search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளை - கைதான 2 வாலிபர்கள் சேலம் சிறையில் அடைப்பு
    X

    டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளை - கைதான 2 வாலிபர்கள் சேலம் சிறையில் அடைப்பு

    தருமபுரி அருகே டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையில் ஈடுபட்ட வழக்கில் கைதான 2 வாலிபர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், நரிப்பள்ளி அருகே டாஸ்மாக விற்பனையாளர் மகரஜோதி கடந்த 16-ந் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது அன்றைய விற்பனை தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் இவரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தீர்த்தமலை- நரிப்பள்ளி சாலையில், தெத்து முனியப்பன் கோவில் அருகே சந்தேகமான முறையில் வந்த இருவரை போலீசார் பிடித்தனர்.

    விசாரணையில், அவர்கள் ஊத்தங்கரையை சேர்ந்த வெங்கடேசன் (வயது 32), பரதன் (24) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் துப்பாக்கியால் சுட்டு டாஸ்மாக் விற்பனையாளரிடம் பணம் பறித்தது உறுதியானது.

    போலீசார் கைதான 2 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இதில் வெங்கடேசன் வீட்டில் இருந்து ரப்பர் குண்டை பயன்படுத்தி சுடும் ஏர்கன் துப்பாக்கிகள் சிக்கியது. பரதன் வீட்டில் இருந்து எஸ்.பி.எம்.எல். (சிங்கிள் பேரல் மஸ்லோடு கன்) ரக துப்பாக்கியும், 4 தோட்டாக்களும், வெடி (கரி) மருந்துகளும் சிக்கியது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைதான 2 பேர் கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி பகுதியில் டாஸ்மாக் ஊழியர்கள் முருகன், ஆனந்தன் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு ரூ.3 லட்சத்து 8 ஆயிரம் கொள்ளையடித்த வழக்கிலும் தொடர்புடையது தெரியவந்தது.

    கைதான வெங்கடேஷ் மற்றும் பரதன் ஆகிய 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    Next Story
    ×