search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் குண்டு"

    • புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
    • தன்மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பொய்புகார் அளித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் குமரபுரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது32).

    இவர் அன்னூரில் உள்ள பேக்கரியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரில், பா.ஜ.கவை சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மேட்டுப்பாளையம் நகர பா.ஜ.க தலைவர் உமாசங்கர் ஆகியோர் தன் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டதாக தெரிவித்தார்.

    புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், விஸ்வநாதன், தன்னை பா.ஜ.கவில் சேர்த்து கொண்டு கட்சி பொறுப்பு வழங்குமாறு, பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மேட்டுப்பாளையம் நகர பா.ஜ.க தலைவர் உமாசங்கரிடம் கேட்டு வந்துள்ளார்.

    ஆனால் இவரின் நடவடிக்கை பிடிக்காததால் கட்சியில் சேர்த்து கொள்ள இவர்கள் தயக்கம் காட்டி வந்தனர். இருப்பினும் விஸ்வநாதன் இவர்களை சந்தித்து தொடர்ந்து தன்னை பா.ஜ.கவில் சேர்க்க வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் சேர்த்து கொள்ளவே இல்லை.

    இதனால் அவர்கள் இருவரையும் பழிவாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஸ்வநாதன் அங்கு ஏற்கனவே தயாராக வைத்திருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தானே தீ பற்ற வைத்து கொண்டு, காழ்புணர்ச்சி காரணமாக பா.ஜ.கவை சேர்ந்த சதீஷ்குமார், உமாசங்கர் ஆகியோர் தன்மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பொய்புகார் அளித்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் விஸ்வநாதனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் மேட்டுப்பாளையத்தில் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    • பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் படுக்கை அறையின் ஜன்னல்கள் மற்றும் சுவர்களில் தீப்பிடித்து எரிந்தது.
    • சி.சி.டி.வி கேமிரா பதிவுகளில் மர்மநபர்கள் குறித்து ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடகரையாத்தூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 50). இவரது மனைவி பூங்கொடி (40). இவர் முன்னாள் ஊராட்சி தலைவர் ஆவார்.

    இந்நிலையில் நேற்று இரவு வைத்தியநாதன் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், அவரது வீட்டிற்கு பின்பக்கமாக வந்த மர்ம நபர்கள் படுக்கை அறை மற்றும் சமையல் அறை பகுதியில் பெட்ரோல் குண்டு வீசினர்.

    குண்டு வீசிய சத்தம் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக வெளியே ஓடி வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் படுக்கை அறையின் ஜன்னல்கள் மற்றும் சுவர்களில் தீப்பிடித்து எரிந்தது. கண்ணாடி பாட்டில்களும் சுக்கு நூறாக உடைந்து கிடந்தது.

    ஜன்னல் கதவுகள் மூடியிருந்ததால் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். இதுகுறித்து வைத்தியநாதன் எடப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மற்றும் டி.எஸ்.பி கலையரசன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளில் மர்மநபர்கள் குறித்து ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த குண்டு வீச்சு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? குண்டு வீசப்பட்டதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெட்ரோல் குண்டு வீச்சில் இறந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவியை அமைச்சர் வழங்கினார்.
    • முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசன், கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    இளையான்குடி

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள இண்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவர் காரைக்குடி டாஸ்மாக் மதுபான கடையில் பணிபுரிந்தார். அப்போது கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தீக்காயமடைந்த அர்ச்சுனன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இறந்த அர்ச்சுனனின் மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அர்ச்சுனன் படத்திற்கு மாலை மரியாதை செலுத்தினார். தமிழக அரசு வழங்கிய ரூ.10 லட்சத்திற்கான காசோ லையை அர்்ச்சுனன் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

    மேலும் முதலமைச்சர் அறிவிப்பின்படி அர்ச்சுனன் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வின்போது கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜுமுதீன், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்மாறன், வெங்கட்ராமன், கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசன், கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
    • வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம், அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகி ராஜன் என்பவரது வீட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமின்றி தப்பினர்.

    தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் பெட்ரோல் குண்டு வீசியதாக எஸ்.டி.பி.ஐ அமைப்பின் சேலம் மாவட்டத் தலைவர் சையது அலி, சேலம் கிளைத் தலைவர் காதர் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோவை சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் கோர்ட் உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி பெரியசாமி தலைமையிலான போலீசார், கிச்சிபாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் சையத் அலி வீடு மற்றும் சேலம் அம்மாபேட்டையில் உள்ள சேலம் கிளை தலைவர் காதர்உசேன் ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இன்று காலை தொடங்கிய சோதனை, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • 75 சதவீத தீக்காயங்களுடன் கடந்த 2 வாரங்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் அர்ஜூனன் சிகிச்சை பெற்று வந்தார்.
    • பெட்ரோல் குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். ஆட்டோ டிரைவரான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது குடித்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    பள்ளத்தூரில் டாஸ்மாக் கடை இருப்பதால் தான் தனது தந்தை குடிப்பதாக கருதிய ராஜசேகரின் மகன் ராஜேஷ்(வயது23) என்பவர் கடந்த 3-ந்தேதி இரவு 10 மணியளவில் பள்ளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுகளை வீசினார். இந்த குண்டுகள் கடையில் வெடித்து அங்கிருந்த மதுபானங்கள், பொருட்கள் எரிந்து சேதமாகின.

