search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனையாளர்"

    • ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் 10 ரூபாய் வரையில் கூடுதலாக விற்பனையாளர்கள் வசூல் செய்வதும் தொடர்கிறது.
    • விற்பனையாளர்கள் முதல் அதிகாரிகள் வரை மறைமுகமாக பண வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகள் மூலமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 5,300 கடைகள் மூலமாக விதவிதமான மது வகைகள் விற்பனை செய்ய 23 ஆயிரம் விற்பனையாளர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    பண்டிகை காலங்கள் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு 44 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு அதனை 46 ஆயிரம் கோடியாக ஆக உயர்த்துவதற்கு திட்டமிட்டு மது விற்பனை சுறு சுறுப்பாக நடைபெற்று வருகிறது.

    10 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை அளவுக்கு ஏற்ப மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் 10 ரூபாய் வரையில் கூடுதலாக விற்பனையாளர்கள் வசூல் செய்வதும் தொடர்கிறது.

    இதனை தடுப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மதுக்கடைகள் முன்பு விலை பட்டியல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டது. ஆனால் பெரும்பாலான கடைகளில் அதனை அமல்படுத்தாமல் உள்ளனர். விற்பனையாளர்கள் வழக்கம் போல 10 ரூபாயை கூடுதலாக ஒவ்வொரு பாட்டிலுக்கும் வசூலித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டிலை மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்வதாக குடிமகன்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரைபாட்டில் மதுபானத்தை கேட்டால் அதற்கு பதிலாக இரண்டு குவார்ட்டர் பாட்டி லை தருவதாக அவர்கள் கூறியுள்ளனர். 2 குவார்ட்டர் மது பாட்டிலை கொடுத்தால் ஒரு பாட்டிலுக்கு பத்து வீதம் 20 ரூபாய் வசூலிக்கலாம். ஆனால் அரை பாட்டில் மதுபானத்தை கொடுத்தால் பாட்டிலுக்கு ரூ.10 மட்டுமே வசூலிக்க முடியும் என்றும் மது பிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாகவே குவார்ட்டர் பாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு மறைமுகமாக விற்பனையாளர்கள் வருவாயை ஈட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இப்படி டாஸ்மாக் மதுக் கடைகளில் குவார்ட்டர் மது பாட்டில்கள் 70 சதவீதம் அளவுக்கு விற்பனையாகுவதாகவும் அரை பாட்டில் மதுபானங்கள் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இது தொடர்பாக மது பிரியர்கள் சிலர் கூறும் போது:-

    டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலான நேரங்களில் அரை பாட்டில் மதுபானங்களை விற்பனையாளர்கள் தருவதில்லை. 2 குவார்ட்டர் பாட்டிலை மட்டுமே கொடுத்துவிட்டு ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் 20 ரூபாய் வசூலித்து விடுகிறார்கள்.

    இதன் மூலம் விற்பனையாளர்கள் முதல் அதிகாரிகள் வரை மறைமுகமாக பண வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரிவித்தனர். இந்த புகார் தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்ட போது,

    "மது பாட்டில்களை கூடு தல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதற்காகவே கடைகளின் முன்பு விலை பட்டியலை வைப்பதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கூடுதலாக விற்பனை செய்யும் விற்பனை யாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

    எனவே மது வாங்கும் குடிமகன்கள் விலை பட்டியலை பார்த்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தை மட்டுமே கொடுத்தால் போதும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    ஆனால் இது போன்ற உத்தரவுகள் டாஸ்மாக் கடைகளில் எப்போதுமே காற்றில் பறப்பதாகவே இருந்து வருகிறது.

    கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை தடுக்கவும் அதிக அளவில் சப்ளை செய்யவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மது பிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • டாஸ்மாக் மதுக்கடையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
    • அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரை யொருவர் தாக்கிக்கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே வையப்பமலையில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் கடையில் இருந்தபோது மல்லசமுத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (45) என்பவர் வந்து மது வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை சிவக்குமார் கேட்டபோது என்னிடம் பணம் இல்லை, ஏ.டி.எம். கார்டு தான் உள்ளது, மிஷினில் ஸ்வைப் செய்து பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு செந்தில்குமார் தெரிவித் துள்ளார். அதற்கு விற்பனை யாளர் ஸ்வைப்பிங் மிஷின் பழுதடைந்துள்ளதால் பணமாக கொடுக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரை யொருவர் தாக்கிக்கொண்ட னர். திடீரென செந்தில்கு மார் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து டாஸ்மாக் விற்பனையாளர் சிவக்குமார் தலையில் தாக்கினார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து அவர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறி செந்தில்குமாரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வழக்குப்பதிவு

    இது குறித்த புகாரின்பேரில் எலச்சிப்பா ளையம் ேபாலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
    • டாஸ்மாக் சில்லறை விற்பனை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மயிலாடுதுறை:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்யப்படும் சம்பவம் அரங்கேறி வந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

    இந்த நிலையில் மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி ஆக்கூர் முக்கூட்டில் இயங்கிவரும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

    அதனையடுத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மோசடி நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் கண்டுபிடிப்பதற்கான விதித்தொகுப்பு 2014ன் கீழ் அரசு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஆக்கூர் டாஸ்மாக் கடை உதவி விற்பனையாளர் ரவிச்சந்திரனை சஸ்பெண்டு செய்து நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    • அந்த வழியாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • பலியான வெங்கடேசனுக்கு சிந்து என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் ராஜாவூர் அருகே உள கோழிக்கொண்டு பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் வெங்டேசன் (வயது 46).

    இவர், கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர் கடையை அடைத்ததும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் வீட்டுக்குச் செல்லாமல், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூர் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். நேற்று இரவு முப்பந்தல் பேரிகார்டு அருகே வெங்கடேசன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். பலியான வெங்கடேசனுக்கு சிந்து என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    • தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானதால் வாலிபர் ஆத்திரத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்
    • கைது செய்யப்பட்ட ராஜேஷ் ஐ.டி.ஐ. முடித்து தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சூப்பர்வைசராக பூமிநாதன் என்பவரும், இளையான்குடி இரண்டான் குளம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (வயது45) என்பவர் விற்பனையாளராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு 10மணியளவில் விற்பனை முடிந்து வசூல் பணத்தை ஊழியர்கள் சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென்று 2 பெட்ரோல் குண்டுகளை கடைக்குள் வீசினார். இதில் பயங்கர சத்தத்துடன் அவை வெடித்தது. இதில் உள்ளே இருந்த மதுபாட்டில்கள் உடைந்து தீப்பற்றி எரியத் தொடங்கின.

    இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் கடையில் இருந்த அர்ஜூனனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பூமிநாதனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் டாஸ்மாக் கடையில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனாலும் கடையில் பெரும்பாலான பகுதிகள் தீயில் கருகி சேதமாகின. இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீக்காயம் அடைந்த அர்ஜூனனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜசேகர் மகன் ராஜேஷ் (23) பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீசியதில் ராஜேசுக்கு முதுகில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. அவருக்கு போலீசார் முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ராஜேஷ் ஐ.டி.ஐ. முடித்து தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது தந்தை ராஜசேகர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு சரியாக செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மது பழக்கத்தை கைவிடு மாறு ராஜேஷ் தனது தந்தையிடம் பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை.

    பள்ளத்தூரில் டாஸ்மாக் கடை இருப்பதால் தான் தனது தந்தை அடிக்கடி மது குடித்து வருகிறார். டாஸ்மாக் கடை இல்லாவிட்டால் அவர் மது பழக்கத்தை கைவிட வாய்ப்புள்ளது என கருதிய ராஜேஷ் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இந்த தகவல்கள் போலீஸ் விசார ணையில் தெரியவந்தது. 

    • முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் மனு அனுப்பியுள்ளனர்.
    • 4 மாத காலமாக திருப்பூர் மாவட்டத்தில் முத்திரைத்தாள் கிடைப்பதில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் முத்திரைத்தாள் கிடைப்பதில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் மனு அனுப்பியுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் சங்கத்தினர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:- முத்திரைத்தாள் சங்கத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கு போதிய அளவு முத்திரைத்தாள் விற்பனைக்கு கிடைப்பதில்லை. தமிழகம் முழுவதும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்நிலையில் உள்ளனர். கடந்த 4 மாத காலமாக திருப்பூர் மாவட்டத்தில் முத்திரைத்தாள் கிடைப்பதில்லை. மாவட்டத்தில் 160 முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் உள்ளனர். இவை கிடைக்க பெறாத சூழ்நிலையில் இ-ஸ்டாம்ப் மூலம் தொகை செலுத்தி ஆவணத்தை பதிவு செய்து கொள்ள மக்கள் அலுவலகம் செல்கின்றனர்.

    ஆனால் இ-ஸ்டாம்பையும் பயன்படுத்தாமல் முத்திரைத்தாள்களுக்கு உண்டான தொகையை காசோலையாக செலுத்தி பத்திரத்தை பதிவு செய்கின்றனர். எனவே போதிய அளவு முத்திரைத்தாள் கிடைக்க பெற வேண்டியும் இ-ஸ்டாம்ப் மூலம் கட்டாயம் பணத்தை செலுத்தி ஆவணங்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை
    • குமரி மாவட்டத்தில் நெல், தென்னை, ரப்பர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் நெல், தென்னை, ரப்பர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரு கிறது. இதற்கு தேவைப்படும் மானிய உரங்களான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் கூட்டு றவு சங்கங்கள் மூலமாக விவசா யிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது .

    விவசாயிகளுக்கு தர மான உரம் தங்கு தடை யின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உர விற்பனை யாளர்கள் தங்கள் உர உரிமத்துடன் தங்களுக்கு உரம் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் பெறப்பட்ட"0" படிவங்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும் . " O " படிவங்களை இணைக்கா மல் உரம் விற்பனை செய்வது உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985 - ன்படி கடும் விதி மீறலாகும் .

    மேலும் , உர விற்பனையா ளர்கள் அரசு நிர்ணயம் செய்துள்ள விலைக்கு மிகா மல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் . மானிய உரங்களை கண்டிப்பாக விற்பனை முனைய எந்திர த்தின் ( பி.ஒ.எஸ் ) மூலம் விவசாயிகளின் ஆதார் அட்டையை பயன்படுத்தி விற்பனை செய்ய வேண்டும்.

    யூரியா விற்பனை செய்யு ம்பொழுது விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது . மேலும் , உர விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள உர இருப்பையும் , விலையையும் விலை விபர பலகை எழுதி கடைக்கு முன்பாக வாங்கு பவர்களின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.

    உரங்களை வைத்துக் கொண்டு விவசாயி களுக்கு இல்லை என்று தெரிவிக்க கூடாது . மேலும் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985 - க்கு முரணாக செயல்படும் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்களின் உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் மீது சட்ட நட வடிக்கை தொரடப்படும் . விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரம் குறித்த தங்கள் புகார்களை தெரிவிக்க வட்டாரத்தின் பெயர் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குந ர்களின் அலைபேசி அகஸ்தீஸ்வரம் -9443700807 ராஜாக்கமங்கலம் -9442136046 , தோவாளை -9443283954 , திருவட்டார் குருந்தன்கோடு -9442151397 , கோழிப்போர்விளை -9442151397 . 9500982980 , மேல்புறம் -9500982980 , கிள்ளியூர் -8610003288 , முஞ்சிறை -8610003288 . மாவட்ட அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் ( தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு ) மற்றும் வேளாண்மை அலுவலர் ( தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு ) - 9443003044 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தரமான விதைகளை வழங்கும் நோக்கில் விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை செயல்படுகிறது.
    • தரமான விதைகளை கொள்முதல் செய்து உரிய ஆவணங்களுடன் விற்பனை செய்ய வேண்டும்.

