search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tasmac employee"

    • மோகனூர் சர்க்கரை ஆலை வண்டிக்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக கடந்த 4 வருடமாக வேலை பார்த்து வந்தார்.
    • மோகனூர் -பரமத்தி வேலூர் சாலையில் உள்ள வண்டிகேட் பகுதியில் சாலை ஓரமாக மின் விளக்கும் எரியாமல் இருளில் நின்று கொண்டிருந்த லாரி மீது பாலசுப்ரமணி ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுப்புத்தெரு பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணி (வயது 39). இவர் மோகனூர் சர்க்கரை ஆலை வண்டிக்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக கடந்த 4 வருடமாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று டாஸ்மாக் கடைக்கு வேலைக்கு சென்று வருவதாக தனது மனைவி சக்தியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். வேலை முடிந்து இரவு 11.30 மணி அளவில் பாலசுப்பிரமணி மற்றும் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சக்திவேல், மற்றொரு விற்பனையாளர் ராமசாமி ஆகியோர் தனித்த னியாக ேமாட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மோகனூர் -பரமத்தி வேலூர் சாலையில் உள்ள வண்டிகேட் பகுதியில் சாலை ஓரமாக மின் விளக்கும் எரியாமல் இருளில் நின்று கொண்டிருந்த லாரி மீது பாலசுப்ரமணி ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

    அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணி உயிரிழந்தார்.

    இது குறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 21 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.
    • பண்டிகை நாட்களில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் எத்தனை சதவீதம் வழங்க வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தை சென்னையில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

    தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 21 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.

    தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர் முன்னேற்ற சங்கம், டாஸ்மாக் தொழிலாளர் அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் நிரந்தர பணியாளர் சங்கம், விற்பனையாளர்கள் சங்கம் உள்பட 21 தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்றன.

    இதில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) பொதுச்செயலாளர் தனசேகரன் கொடுத்திருந்த கோரிக்கையில், டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும் 20 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    அது மட்டுமின்றி பண்டிகை நாட்களில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதேபோல் ஒவ்வொரு சங்க பிரதிநிதிகளும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    இவற்றை அமைச்சர் முத்துசாமி பெற்றுக் கொண்டு, ஒவ்வொரு சங்கங்களின் கோரிக்கையையும் கவனமுடன் பரிசீலித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று போனஸ் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

    • மதுபானம் விற்பனையில் சரியாக கணக்கு காட்டாமல் இருந்ததால் அவரை தேனியில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.
    • காளியம்மன் கோவில் தெருவில் தனது மாமியார் வீட்டின் அருகில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (48). இவர் தேவதானப்பட்டி பைபாஸ் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார்.

    மதுபானம் விற்பனையில் சரியாக கணக்கு காட்டாமல் இருந்ததால் அவரை தேனியில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். அதன்படி தேனிக்கு செல்வதாக தனது வீட்டில் கூறிச்சென்றவர் காளியம்மன் கோவில் தெருவில் தனது மாமியார் வீட்டின் அருகில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கயத்தாறு அருகே சவலாப்பேரி பால்பண்ணை தெருவைச் சேர்ந்த பூல்பாண்டி(வயது 48).இவர் திருச்செந்தூரில் டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகிறார்.
    • கயத்தாறு அருகே உள்ள சன்னதுபுதுக்குடி டாஸ்மாக் கடையில் முதன்முதலில் நேற்று தான் பணியில் சேர்ந்து வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் போது கரிசல் குளம் விளக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலியாகினர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே சவலாப்பேரி பால்பண்ணை தெருவைச் சேர்ந்த பூல்பாண்டி(வயது 48).இவர் திருச்செந்தூரில் டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கயத்தாறு அருகே உள்ள சன்னதுபுதுக்குடி டாஸ்மாக் கடையில் முதன்முதலில் நேற்று தான் பணியில் சேர்ந்து வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் போது கரிசல் குளம் விளக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலியாகினர்.

