search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Muthuswamy"

    • மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • முதலமைச்சர் வருகையை முன்னிட்டு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. குறிப்பாக மாநாடு நடைபெறும் திடலுக்கு தினமும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

    இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் மாநாடு நடைபெறும் இடத்தை தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.

    தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக அவர் வருகிற 20-ந் தேதி மாலை விமானம் மூலம் சேலம் வருகிறார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். முதலமைச்சர் சேலம் வருகையை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் பொறுப்பாளராக சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வரும், போலீஸ் சூப்பிரண்டுமான லாவண்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே தி.மு.க. மாநாட்டு பணிகளை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு), வக்கீல் ராஜேந்திரன் (மத்திய மாவட்டம்), டி.எம்.செல்வகணபதி (மேற்கு), மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம், அவைத்தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, சிவராமன், அன்பு, பேரூர் செயலாளர்கள் வெங்கடேஷ், பாபு, முன்னாள் பேரூர் செயலாளர் சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 21 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.
    • பண்டிகை நாட்களில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் எத்தனை சதவீதம் வழங்க வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தை சென்னையில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

    தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 21 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.

    தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர் முன்னேற்ற சங்கம், டாஸ்மாக் தொழிலாளர் அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் நிரந்தர பணியாளர் சங்கம், விற்பனையாளர்கள் சங்கம் உள்பட 21 தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்றன.

    இதில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) பொதுச்செயலாளர் தனசேகரன் கொடுத்திருந்த கோரிக்கையில், டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும் 20 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    அது மட்டுமின்றி பண்டிகை நாட்களில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதேபோல் ஒவ்வொரு சங்க பிரதிநிதிகளும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    இவற்றை அமைச்சர் முத்துசாமி பெற்றுக் கொண்டு, ஒவ்வொரு சங்கங்களின் கோரிக்கையையும் கவனமுடன் பரிசீலித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று போனஸ் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

    • மர்மவிலங்கால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • விலங்கை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

    அறச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் அறச்சலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தொழுவங்களில் கட்டப்பட்டுள்ள கால்நடைகளை இரவில் வரும் மர்மவிலங்கு இழுத்து சென்றுவருகிறது. இதனால் அச்சம் அடைந்துள்ள பொதுமக்கள் இது குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

    இதனை அடுத்து வீட்டுவசதித்துறை அமை ச்சர் முத்துசாமி மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் அறச்சலூரில் மர்மவிலங்கால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உலாவும் விலங்கை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். இதில் வனத்துறை அதிகாரி சுதாகரும் கலந்து கொண்டார்.

    • எந்த தவறும் இல்லாமல் டாஸ்மாக் துறையை நடத்த வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாக உள்ளது.
    • விரைவில் டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்களை அழைத்து பேசி அவர்கள் பிரச்சினைகளை தீர்க்க எண்ணி உள்ளோம்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று மது விலக்கு ஆய தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது விற்பனை செய்தல், தொழிலாளர்கள் பிரச்சனைகள், டாஸ்மாக் கடைகளில் இட வசதியின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை ஒழுங்கு படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    டாஸ்மாக்கில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அதன்படி தான் பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன. பத்திரிகையாளர்களிடமும் இது குறித்து கருத்து கேட்கிறோம். ஆனால் விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன. எங்களது உணர்வுகளை புரிந்து கொண்டு நல்ல கருத்துக்களை தெரியப்படுத்த வேண்டும்.

    விரைவில் டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்களை அழைத்து பேசி அவர்கள் பிரச்சினைகளை தீர்க்க எண்ணி உள்ளோம். டாஸ்மாக் பார் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பார்களுக்கான டெண்டர் விடப்படும். அதிக விலைக்கு மது விற்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து புகார் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    ஈரோடு சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் 3 ஏக்கர் நிலம் எல்காட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளோம். மேலும் 8 ஏக்கர் நிலம் வழங்க ஆய்வு நடக்கிறது.

    எந்த தவறும் இல்லாமல் டாஸ்மாக் துறையை நடத்த வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாக உள்ளது. கடையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற ஆசை யாருக்கும் இல்லை.

    உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை, இலவச பேருந்து, குடும்ப தலைவிக்கு உரிமைத்தொகை போன்று மகளிருக்கான திட்டங்கள் கொண்டு வருவது என்பது ஆண்களை மகளிர் பார்த்து க்கொள்வார்கள் என்பதால் மகளிருக்கு செய்கிறோம்.