    பெட்ரோல் குண்டு வீச்சின்போது கடையில் இருந்த சூப்பர்வைசர் பூமிநாதன், விற்பனையாளர் இளையான்குடி இரண்டான் குளம் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் (45) ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

    75 சதவீத தீக்காயங்களுடன் கடந்த 2 வாரங்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் அர்ஜூனன் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

    இந்நிலையில் இன்று காலை அர்ஜூனன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பள்ளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானதால் வாலிபர் ஆத்திரத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்
    • கைது செய்யப்பட்ட ராஜேஷ் ஐ.டி.ஐ. முடித்து தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சூப்பர்வைசராக பூமிநாதன் என்பவரும், இளையான்குடி இரண்டான் குளம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (வயது45) என்பவர் விற்பனையாளராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு 10மணியளவில் விற்பனை முடிந்து வசூல் பணத்தை ஊழியர்கள் சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென்று 2 பெட்ரோல் குண்டுகளை கடைக்குள் வீசினார். இதில் பயங்கர சத்தத்துடன் அவை வெடித்தது. இதில் உள்ளே இருந்த மதுபாட்டில்கள் உடைந்து தீப்பற்றி எரியத் தொடங்கின.

    இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் கடையில் இருந்த அர்ஜூனனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பூமிநாதனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் டாஸ்மாக் கடையில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனாலும் கடையில் பெரும்பாலான பகுதிகள் தீயில் கருகி சேதமாகின. இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீக்காயம் அடைந்த அர்ஜூனனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜசேகர் மகன் ராஜேஷ் (23) பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீசியதில் ராஜேசுக்கு முதுகில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. அவருக்கு போலீசார் முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ராஜேஷ் ஐ.டி.ஐ. முடித்து தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது தந்தை ராஜசேகர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு சரியாக செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மது பழக்கத்தை கைவிடு மாறு ராஜேஷ் தனது தந்தையிடம் பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை.

    பள்ளத்தூரில் டாஸ்மாக் கடை இருப்பதால் தான் தனது தந்தை அடிக்கடி மது குடித்து வருகிறார். டாஸ்மாக் கடை இல்லாவிட்டால் அவர் மது பழக்கத்தை கைவிட வாய்ப்புள்ளது என கருதிய ராஜேஷ் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இந்த தகவல்கள் போலீஸ் விசார ணையில் தெரியவந்தது. 

    • சின்ன கண்மாய் பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம் என்பவர், பிளஸ்-1 மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.
    • மணிரத்தினம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பெட்ரோல் அந்த மாணவி வீட்டின் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.

    மதுரை:

    மதுரை மேலஅனுப்பானடியில் உள்ள ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் சின்ன கண்மாய் பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம் என்பவர், பிளஸ்-1 மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இதனை அந்தப் பெண் ஏற்கவில்லை. எனவே மணிரத்தினம் தொடர்ந்து மாணவிக்கு டார்ச்சர் கொடுத்து வந்தார். எனவே அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் போலீசார் மணிரத்தினத்தை கைது செய்தனர். அதன் பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த நிலையில் மணிரத்தினம் பிளஸ்-1 மாணவியை சந்தித்து, "காதலர் தினம் அன்று நீ என் காதலை ஏற்க வேண்டும். என்னுடன் வெளியே வர வேண்டும்" என்று கூறி உள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுத்ததோடு கண்டித்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணிரத்தினம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பெட்ரோல் அந்த மாணவி வீட்டின் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மணிரத்தினம், மேலஅனுப்பானடி, வாசுகி தெரு வேல்முருகன் மகன் பார்த்தசாரதி (வயது 19), ஜெய், திலீப், ஜவகர் ஆகிய 5 பேரையும் தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்.

    • ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தையல் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றதாக கூறப்படுகிறது.
    • பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புதுப்பேட்டை திருவண்ணாமலை சாலை ராமர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 32). இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்க பிரமுகர். இவர் டிஜிட்டல் சேவா மையம் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடைக்கு அருகில் வெங்கடாசலபதி என்பவர் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடாசலபதி தனது தையல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இரவு 10.30 மணியளவில் அந்த தையல் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றதாக கூறப்படுகிறது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இது தொடர்பாக வெங்கடாசலபதிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அறிந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சந்திரசேகரும் கடைக்கு சென்று பார்த்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது தையல் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • செந்தில் நகர் பகுதி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • வெடிகுண்டு வீசுவதாக பேசிய வீடியோ பதிவு காட்சிகள், வாட்ஸ் அப்பில் வைரல் ஆகி வந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி செந்தில் நகரில் வசிப்பவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் திருமணஞ்சேரியை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் மகன்கள் வீரமணி(வயது 23) மற்றும் அன்புமணி(20). இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ந்தேதி, நீலகிரி மாவட்டம் மசனகுடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் என்பவரின் மகன் பூபாலகிருஷ்ணன் கோவையில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற போது அவரை வழிமறித்து, ரூ.20 ஆயிரம்,செல்போன் ஆகியவற்றை வீரமணி, அன்புமணி, மேலும் 2 கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறி செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளனர். இந்த நிலையில், செந்தில் நகர் பகுதியில் இவர்களால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தில் நகர் பகுதி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், புகார் அளித்தவர்களை கொலை செய்வதாகவும், போலீஸ் நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசுவதாகவும் இவர்கள் பேசிய வீடியோ பதிவு காட்சிகள், வாட்ஸ் அப்பில் வைரல் ஆகி வந்தது. இதையடுத்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
    • போலீஸ் துணை சூப்பிரண்டு பேட்டி