    இவருக்கு ரமா என்ற மனைவியும், என்ற ஒரு மகன் உள்ளார். இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தினை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • விருத்தாசலம் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்தனர்.
    • காயமடைந்த அசோகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள நடியப்பட்டு கிராமத்தில் உள்ள டாஸ்மாக்கில் அசோகன் (51) என்றவர் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு டாஸ்மாக்கில் வசூலான ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.  அப்போது அவர் புதுப்பேட்டை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது இரு மர்ம நபர்கள் அவரை உருட்டு கட்டையால் தாக்கி அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த அசோகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆலடி போலீசார் சந்தேகத்திற்கிடமான 2 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்

    அம்பையில் டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் விஜயவீரன்(வயது 46). இவர் அம்பையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இதனால் குடும்பத்துடன் அம்பையில் குடியேறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வேலை பார்த்து வந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்போவதாக கூறி அதனை அடைத்து விட்டனர்.

    இதனால் விஜயவீரன் குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்த அவர் கடந்த 28-ந்தேதி  திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதுதொடர்பாக அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1.70 லட்சம் பணத்தை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
    நெல்லை:

    நெல்லை பழைய பேட்டையை சேர்ந்தவர் காமராஜ் (வயது42). இவர் சுத்தமல்லி அருகே உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்றிரவு இவர் கடையை மூடி விட்டு, விற்பனையான ரூ.1.70 லட்சம் ரொக்க பணத்தை பையில் வைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

    திருப்பணிகரிசல்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியது. இதில் பயந்த காமராஜிடம் கொள்ளையர்கள் ரூ.1.70 லட்சத்தையும் கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். 

    இது குறித்து காமராஜ் நெல்லை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்த 3 கொள்ளையர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.85 ஆயிரம் கொள்ளையடித்து தப்பி ஓடிய 3 கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    பாளை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 57). இவர் நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தில் உள்ள குபேரன்நகர் டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு 11 மணி அளவில் ‘டாஸ்மாக்’ மதுபானக்கடையில் விற்பனையை முடித்து கடையை பூட்டியுள்ளார். விற்பனையான பணம் ரூ.84 ஆயிரத்து 950 ஐ ஒரு பேக்கில் வைத்து தனது மொபட் பெட்டியில் வைத்து பூட்டினார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அவருக்கு பின்னால், அதே டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்க்கும் அய்யப்பன் (39) என்பவர் தனியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    டாஸ்மாக் கடையை விட்டு சிறிது தூரத்தில் ஆறுமுகம் வந்த போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் 3 பேர் இருந்தனர். திடீரென அந்த மோட்டார்சைக்கிள் ஆறுமுகத்தின் மொபட் மீது, ஓவர்டேக் செய்து மோதியபடி வழி மறித்தது. இதில் ஆறுமுகம் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் அரிவாள் மற்றும் கத்தியுடன் மொபட் பெட்டியை அரிவாளால் வெட்டி திறந்து பணப் ‘பை’ யுடன் ரூ,84 ஆயிரத்து 950 ஐயும் கொள்ளை அடித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

    அப்போது ஆறுமுகத்துக்கு பின்னால் தனியாக மோட்டார் சைக்கிளில் வந்த பார் ஊழியர் அய்யப்பன் சத்தம் போட்டபடி கொள்ளையர்களை மறித்தார். அப்போது ஒரு கொள்ளையர்கள் அரிவாளால் அய்யப்பன் தொடையில் வெட்டி விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.

    மொபட்டில் இருந்து கீழே விழுந்ததில் காயம் அடைந்த ஆறுமுகமும், அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அய்யப்பனும் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 கொள்ளையர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். #tamilnews
    ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.5½ லட்சம் பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 42). இவர் ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த கடையில் தாழக்குடியை சேர்ந்த புஷ்பராஜ், பழவூரை சேர்ந்த முனியாண்டி ஆகியோர் ஊழியர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்த டாஸ்மாக் கடையில் ஒவ்வொரு நாளும் வசூலாகும் பணத்தை இவர்கள் எண்ணி கணக்கு பார்த்துவிட்டு அதை பாதுகாப்பாக கொண்டு செல்வது வழக்கம்.