    டாஸ்மாக் கடையில் பணியாற்றுபவர்களின் கொடுமையான சூழ்நிலை நேரில் பார்த்தால் தான் புரியும்.இதனையெல்லாம் சரிசெய்ய அவர்கள் கொடுத்த கோரிக்கைகளை ஒருங்கிணைத்து ஒரு வார த்திற்குள் முடிவெடுக்க உள்ளோம். அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் அவரை விசாரணைக்கு அழைத்து இருப்பது என்பது ஒரு அரசியல் ரீதியான நடவடிக்கை. இது அவரை பாதிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அத்தி க்கடவு-அவினாசி திட்டப்பணி குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • மே மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை அலுவ லக கூட்ட ரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில்,

    அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் அத்தி க்கடவு-அவினாசி திட்டப்பணி முன்னேற்ற நிலை குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூ ட்டம் நடை பெற்றது.

    இக்கூட்டத்தில் அமை ச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

    முதல்-அமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணி கள் குறித்து தொடர்ச்சியாக கேட்டறிந்து வருகிறார்கள். அந்த வகையிலே அத்திக்க டவு-அவிநாசி திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்கள்.

    அத்திக்கடவு-அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தி லிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்று முறையில் நிலத்தடி யில் குழாய் பதிப்பின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணி த்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தினை நீரேற்று முறையில் செயல்படுத்திட தமிழக அரசின் மூலம் ரூ.1,652 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ரூ.1,756.88 கோடிக்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்க ப்ப ட்டுள்ளது. தற்போது 99 சதவீத பணிகள் முடிக்கப்ப ட்டுள்ளது.

    இந்ததிட்டத்தில் குழாயின் மொத்த நீளம் 1065.30 கி.மீ . பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் ஆறு நீர் உந்து நிலைய ங்களுக்கான பவானி, நல்லக்கவுண்டன் பாளை யம், திருவாச்சி, போ லநாயக்கன் பாளையம், எம்மாம் பூண்டி, அன்னூர் ஆகிய பகுதிகளில் கட்டு மான பணிகள் முடிவடை ந்துள்ளது.

    குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கு முடி வடைந்துள்ளது. தற்போது குழாய்கள் பதிக்கும் பணிகள் துரிதமாக நடை பெற்று வருகிறது.

    தற்சமயம் சுமார் 797.17 கி.மீ. அளவு குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மின் மாற்றிகள், பம்புகள், மின் மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர்உந்து நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.

    மின் கம்பங்கள் அமை க்கும் பணி மற்றும் பூமிக்கடி யில் மின்சார தொடர மைப்புகள் பதிக்கும் பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது. நிலம் பயன்பாட்டு உரிமை பெறும் பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது.

    குளம், குட்டைகளில் கடையின் மேலாண்மை அமைப்பு பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்சமயம் சுமார் 1,044 எண்கள் பொருத்த ப்பட்டுள்ளது.

    இத்திட்டத்திற்கு இது வரை ரூ .1624.69 கோடி அளவில் செலவீனம் மேற்கொ ள்ளப்பட்டு ள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை 6 நீரேற்று நிலைய ங்கள் மற்றும் பிரதான குழாய்களுக்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நீரேற்று நிலையங்களின் இடையிலுள்ள கிளைக்கு ழாய்கள் மற்றும் 1,045 குளம், குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள மேலாண்மை அமைப்பு கருவிகளில் சோதனை ஓட்டம் நடை பெற்று வருகிறது.

    அனைத்து சோதனை ஓட்டப்பணிகள் முடிக்கப்ப ட்டு மே மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளை விரை வாக முடித்திட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) நாரணவ்ரே மனிஷ் ராவ், செயற்பொறியாளர் மன்மதன் (நீர்வளத்துறை அத்திக்கடவு- அவிநாசி திட்டம்),

    உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி , துணை கலெக்டர் (பயிற்சி) காயத்திரி, உதவி செயற் பொறியாளர்கள் சங்கர் ஆனந்த், வெங்கடாஜலம், விஜயகுமார், திட்ட அலுவலர் பாலாஜி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 96 பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
    • பெற்றோர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 28 பள்ளிகளில் 2,649 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப் பட்டு வருகிறது. திங்கட் கிழமை கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார்,

