search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tragic death"

    • மோகனூர் சர்க்கரை ஆலை வண்டிக்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக கடந்த 4 வருடமாக வேலை பார்த்து வந்தார்.
    • மோகனூர் -பரமத்தி வேலூர் சாலையில் உள்ள வண்டிகேட் பகுதியில் சாலை ஓரமாக மின் விளக்கும் எரியாமல் இருளில் நின்று கொண்டிருந்த லாரி மீது பாலசுப்ரமணி ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுப்புத்தெரு பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணி (வயது 39). இவர் மோகனூர் சர்க்கரை ஆலை வண்டிக்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக கடந்த 4 வருடமாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று டாஸ்மாக் கடைக்கு வேலைக்கு சென்று வருவதாக தனது மனைவி சக்தியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். வேலை முடிந்து இரவு 11.30 மணி அளவில் பாலசுப்பிரமணி மற்றும் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சக்திவேல், மற்றொரு விற்பனையாளர் ராமசாமி ஆகியோர் தனித்த னியாக ேமாட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மோகனூர் -பரமத்தி வேலூர் சாலையில் உள்ள வண்டிகேட் பகுதியில் சாலை ஓரமாக மின் விளக்கும் எரியாமல் இருளில் நின்று கொண்டிருந்த லாரி மீது பாலசுப்ரமணி ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

    அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணி உயிரிழந்தார்.

    இது குறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • மணி (வயது59) போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார். இவர் தியாக துருகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கல்மீது மோட்டார் சைக்கிள் மோதி நிலை தடு மாறி மணி கீழே விழுந்ததில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
    • சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணி இறந்து போனார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என். நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது59). தியாகதுருகம் போலீஸ் நிலை யத்தில்வர் நேற்று புகார் மனு சம்மந்த மான விசாரணைக் காக தியாக துருகத்தில் இருந்து பானை யங்கால் கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வி.புதூர் பிரிவு சாலை அருகே சென்ற போது சாலையில் நெல் குவித்து மூடப்பட்டு அதன் அருகே கருங்கல் வைக்கப்பட்டிருந்தது.

    அந்த கல்மீது மோட்டார் சைக்கிள் மோதி நிலை தடு மாறி மணி கீழே விழுந்ததில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்த னர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணி இறந்து போனார். அவரது உடல் பிரேத பரிசோ தனை க்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணி ஓய்வு பெற இன்னும் ஒரு சில மாதங்கள் உள்ள நிலையில் மனு விசாரணை க்காக சென்றபோது தவறி விழுந்து இறந்து போன சம்பவம் போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் நெசவு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • பால் வியாபாரி படுகாயம் அடைந்தார்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள புளியம்பட்டி காலனியை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது 35). நெசவு தொழிலாளியான இவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

    நெசவாளர் காலனி அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் சந்திரகுமார் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பால் வியாபாரி அருள் பாண்டி என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது சந்திரகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த சந்திகுமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்தில் படுகாயம் அடைந்த அருண்பாண்டியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அருப்புக் கோட்டை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திர குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஆறுமுகம் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்துள்ளார்.
    • வீட்டின் பின்பகுதியில் திடீரென அவர் வாந்தி எடுத்து மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை கரண்டிபாளையம், பெரிய காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், அரவிந்த் என்ற மகனும், ஹேமப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.

    மகன் அரவிந்த் திருமணமாகி கவுந்தப்பாடியில் உள்ள மாமனார் வீட்டில் உள்ளார். மகள் ஹேமப்பிரியா திருமணம் ஆகாமல் ஆறுமுகத்துடன் குடியிருந்து வருகிறார். ஆறுமுகமும் அவரது மனைவியும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

    ஆறுமுகம் கரண்டி பாளையம் பகுதியில் உள்ள ஒருவரது தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு நீண்ட வருடங்களாக குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    தினமும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்து குடும்பத்தாருடன் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    சம்பவத்தன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஆறுமுகம் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்துள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டின் பின்பகுதியில் திடீரென அவர் வாந்தி எடுத்து மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

    உடனடியாக அவரது மனைவியும், மகளும் அவரை சென்று பார்த்த போது அங்கு செடிகளுக்கு அடிக்கும் பூச்சி மருந்தின் வாடை அடித்துள்ளது.

    மேலும் அவரது அருகில் பூச்சி மருந்து (விஷம்) பாட்டில் ஒன்று கிடந்தது. மயங்கி இருந்த அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆறுமுகம் இறந்து விட்டதாக ெதரிவித்தனர்.

    பின்னர் செல்லம்மாள் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர–மணியம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×