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு அருகே கருமங்கூடலை சேர்ந்தவர் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் (வயது 55). கடந்த மாதம் 25-ந் தேதி இரவு இவரது வீட்டுமுன்பு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் 2 பெட்ரோல் வெடி குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர்.

    இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.ஜன்னல் அருகே போடப்பட்டிருந்த சோபா செட்டின் பிளாஸ்டிக் கவர் எரிந்து கருகியது.ஜன்னல் கீழ் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் எரிந்து சேதமடைந்தது. குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி குளச்சல் இலப்பைவிளை பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்ற ஷமில்கான் (27) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் கோர்ட் அனுமதி பெற்று நேற்று குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையி லான போலீசார் இலப்பை விளையில் உள்ள முஸ்ஸாமில் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் போலீசார் அவரது வீட்டிலிருந்து ஒரு லேப்டாப் மற்றும் செல்போன் சிம் கார்டு உள்பட ஆவணங்களை எடுத்து சென்றனர்.

    சோதனையின்போது குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்து பாண்டி, மணவாளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராஜஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.சோதனைகள் அனைத் தும் வீடியோவில் பதிவுச்செய்யப் பட்டது. இந்த திடீர் சோதனையின்போது அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.தகவலறிந்து பொதுமக்களும் முஸ்ஸாமில் வீட்டு முன் திரண்டனர்.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    சோதனை முடிந்து வெளியே வந்த டி.எஸ்.பி. தங்கராமனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது சோதனை அறி க்கைகள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்' என கூறினார். மேலும் தலைமறைவாகியுள்ள மணவாளக்குறிச்சி பகு தியை சேர்ந்த ஆறான்வி ளை முகம்மது ராபின், ஆண்டார்விளை ஆதிலி மான் இவர்களின் வீடுகளிலும் குளச்சல் போலீஸ் டி.எஸ்.பி தங்கராமன் தலைமையில் சோதனை நடந்தது.

    • பாஜக கோட்டப் பொறுப்பாளராகப் பொறுப்பு வகித்து வருபவா் பாலகுமாா் இவா் வாடகை வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகக் குடியிருந்து வந்துள்ளாா்
    • மா்ம நபா்கள் கடந்த சனிக்கிழமை இரவு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு மாயமாகினர்

    திருப்பூர் :

    பாஜக கோட்டப் பொறுப்பாளராகப் பொறுப்பு வகித்து வருபவா் பாலகுமாா். இவா் அங்கேரிபாளையம் ஏவிபி லே அவுட் 3 ஆவது வீதியில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகக் குடியிருந்து வந்துள்ளாா். அதன் பின்னா் வேறு பகுதிக்கு குடிபெயா்ந்துள்ளாா். இதனிடையே, பாலகுமாா் முன்பு குடியிருந்த வீட்டின் மீது மா்ம நபா்கள் கடந்த சனிக்கிழமை இரவு பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மாயமாகினர்எனினும் குண்டை பற்றவைக்காமல் வீசியதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.இது குறித்து வீட்டின் உரிமையாளா் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பா்பாளையம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று சையது இப்ராஹீம் 20, கேரளாவை சேர்ந்த பெரோஸ் காண் 32 ஆகிய இருவர் கைதாகி உள்ளனர் அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • ராஜ்குமார் என்பவரது வீட்டில் மற்றும் வீட்டின் முன்புறம் உள்ள கடையில் பிரவீன் மற்றும் மணிமாறன் பெட்ரோல் குண்டு வீசினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீன் மற்றும் மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    விழுப்புரம்:

    திண்டிவனம் ரோசனை முனியன் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (எ) பிரவீன் (வயது 29) அதே பகுதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (எ) மணிமாறன். இவர்கள் இருவருக்கும் ரோசனை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாருக்கும் இடையே முன் விரோத தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 28-ம் தேதி ராஜ்குமார் என்பவரது வீட்டில் மற்றும் வீட்டின் முன்புறம் உள்ள கடையில் பிரவீன் மற்றும் மணிமாறன் பெட்ரோல் குண்டு வீசினர்.

    இதனால் ராஜ்குமார் ரோசனை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீன் மற்றும் மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட எஸ் பி ஸ்ரீநாதா பெட்ரோல் குண்டு வீச்சில் கைது செய்ய ப்பட்ட பிரவீன் மற்றும் மணிமாறனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் பிரவீன் மற்றும் மணிமாறனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடை த்தனர்.

    ×