    செவ்வாய்க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, புதன்கிழ மை வெண்பொங்கல் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சோள காய்கறி கிச்சடி ரவா கேசரி போன்றவை வழங்கப் பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று முதல் கூடுதலாக 32 பள்ளிகளில் 5,793 மாணவ- மாணவிகளுக்கு இந்த காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் தாளவாடி மலைப்பகுதியில் 32 பள்ளிகளில் 738 மாணவ-மாணவிகள் பயனைந்து வருகின்றனர். மொத்தமாக ஈரோடு மாவட்டத்தில் 96 பள்ளிகளை சேர்ந்த 9,180 மாணவ -மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    இன்று காலை ஆசிரியர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அமைச்சர் சு.முத்துசாமி விரிவுபடுத்தப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பல குழந்தைகள் காலையில் உணவருந்தாமல் பள்ளிக்கு வருகின்றனர். இது பல விளைவுகளை ஏற்படுத்தும். காலை உணவை கொடுத்து அனுப்பும் அளவிற்கு பல குடும்பங்கள் பணிச்சுமையின் காரணமாக முடியாமல் போகின்றன.

    இதனால் குழந்தைகள் பள்ளிக்கு வராத நிலை உள்ளது. அவர்களது உடல்நிலை இதையெல்லாம் மனதில் வைத்து சில இடங்களில் முதல்-அமைச்சர் கவனத்திற்கு வந்தது. நேரடியாகவும் அவர் பார்த்தார்.

    குழந்தைகளின் உடல் நிலை பாதுகாக்கவும் அவர்களின் குடும்பத்தாருக்கு சுமையை குறைப்பதற்காகவும் மாணவ-மாணவிகள் பள்ளியில் வருவதை அதிகரிப்ப தற்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்- அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தமாக 2-ம் கட்டமாக இன்று இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அத்தனை பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

    மாநகராட்சி எல்லைக்குள் இருக்கின்ற மாநகராட்சி அரசு பள்ளிகளில் இந்த திட்டம் 32 பள்ளிகளில் கூடுதலாக தொடங்கப்ப ட்டுள்ளது.

    அதில் 5 ஆயிரத்து 793 மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள். இந்த வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் குழந்தை கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டு வதாக அமைந்திருக்கிறது.

    வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    மற்ற மாநிலங்களை சேர்ந்த முதல்-அமைச்சர் களும் இந்த திட்டம் பாராட்டும் அளவிற்கு அமைந்துள்ளது. பெற்றோ ர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

    மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் நல்ல வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சில பிரச்சனைகள் இருக்கின்றன. அவ ர்களுக்கு கை கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்ற காரண த்தினால் 6 முதல் 12 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உய ர்கல்வி வருகின்றபோது மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்ப தற்கான உதவித்தொகை திட்டத்தை முதல் - அமைச்சர் மாணவிகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

    காலை உணவு திட்டம், ஆயிரம் ரூபாய் திட்டம் இதையெல்லாம் பார்க்கும் போது பள்ளிகளில் சேர்கி ன்ற மாணவர்களின் எண்ணிக்கை அரசு பள்ளி களின் படிப்பு, கல்லூரிக ளில் சேர்கின்ற மா ணவிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்து இருக்கின்றது.

    இந்த திட்டம் நல்ல நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டி ருக்கிறது. மற்ற மாநிலங்க ளோடு தமிழ்நாடு போட்டி யிட்டு அதிகமான மாண வர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற சிவில் தேர்வுகளை வெற்றி பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.

    இப்படி பல திட்டங்கள் மாணவர்களை நோக்கி கொண்டு வரப்ப ட்டுள்ளன. மகளிர்க்கான உரிமை தொகை ஒரு கோடி குடும்பத்திற்கு கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார்.

    அதில் என்ன குறைபாடுகள் இருந்தாலும் அதை சரி செய்ய முதல்-அமைச்சர் தயாராக இருக்கின்றார். சேதமடைந்த அரசு பள்ளிகள் கட்டிடங்களை சீரமைக்க கணக்கெடுத்து வருகின்றோம்.

    அத்திக்கடவு -அவிநாசி திட்டம் 106.8 கிலோமீட்டர் நீளத்திற்கு முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. 83 கிளைகள் இருக்கின்றன. 1045 குளங்களுக்கு இணைப்பு வழங்கப்ப ட்டுள்ளது.

    அதற்கான சோதனை நடந்து வருகிறது. இந்த பணிகள் நடந்து வரும்போது தேதி விரைவில் அறிவிக்க ப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
    • இது வரை ரூ.1624.69 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்திற்குட்பட்ட எம்மாம்பூண்டியில் அமைந்துள்ள அத்திக்கடவு-அவிநாசிதிட்ட 5-ம் நீரேற்று நிலையத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

    விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு- அவிநாசிதிட்டமானது பவானி ஆற்றில் காளிங்க ராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தில் இருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்று முறையில்

    நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில்

    32 பொதுப்பணி த்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 குளங்க ளுக்கு நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்ப ட்டுள்ளது.

