். இவர் நிறுவனத்தின் அருகேவீடு வாடகைக்கு எடுத்து தங்கி மாதம் ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று வருவார்.

    இந்த நிலையில் குமார் கடந்த மாதம் சொந்த உருக்கு சென்று விட்டு மீண்டும் நசியனூருக்கு வந்துள்ளார். அவர் தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என கூறி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று ஈரோடு- நசியனூர் ரோட்டில் குமார் மயங்கிய நிலையில் விழுந்து இறந்து கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அவரது உடலை மீட்டு ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அவரது மனைவி திருசாடைக்கு போன் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது மனைவி சம்பவ இடத்துக்கு வந்து போலீசில் புகார் கொடுத்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த லாரி ஒன்று மோகன் மீது மோதியது
    • விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள ரெட்டிவலசு பகுதியை சேர்ந்த செல்வம் மகன் மோகன் (வயது25) ,எலக்ட்ரீசியன். மோகன் நேற்று இரவு திருச்சி- கோவை ரோட்டில் வெள்ளகோவிலில் மூலனூர் ரோடு பிரிவு அருகே மோட்டர் சைக்கிளில் சென்றார்.

    அப்போது கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த லாரி ஒன்று மோகன் மீது மோதியது. உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முன்விரோதம் காரணமாக அனிஷ்குமாரை சுந்தர் சிங் மற்றும் அவரது நண்பர் முத்துபிள்ளை இருவரும் சேர்ந்து அவதூறாக பேசி கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • திருவட்டார் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே இடக்குடிவிளை, முதலார் செங்கோடி பகுதியை சேர்ந்தவர் அனிஷ் குமார் (வயது 30), எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தர்சிங் (38). இவரது நண்பர் முத்து பிள்ளை. இந்நிலையில் சுமார் 1 வருடத்திற்கு முன்பிலிருந்து அனிஷ் குமாருக்கும், சுந்தர் சிங்குக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று அனிஷ்குமார் எலக்ட்ரிக்கல் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் அவரை சுந்தர் சிங் மற்றும் அவரது நண்பர் முத்துபிள்ளை இருவரும் சேர்ந்து அவதூறாக பேசி கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதில் காயமடைந்த அனிஷ்குமார் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அனிஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் போலீசார் சுந்தர்சிங், முத்து பிள்ளை 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.திருவட்டார் போலீசார் சுந்தர்சிங், முத்து பிள்ளை 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மணவாளக்குறிச்சி பாலம் அருகில் செல்லும் போது அங்கு வந்த வேன் மோதியது.
    • மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் பாலஜெகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி பிள்ளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் கேசவதாஸ் (வயது 52).

    இவர் மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் எலக்ட்ரீசி யனாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கேசவதாஸ் அம்மாண்டி விளையிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அவர் மணவாளக்குறிச்சி பாலம் அருகில் செல்லும் போது அங்கு வந்த வேன் மோதியது. இதில் கேசவதாஸ் படுகாயமடைந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மணவாள க்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் பாலஜெகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    • தனலட்சுமி தனது கணவன் சரியான முறையில் வேலைக்கு சென்று சம்பாதிக்காமல் குடித்துவிட்டு ஊதாரித்தனம் செய்து வந்திருக்கிறார்.
    • மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டிற்கு வர மறுத்ததாக தெரிய வருகிறது.

    விழுப்புரம்:

    சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது35)இவர் சென்னையில் எலெக்ட்ரிசியன் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவரது மனைவி தனலட்சுமி தனது கணவன் யசரியான முறையில் வேலைக்கு சென்று சம்பாதிக்காமல் குடித்துவிட்டு ஊதாரித்தனம் செய்து வந்த நிலையில் ,தனது குழந்தைகள் சிவசங்கர் (14) முகேஷ்(14) சின்னா (9)ஆகியோருடன் தன் தாய் வீடான பாஞ்சாலத்தில் உள்ள ஆரோக்கியம் என்பரது வீட்டில் கடந்த 6 மாதங்களாக வந்து தங்கி வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தனலட்சுமி இவரது குழந்தைகளையும் திண்டிவனம் பகுதியில் படிக்க வைத்து வருகின்றார்.

    நேற்று முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மனைவி மற்றும் பிள்ளைகளை சென்னைக்கு அழைத்த போது அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வர மறுத்ததாக தெரிய வருகிறது. இதனால்மனம் உடைந்த முருகன் அங்குள்ள கிணறு ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் இறந்து கிடந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசுபொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரோஷனை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றார்கள்.

    ×