search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்திரைத்தாள்"

    • பொன்னேரியில் முத்திரைத்தாள் குறைவு கட்டணம் வருவாய் வசூல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • முத்திரைத்தாள் குறைவு கட்டணத்தை செலுத்தி உடனடியாக பத்திரத்தை மீட்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரியில் முத்திரைத்தாள் குறைவு கட்டணம் வருவாய் வசூல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் முத்திரைத்தாள் குறைவு கட்டணத்தை செலுத்தி உடனடியாக பத்திரத்தை மீட்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் ஒரே நாளில் 251 பேர் முத்திரைத்தாள் குறைவு கட்டணத்தை செலுத்தினர். இதன்மூலம் ரூ.81 லட்சத்து 18 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாரதா ருக்மணி, துணைப்பதிவு தலைவர் சேகர், முத்திரைதாளுக்கான சிறப்பு தனி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், பொன்னேரி சார் பதிவாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் மனு அனுப்பியுள்ளனர்.
    • 4 மாத காலமாக திருப்பூர் மாவட்டத்தில் முத்திரைத்தாள் கிடைப்பதில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் முத்திரைத்தாள் கிடைப்பதில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் மனு அனுப்பியுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் சங்கத்தினர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:- முத்திரைத்தாள் சங்கத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கு போதிய அளவு முத்திரைத்தாள் விற்பனைக்கு கிடைப்பதில்லை. தமிழகம் முழுவதும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்நிலையில் உள்ளனர். கடந்த 4 மாத காலமாக திருப்பூர் மாவட்டத்தில் முத்திரைத்தாள் கிடைப்பதில்லை. மாவட்டத்தில் 160 முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் உள்ளனர். இவை கிடைக்க பெறாத சூழ்நிலையில் இ-ஸ்டாம்ப் மூலம் தொகை செலுத்தி ஆவணத்தை பதிவு செய்து கொள்ள மக்கள் அலுவலகம் செல்கின்றனர்.

    ஆனால் இ-ஸ்டாம்பையும் பயன்படுத்தாமல் முத்திரைத்தாள்களுக்கு உண்டான தொகையை காசோலையாக செலுத்தி பத்திரத்தை பதிவு செய்கின்றனர். எனவே போதிய அளவு முத்திரைத்தாள் கிடைக்க பெற வேண்டியும் இ-ஸ்டாம்ப் மூலம் கட்டாயம் பணத்தை செலுத்தி ஆவணங்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முத்திரைத்தாள் விற்கப்படுகிறது.
    • இ-ஸ்டாம்பிங் என்ற மின்னணு முத்திரைதாள் கட்டணத்தை செலுத்தும் முறையும் அமலில் உள்ளது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் பதிவு துறையின் கீழ், 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பதிவுத்துறை அலுவலகத்தில் சொத்து கிரயம் செய்வதற்கு 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் ஆகிய மதிப்புள்ள முத்திரைத்தாள் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் (ஸ்டாம்ப் வெண்டர்) மூலம் முத்திரைத்தாள் விற்கப்படுகிறது.

    கடந்த ஓராண்டாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய 5 ஆயிரம் முதல், 25 ஆயிரம் மதிப்புள்ள முத்திரைதாள் வரை தட்டுப்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது.பத்திரப்பதிவு முறைகளின் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க, இ-ஸ்டாம்பிங் என்ற மின்னணு முத்திரைதாள் கட்டணத்தை செலுத்தும் முறையும் அமலில் உள்ளது. இந்த புதிய முறையை மக்கள் முழுமையாக பயன்படுத்த முன்வருவதில்லை. இதனால் முத்திரைத்தாளையே அதிகம் கேட்கின்றனர். அவர்களுக்கு, வழங்கும் அளவுக்கு இல்லாமல் தட்டுப்பாடு தொடர்கிறது.

    இது குறித்து முத்திரைத்தாள் விற்பனையாளர் சங்க தலைவர் கூறுகையில், ஐந்தாயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை உள்ள முத்திரைதாள் கடந்த சில மாதங்களாக விற்பனையாளர்களுக்கு வழங்குவதில்லை. சார்நிலை கருவூலத்தில் கேட்டால் நாசிக் நகரிலிருந்து வரவில்லை என்று கூறுகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு அதிக மதிப்புள்ள முத்திரைதாள் தேவைப்படுகிறது. தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    அதிகாரிகள் கூறுகையில், அதிக மதிப்புள்ள தொகைக்கான முத்திரை தாள்களின் தேவைக்கு ஏற்ப பிற மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டு மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. ரூபாய், 10 முதல் 5 ஆயிரம் மதிப்புள்ள வரை முத்திரை தாள் கிடைக்கிறது. அதிக மதிப்புள்ள தொகைக்கான முத்திரை தாள் சென்னையில் இருந்து வருவதில்லை. எந்த பகுதியில் தேவைப்படுகிறது என்பது குறித்து விசாரிக்கிறோம் .முத்திரை தாள் இல்லையென்றாலும் கூட, குறைந்த மதிப்பிலான முத்திரை தாளை முதல்பக்கத்தில் மட்டும் வைத்து விட்டு மீதமுள்ள தொகைக்கு ஆன் லைன் மூலம் செலுத்தலாம். இ-ஸ்டாம்பிங் முறையை மக்கள் தாராளமாக பயன்படுத்தலாம் என்றார்.

    ×