    மேலும் தற்போது 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணை மற்றும் ஆறு நீர் உந்து நிலையங்களுக்கான பவானி, நல்லக் கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன் பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய இடங்களில் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது.

    மேலும் ஆழ்குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கு முடி வடைந்துள்ளது. (மொத்த நீளம் 267.5 கி.மீ) மற்றும் எம்.டி.பி.இ. குழாய்கள் பதிக்கும் பணிகள் தற்போத துரிதமாக நடைபெற்று வருகிறது.

    தற்சமயம் சுமார் 797.11 கி.மீ. அளவு எம்.டி.பி.இ. குழாய் (மொத்த நீளம் 797.8 கி.மீ) பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு ள்ளன.

    மின்மாற்றிகள், ஏவுபம்பு கள், மின்மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர்உந்து நிலைய ங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.

    மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பூமிக்கடியில் மின்சார தொடரமைப்புகள் பதிக்கும் பணி 100 சதவீதம் முடிவுற்று ள்ளது. மேலும் நிலம் பயன்பாட்டு உரிமை பெறும் பணி 100 சதவீதம் முடிவுற்று ள்ளது.

    இது தொடர்பாக நடைபெற்ற நீர்வளத்துறை உயர்மட்டக் கூட்டத்தின் நிகழ்வு குறிப்பு அறிக்கை தலைமைச் செயலாளர் ஒப்புதல் அளிக்கப்பட்டு திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    குளம், குட்டைகளில் ஓ.எம்.எஸ். கருவி பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்சமயம் சுமார் 1044 எண்கள் பொருத்தப்பட்டுள்ளது (மொத்தம் - 1045 எண்கள்). இத்திட்டத்திற்கு இது வரை ரூ.1624.69 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் 20-ந் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை 6 நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதானக் குழாய்களில்106.80 கி.மீ நீளத்திற்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நீரேற்று நிலைய ங்களிற்கு இடையிலுள்ள கிளைக்குழாய் மற்றும் 1045 குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஓ.எம்.எஸ். கருவிகளில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

    மேலும் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சரியான முறையில் செல்கிறதா? என்பது குறித்து ஆய்வுப்பணிகள் அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அனைத்து பணிகளும் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர தொடர்புடைய அலுவலர்கள் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி எம்மாம்பூ ண்டியில் அமைந்துள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்ட 5-ம் நீரேற்று நிலையத்திலிருந்து சோதனை ஓட்டமாக அருகில் உள்ள குளத்திற்கு நீர் செல்வதையும் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    இந்நிகழ்வின் போது நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் மன்மதன் (பெருந்துறை), நரேந்திரன் (அவிநாசி), நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் முத்துசாமி, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு சசிமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    • மேற்கு மண்டல சுதாகர் மற்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆய்வின்போது கோபி டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் வடிவேல்குமார், சண்முகவேலு உள்ளிட்டார் உடன் பிறந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என். பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மற்றும் கலைஞர் படிப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி மாலை திறந்து வைக்கிறார்.

    இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். முதல்-அமைச்சர் கோவையில் இருந்து குன்னத்தூர், கெட்டிசெவியூர், கொளப்பலூர் வழியாக கோபியை வந்தடைந்து அதன்பின் நஞ்ச கவுண்டன் பாளையம் வழியாக பவானி ஆற்றை கடந்து கள்ளிப்பட்டி செல்லும் வரை உள்ள சாலை பாதுகாப்பு பணியை ஐ.ஜி. சுதாகர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது முதல்-அமைச்சர் வரும் வழியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள். சிலை திறப்பு நடைபெறும் இடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள். பொதுமக்கள், கட்சியினர் வாகனங்களை நிறுத்தும் பகுதி. சிலை மற்றும் படிப்பகத்தை திறந்து வைத்த பின்பு முதல்-அமைச்சர் செல்லும் அத்தாணி, ஜம்பை வழியாக ஈரோடு செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.

    மேற்கு மண்டல சுதாகர் மற்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆய்வின்போது கோபி டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் வடிவேல்குமார், சண்முகவேலு உள்ளிட்டார் உடன் பிறந்தனர்.

    அதனைத் தொடர்ந்து 40 அடி உயரக் கொடி கம்பம் நிறுவும் பணியை அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவபாலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

    ×