    நேற்று இரவு 10 மணிக்கு மதுபான விற்பனை முடிந்ததும் வசூல் தொகையை எண்ணி கணக்குப் பார்த்து உள்ளனர். அப்போது ரூ.5 லட்சத்து 33 ஆயிரத்து 880 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

    அந்த பணத்தை கண்காணிப்பாளர் முருகன் தனது மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு ஆரல் வாய்மொழி நோக்கி சென்று கொண்டிருந்தார். கடை ஊழியர்களில் ஒருவரான முனியாண்டி பழவூர் நோக்கி சென்றுவிட்டார். மற்றொரு ஊழியரான புஷ்பராஜ் தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்று கொண்டிருந்தார்.

    குமாரபுரம் பெட்ரோல் பங்க்கை தாண்டி இருளான பகுதியில் முருகனின் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் முருகன் அருகே வந்ததும் தங்கள் மோட்டார் சைக்கிளால் அவரை வழிமறித்து தடுத்து நிறுத்தினார்கள். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் ஒரு வாலிபர் இறங்கிச் சென்று தன் கையில் இருந்த அரிவாளால் முருகனை சரமாரியாக வெட்டினார்.

    இதனால் அவர் அலறிய படி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். உடனே அந்த வாலிபர் ரூ.5½ லட்சம் பணத்துடன் முருகனின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். மற்ற கொள்ளையர்கள் 2 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அவரை பின் தொடர்ந்து சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் புஷ்பராஜ் தனது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். நடுரோட்டில் ரத்த காயத்துடன் முருகன் விழுந்து கிடப்பதை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தார்.

    பிறகு அவர் ஆரல்வாய் மொழி போலீஸ் நிலையம் சென்று துணிகர கொள்ளை பற்றி புகார் செய்தார். உடனே ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆம்புலன்சை வரவழைத்து முருகனை சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த துணிகர கொள்ளை பற்றி ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகதேவி, சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் பணத்தை ஊழியர்கள் எடுத்துச் செல்வதை நோட்ட மிட்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட் டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த கொள்ளையர்களை கைது செய்ய ஏ.டி.எஸ்.பி. ஜவகர் தலைமையில் தனி போலீஸ் படையும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொள்ளையர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் உள்ள போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். கொள்ளையர்கள் டாஸ்மாக் கண்காணிப்பாளர் முரு கனின் மோட்டார் சைக் கிளுடன் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதால் அந்த மோட்டார் சைக்கிளின் எண்ணை போலீஸ் சோதனைச்சாவடியில் தெரிவித்து அதன் மூலமும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தருமபுரி அருகே டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையில் ஈடுபட்ட வழக்கில் கைதான 2 வாலிபர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், நரிப்பள்ளி அருகே டாஸ்மாக விற்பனையாளர் மகரஜோதி கடந்த 16-ந் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது அன்றைய விற்பனை தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் இவரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தீர்த்தமலை- நரிப்பள்ளி சாலையில், தெத்து முனியப்பன் கோவில் அருகே சந்தேகமான முறையில் வந்த இருவரை போலீசார் பிடித்தனர்.

    விசாரணையில், அவர்கள் ஊத்தங்கரையை சேர்ந்த வெங்கடேசன் (வயது 32), பரதன் (24) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் துப்பாக்கியால் சுட்டு டாஸ்மாக் விற்பனையாளரிடம் பணம் பறித்தது உறுதியானது.

