search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspects with officials"

    • அத்தி க்கடவு-அவினாசி திட்டப்பணி குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • மே மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை அலுவ லக கூட்ட ரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில்,

    அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் அத்தி க்கடவு-அவினாசி திட்டப்பணி முன்னேற்ற நிலை குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூ ட்டம் நடை பெற்றது.

    இக்கூட்டத்தில் அமை ச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

    முதல்-அமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணி கள் குறித்து தொடர்ச்சியாக கேட்டறிந்து வருகிறார்கள். அந்த வகையிலே அத்திக்க டவு-அவிநாசி திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்கள்.

    அத்திக்கடவு-அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தி லிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்று முறையில் நிலத்தடி யில் குழாய் பதிப்பின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணி த்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தினை நீரேற்று முறையில் செயல்படுத்திட தமிழக அரசின் மூலம் ரூ.1,652 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ரூ.1,756.88 கோடிக்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்க ப்ப ட்டுள்ளது. தற்போது 99 சதவீத பணிகள் முடிக்கப்ப ட்டுள்ளது.

    இந்ததிட்டத்தில் குழாயின் மொத்த நீளம் 1065.30 கி.மீ . பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் ஆறு நீர் உந்து நிலைய ங்களுக்கான பவானி, நல்லக்கவுண்டன் பாளை யம், திருவாச்சி, போ லநாயக்கன் பாளையம், எம்மாம் பூண்டி, அன்னூர் ஆகிய பகுதிகளில் கட்டு மான பணிகள் முடிவடை ந்துள்ளது.

    குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கு முடி வடைந்துள்ளது. தற்போது குழாய்கள் பதிக்கும் பணிகள் துரிதமாக நடை பெற்று வருகிறது.

    தற்சமயம் சுமார் 797.17 கி.மீ. அளவு குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மின் மாற்றிகள், பம்புகள், மின் மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர்உந்து நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.

    மின் கம்பங்கள் அமை க்கும் பணி மற்றும் பூமிக்கடி யில் மின்சார தொடர மைப்புகள் பதிக்கும் பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது. நிலம் பயன்பாட்டு உரிமை பெறும் பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது.

    குளம், குட்டைகளில் கடையின் மேலாண்மை அமைப்பு பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்சமயம் சுமார் 1,044 எண்கள் பொருத்த ப்பட்டுள்ளது.

    இத்திட்டத்திற்கு இது வரை ரூ .1624.69 கோடி அளவில் செலவீனம் மேற்கொ ள்ளப்பட்டு ள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை 6 நீரேற்று நிலைய ங்கள் மற்றும் பிரதான குழாய்களுக்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நீரேற்று நிலையங்களின் இடையிலுள்ள கிளைக்கு ழாய்கள் மற்றும் 1,045 குளம், குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள மேலாண்மை அமைப்பு கருவிகளில் சோதனை ஓட்டம் நடை பெற்று வருகிறது.

    அனைத்து சோதனை ஓட்டப்பணிகள் முடிக்கப்ப ட்டு மே மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளை விரை வாக முடித்திட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) நாரணவ்ரே மனிஷ் ராவ், செயற்பொறியாளர் மன்மதன் (நீர்வளத்துறை அத்திக்கடவு- அவிநாசி திட்டம்),

    உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி , துணை கலெக்டர் (பயிற்சி) காயத்திரி, உதவி செயற் பொறியாளர்கள் சங்கர் ஆனந்த், வெங்கடாஜலம், விஜயகுமார், திட்ட அலுவலர் பாலாஜி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×