search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் முத்துசாமி, மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு
    X

    அமைச்சர் முத்துசாமி, மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு

    • அமைச்சர் முத்துசாமி, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு சசிமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    • மேற்கு மண்டல சுதாகர் மற்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆய்வின்போது கோபி டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் வடிவேல்குமார், சண்முகவேலு உள்ளிட்டார் உடன் பிறந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என். பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மற்றும் கலைஞர் படிப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி மாலை திறந்து வைக்கிறார்.

    இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். முதல்-அமைச்சர் கோவையில் இருந்து குன்னத்தூர், கெட்டிசெவியூர், கொளப்பலூர் வழியாக கோபியை வந்தடைந்து அதன்பின் நஞ்ச கவுண்டன் பாளையம் வழியாக பவானி ஆற்றை கடந்து கள்ளிப்பட்டி செல்லும் வரை உள்ள சாலை பாதுகாப்பு பணியை ஐ.ஜி. சுதாகர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது முதல்-அமைச்சர் வரும் வழியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள். சிலை திறப்பு நடைபெறும் இடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள். பொதுமக்கள், கட்சியினர் வாகனங்களை நிறுத்தும் பகுதி. சிலை மற்றும் படிப்பகத்தை திறந்து வைத்த பின்பு முதல்-அமைச்சர் செல்லும் அத்தாணி, ஜம்பை வழியாக ஈரோடு செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.

    மேற்கு மண்டல சுதாகர் மற்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆய்வின்போது கோபி டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் வடிவேல்குமார், சண்முகவேலு உள்ளிட்டார் உடன் பிறந்தனர்.

    அதனைத் தொடர்ந்து 40 அடி உயரக் கொடி கம்பம் நிறுவும் பணியை அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவபாலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×