    போலீசார் கைதான 2 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இதில் வெங்கடேசன் வீட்டில் இருந்து ரப்பர் குண்டை பயன்படுத்தி சுடும் ஏர்கன் துப்பாக்கிகள் சிக்கியது. பரதன் வீட்டில் இருந்து எஸ்.பி.எம்.எல். (சிங்கிள் பேரல் மஸ்லோடு கன்) ரக துப்பாக்கியும், 4 தோட்டாக்களும், வெடி (கரி) மருந்துகளும் சிக்கியது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைதான 2 பேர் கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி பகுதியில் டாஸ்மாக் ஊழியர்கள் முருகன், ஆனந்தன் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு ரூ.3 லட்சத்து 8 ஆயிரம் கொள்ளையடித்த வழக்கிலும் தொடர்புடையது தெரியவந்தது.

    கைதான வெங்கடேஷ் மற்றும் பரதன் ஆகிய 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    செங்கத்தில் டாஸ்மாக் ஊழியர்களை சுட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெருமுட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் மேற்பார்வையாளர் சண்முகம் (வயது 40) மற்றும் விற்பனையாளர் லட்சுமணன் (42). இருவரும் வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று இரவு வசூலான 3 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு கடையை பூட்டினர். அப்போது பைக்கில் முக மூடி அணிந்தபடி 2 பேர் கடை அருகே வந்தனர். அவர்கள் திடீரென கைதுப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு பணத்தை கேட்டு மிரட்டினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகம் 3 லட்ச ரூபாய் பணத்துடன் தப்பி ஓடினார். அப்போது மர்மநபர் துப்பாக்கியால் சண்முகத்தின் காலில் சுட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பணத்துடன் அங்கிருந்து உயிர் தப்பினார்.

    இதையடுத்து அந்த நபர்கள் விற்பனையாளர் லட்சுமணனை மடக்கி பிடித்து கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சராமாரியாக தாக்கி மூடிய கடையை திறக்குமாறு மிரட்டினர்.

    கடைக்குள் சென்று பார்த்த போது கடையில் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் லட்சுமணனை விட்டுவிட்டு மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர்.

    குண்டு காயத்துடன் தப்பிய சண்முகம் செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி விசாரணை நடத்தினார். பைக்கில் முக மூடி அணிந்து துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களா? என்று விசாரித்தனர். துப்பாக்கியால் சுட்ட இரண்டு தோட்டாக்களை சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றி தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    கோபியில் டாஸ்மாக் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    கோபி:

    கோபி பாரியூர் ரோட்டில் உள்ள அரசு டாஸ்மாக மதுக்கடை உள்ளது. இங்கு சூப்பர் வைசராக பணி புரிபவர் ஜோதிலிங்கம் (வயது 43).

    கடையில் விசு, மூர்த்தி, மோகனசந்தரம் ஆகிய 3 பேர் விற்பனையாளர்களாக பணி புரிகிறார்கள்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அன்று மதுக்கடை மூடப்பட்டது. கடையை மூடி கொண்டு உள்ளே சூப்பர்வைசர் உள்பட 4 பேர் இருந்தனர்.

    அப்போது மாலை 4 மணிக்கு அதேபகுதியை சேர்ந்த காளிமுத்து, ஏசுதாஸ் ஆகிய 2 பேர் வந்தனர். அவர்கள் மதுக்கடை கதவை தட்டினர்.

    உள்ளே இருந்த ஊழியர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் வந்த 2 பேர் ‘‘எங்களுக்கு 25 பெட்டி பிராந்தி வேண்டும்’’ என்று கேட்டனர். அதற்கு ஊழியர்கள் ‘‘இன்று மது விற்பனை கிடையாது. தர மாட்டோம்’’ என்று கூறினர்.

    இதைத்தொடர்ந்து அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேற்பார்வையாளர் ஜோதிலிங்கம் கதவு ‌ஷட்டரை வேகமாக இழுத்து மூடினார். அப்போது கதவு இடுக்கில் அவரது கை மாட்டி காயம் ஏற்பட்டது.

    இது குறித்து சூப்பர் வைசர் ஜோதிலிங்கம் கோபி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து காளிமுத்து, எசுதாஸ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    ×