    உடுமலை :

    விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை சார்பில் விதை விற்பனையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி உடுமலையில் நடந்தது. உடுமலை, பொள்ளாச்சி பகுதி விதை விற்பனையாளர்கள், விதை ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இதில் விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் பேசியதாவது:- விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்கும் நோக்கில் விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை செயல்படுகிறது. தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் சாகுபடி செய்ய தரமான விதைகளை வினியோகம் செய்ய வேண்டும்.விவசாயிகள் பயிரிடும் ரகத்திற்கு ஏற்ப, தரமான விதைகளை கொள்முதல் செய்து உரிய ஆவணங்களுடன் விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு பயிர் ரகத்திற்கும் கண்டிப்பாக பதிவெண் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    காலாவதி நிலையிலுள்ள பதிவெண் சான்றிதழ்கள் புதுப்பித்த பிறகே விற்பனை செய்வதோடு அனைத்து விதைக்குவியல்களுக்கும் தனித்தனியாக முளைப்புத்திறன் அறிக்கை பெற்றிருக்க வேண்டும்.விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் விற்பனை நிலையத்தில் வாங்குவதற்கு ஏதுவாக உழவர் செயலியில் விதை விபரங்கள், ஸ்பேக்ஸ் மென்பொருள் இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் விற்பனையாளர்கள் விதை இருப்பு, விற்பனை விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.விதைச்சட்டத்தின் கீழ் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி தேதி, பயிர் செய்யும் பருவம் உள்ளிட்ட 14 வகையான விபரங்கள் அச்சிடப்பட்ட விதை பாக்கெட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    விதை விற்பனை பதிவேடு, கொள்முதல் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம் பராமரிக்க வேண்டும்.விவசாயிகள், விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதை வாங்க வேண்டும். அப்போது தகுந்த பருவத்திற்கு ஏற்றதா, என்பதை உறுதி செய்தும், விற்பனை ரசீதில் கையெழுத்து இட்டு வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    • 39 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • பொருளின் நிகர எடை, தயாரிப்பு தேதி ஆகியவை அச்சிடப்பட வேண்டும்.

    திருப்பூர் :

    சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் பதிவுச்சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவர்கள், இறக்குமதியாளர்களை கூட்டாய்வு செய்யவும், அறிவிக்கை இல்லாமல் பொட்டலப்பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாகவும் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் இணைந்து மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    39 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 8 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் (பொட்டலப்பொருட்கள் விதிகள்) ஒரு பொருள் விற்பனை செய்யப்படும்போது பொட்டலத்தின் மேல் உறையில் இறக்குமதி செய்யப்பட்ட பொட்டலப்பொருளில், இறக்குமதியாளர், பொட்டலமிடுபவர், முழுமுகவரி, பொருளின் நிகர எடை, தயாரிப்பு தேதி ஆகியவை அச்சிடப்பட வேண்டும்.

    மேற்படி விவரங்கள் அச்சிடப்படாமல் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் சரக விற்பனையாளர்கள் 200 பேர் கலந்து கொண்டனர்.
    • முழு உடல் பரிசோதனை மற்றும் எக்கோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கூட்டுறவுத்துறை, ரோட்டரி திருப்பூர் காந்திநகர் சங்கம், ரேவதி மெடிக்கல் சென்டர் - அறக்கட்டளை, லோட்டஸ் கண் மருத்துவமனை , பி.ஆர்.எஸ். பல் ஆஸ்பத்திரி சார்பில் திருப்பூர் சரக நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு உடற்பரிசோதனை மருத்துவ முகாம் திருப்பூர் காந்திநகர் ரோட்டரி சங்கத்தில் நடைபெற்றது. திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் முகாமினை துவக்கி வைத்தார். திருப்பூர் சரக விற்பனையாளர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் எக்கோ உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் முகாமில் கொரோனா தடுப்பூசி ,பூஸ்டர் ஊசிகள் விற்பனையாளர்களுக்கு செலுத்தப்பட்டது.

    துணைப்பதிவாளர்கள் பழனிசாமி,முருகேசன் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் ரேட்டரி சங்கத்தலைவர் நித்தியானந்தம், செயலாளர் வெங்கடேஸ், ரேவதி மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குநர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×