search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் ஊழியர்"

    • அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று Good Touch Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • அப்போது 4 சிறுமிகள், தலைமை ஆசிரியரிடம் சென்று, வீட்டின் அருகே விளையாடும் போது, ஒருவர் Bad Touch செய்ததாக கூறியுள்ளனர்.

    தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் காட்டுராஜா என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடும் 9 வயது சிறுமிகள் 3 பேர் மற்றும் 8 வயது சிறுமி ஆகியோருக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து, அவரது வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதை அடுத்து போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    புளியங்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று Good Touch Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் தலைமை ஆசிரியர், பள்ளி குழந்தைகளிடம் உங்களது உடலில் உங்களது வீட்டு நபர்களை தவிர யாராவது உங்கள் உடலில் கை வைத்தால் பள்ளியிலோ, அல்லது வீட்டில் உள்ள பெற்றோர்களிடமோ உடனே தகவல் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    அப்போது 4 சிறுமிகள், தலைமை ஆசிரியரிடம் சென்று, வீட்டின் அருகே விளையாடும் போது, ஒருவர் Bad Touch செய்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் தகவல் கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து நான்கு குழந்தைகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் டாஸ்மாக் ஊழியரான காட்டு ராஜாவை (48) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மோகனூர் சர்க்கரை ஆலை வண்டிக்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக கடந்த 4 வருடமாக வேலை பார்த்து வந்தார்.
    • மோகனூர் -பரமத்தி வேலூர் சாலையில் உள்ள வண்டிகேட் பகுதியில் சாலை ஓரமாக மின் விளக்கும் எரியாமல் இருளில் நின்று கொண்டிருந்த லாரி மீது பாலசுப்ரமணி ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுப்புத்தெரு பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணி (வயது 39). இவர் மோகனூர் சர்க்கரை ஆலை வண்டிக்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக கடந்த 4 வருடமாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று டாஸ்மாக் கடைக்கு வேலைக்கு சென்று வருவதாக தனது மனைவி சக்தியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். வேலை முடிந்து இரவு 11.30 மணி அளவில் பாலசுப்பிரமணி மற்றும் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சக்திவேல், மற்றொரு விற்பனையாளர் ராமசாமி ஆகியோர் தனித்த னியாக ேமாட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மோகனூர் -பரமத்தி வேலூர் சாலையில் உள்ள வண்டிகேட் பகுதியில் சாலை ஓரமாக மின் விளக்கும் எரியாமல் இருளில் நின்று கொண்டிருந்த லாரி மீது பாலசுப்ரமணி ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

    அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணி உயிரிழந்தார்.

    இது குறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 21 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.
    • பண்டிகை நாட்களில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் எத்தனை சதவீதம் வழங்க வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தை சென்னையில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

    தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 21 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.

    தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர் முன்னேற்ற சங்கம், டாஸ்மாக் தொழிலாளர் அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் நிரந்தர பணியாளர் சங்கம், விற்பனையாளர்கள் சங்கம் உள்பட 21 தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்றன.

    இதில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) பொதுச்செயலாளர் தனசேகரன் கொடுத்திருந்த கோரிக்கையில், டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும் 20 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    அது மட்டுமின்றி பண்டிகை நாட்களில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதேபோல் ஒவ்வொரு சங்க பிரதிநிதிகளும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    இவற்றை அமைச்சர் முத்துசாமி பெற்றுக் கொண்டு, ஒவ்வொரு சங்கங்களின் கோரிக்கையையும் கவனமுடன் பரிசீலித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று போனஸ் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

    • மதுபானம் விற்பனையில் சரியாக கணக்கு காட்டாமல் இருந்ததால் அவரை தேனியில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.
    • காளியம்மன் கோவில் தெருவில் தனது மாமியார் வீட்டின் அருகில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (48). இவர் தேவதானப்பட்டி பைபாஸ் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார்.

    மதுபானம் விற்பனையில் சரியாக கணக்கு காட்டாமல் இருந்ததால் அவரை தேனியில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். அதன்படி தேனிக்கு செல்வதாக தனது வீட்டில் கூறிச்சென்றவர் காளியம்மன் கோவில் தெருவில் தனது மாமியார் வீட்டின் அருகில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபால கிருஷ்ணன் மீது பாய்ந்து அரிவாளால் வெட்டி பணத்தை பறிக்க முயற்சித்தார்.
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே உள்ள இரும்பிலி பொட்டல் கரையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 53), டாஸ்மாக் ஊழியர். இவர் கடந்த 8-ந் தேதி இரவு டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு பணத்துடன் வீட்டிற்கு சென்றார். வீட்டின் அருகே சென்ற போது இருளில் பதுங்கியி ருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கோபால கிருஷ்ணன் மீது பாய்ந்து அரிவாளால் வெட்டி பணத்தை பறிக்க முயற்சித்தார்.

    ஆனால் கோபால கிருஷ்ணன் அவனுடன் போராடியதால் வசூல் பணம் ரூ.6.55 லட்சம் தப்பியது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தொடர்புடையதாக மேற்கு நெய்யூர் சரலை சேர்ந்த அருள் சஜு (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்ப டுத்தப்பட்டார்.

    • போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் தீவிர விசாரணை
    • பணம் பறிப்பு சம்பவம் திட்டமிட்டு நடந்ததா? அதில் ஈடுபட்டது யார்? என்பது மர்மமாக உள்ளது

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே உள்ள இரும்பிலி பொட்டல் கரையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 53), டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர். இவர் தினமும் இரவில் விற்பனை பணத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று மறுநாள் காலை வங்கியில் செலுத்துவது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு கோபாலகிருஷ்ணன், சக ஊழியர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றார். வீட்டின் அருகே இறங்கிய அவர், அங்கிருந்து நடந்து சென்றார். அப்போது இருளில் அவரை தாக்கி விட்டு யாரோ பணத்தை பறிக்க முயன்றதாக போலீசில் புகார் செய்யப் பட்டது.

    இந்த சம்பவத்தின் போது, கோபாலகிருஷ்ணன் கைவிரல் துண்டானதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிங்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகங்களில் மனுவும் அளிக்கப்பட்டது.

    பணம் பறிப்பு சம்பவம் திட்டமிட்டு நடந்ததா? அதில் ஈடுபட்டது யார்? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது, அவர்கள் பணம் பறிக்க முயன்றவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கலெக்டரிடம் மனு

    நாகர்கோவில், ஜூலை.10-

    குளச்சல் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வை யாளராக இருப்பவர் கோபால கிருஷ்ணன். இவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போது, அவரிடம் இருந்த பணத்தை கொள்ளை அடிப்பதற்காக மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் நடேசன் தலைமை யில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குளச்சல் டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வை யாளர் கோபாலகிருஷ்ணன் பணி முடிந்து வீடு செல்லும் வழியில் மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதில் அவரது கைகள் வெட்டப்பட்டு விரல் துண்டிக்கப்பட்டது. தலையி லும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. எனவே கோபாலகிருஷ்ணன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும்.

    மேலும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தாக்குதலுக்குள்ளான கோபாலகிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர் முன்னேற்ற சங்க (தொ.மு.ச.) மாவட்ட தலைவர் மரிய செல்வன் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில், குளச்சல் மதுக்கடை மேற்பார்வையாளர் கோபால கிருஷ்ணனை தாக்கிய மர்ம நபர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    • வாக்குவாதம் முற்றவே, டாஸ்மாக் ஊழியர், மதுபாட்டில் வாங்க வந்த நபரை, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
    • அந்த நபர் நான் எதற்கு கூடுதலாக பணம் தர வேண்டும் என கேட்டு ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அரவேணு:

    கோத்தகிரி அருகே குன்னூர், ஊட்டி செல்லும் சாலை கட்டபெட்டு சந்திப்பில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த கடையில் அதிகாலை நேரங்களில் மதுக்கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    நாள்தோறும் இந்த கடைக்கு 100க்கும் மேற்பட்டோர் வந்து மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஒருவர் மதுபான கடைக்கு வந்தார்.

    பின்னர் மதுபாட்டில்களை வாங்கினார். அப்போது அங்கு பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியர், கூடுதல் விலையாக ரூ.10 தர வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.

    ஆனால் அந்த நபர் நான் எதற்கு கூடுதலாக பணம் தர வேண்டும் என கேட்டு ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    வாக்குவாதம் முற்றவே, டாஸ்மாக் ஊழியர், மதுபாட்டில் வாங்க வந்த நபரை, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    மது பாட்டில் வாங்க வந்த வாடிக்கையாளரை டாஸ்மாக் ஊழியர் தகாத வார்த்தையால் திட்டிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெட்ரோல் குண்டு வீச்சில் இறந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவியை அமைச்சர் வழங்கினார்.
    • முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசன், கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    இளையான்குடி

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள இண்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவர் காரைக்குடி டாஸ்மாக் மதுபான கடையில் பணிபுரிந்தார். அப்போது கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தீக்காயமடைந்த அர்ச்சுனன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இறந்த அர்ச்சுனனின் மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அர்ச்சுனன் படத்திற்கு மாலை மரியாதை செலுத்தினார். தமிழக அரசு வழங்கிய ரூ.10 லட்சத்திற்கான காசோ லையை அர்்ச்சுனன் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

    மேலும் முதலமைச்சர் அறிவிப்பின்படி அர்ச்சுனன் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வின்போது கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜுமுதீன், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்மாறன், வெங்கட்ராமன், கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசன், கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • சர்க்கரை மாத்திரையை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்ப டுகிறது.
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் தோமஸ் இவர் டாஸ்மார்க் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளன. பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. தோமஸ் அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இவர் மது அருந்தி விட்டு சரிவர வேலைக்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது. இவருக்கு சர்க்கரை நோய் இருந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று தோமஸ் அதிகமாக மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தனது அறையில் சென்று கதவை பூட்டி உள்ளார்.நீண்ட நேரமாகியும் தோமஸ் அறையை விட்டு வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த மனைவி அறை கதவை திறந்து பார்த்த போது தோமஸ் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். தோமஸ் சர்க்கரை மாத்திரையை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்ப டுகிறது. மனைவி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் தோமஸை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் இறந்தார்.

    இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விருத்தாசலம் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்தனர்.
    • காயமடைந்த அசோகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள நடியப்பட்டு கிராமத்தில் உள்ள டாஸ்மாக்கில் அசோகன் (51) என்றவர் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு டாஸ்மாக்கில் வசூலான ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.  அப்போது அவர் புதுப்பேட்டை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது இரு மர்ம நபர்கள் அவரை உருட்டு கட்டையால் தாக்கி அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த அசோகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆலடி போலீசார் சந்தேகத்திற்கிடமான 2 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்

    ×