search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருதலை காதல்"

    • காதலை இளம்பெண் ஏற்க மறுத்ததால் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). பட்டதாரி. இவர் ஒரு இளம் பெண்ணை கடந்த பல ஆண்டுகளாக ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்நிலையில் இவரது காதலை அந்த இளம் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். காதலை இளம்பெண் ஏற்கவில்லை. இதனால் பிரபாகரன் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று பிரபாகரன், சேடப்பாளையம் பகுதியில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிரபாகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    • பாரதி நாட்டு துப்பாக்கியுடன் அடிக்கடி காப்புக் காட்டில் வேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது.
    • கலையம்மாள் முண்டியம் பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரத்தை அடுத்துள்ள கடையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது40). விவசாயி.இவரது மனைவி கலையம்மாள் (32). இவர்களுக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் பாரதியை கோவிந்தன் வளர்ப்பு மகனாக வளர்ந்து வந்தார். கோவிந்தனுடன் சேர்ந்து பாரதி விவசாய பணிகளை கவனித்து வந்தார். மேலும் பாரதி நாட்டு துப்பாக்கியுடன் அடிக்கடி காப்புக் காட்டில் வேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவிந்தனின் மூத்த மகளை பாரதி ஒரு தலையைாக காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கோவிந்தனிடம் பாரதி கேட்டதாக தெரிகிறது. மேலும் இதில் கோவிந்தன் அவர் மகளை பாரதிக்கு பெண் தர மறுத்துள்ளார்.இதனால் கோவிந்தன் மீது பாரதி ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கோவிந்தன் பால் கறந்து கொண்டிருந்த போது அங்கு நாட்டு துப்பாக்கியுடன் வந்த பாரதி, கோவிந்தனின் தலையில் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தன் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அப்போது அங்கு வந்த அவரது மனைவி கலைய ம்மாளையும் பாரதி நாட்டு துப்பாக்கியால் சுட்டார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த கணவன்-மனைவியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற கோவிந்தன் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார். கலையம்மாள் முண்டியம் பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கண்டா ச்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் விழுப்புரம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்நிலையில் தப்பி ஓடி அப்பகுதியில் உள்ள காப்பு காட்டில் பதுங்கி தலைமறைவாகி இருந்த பாரதியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    • பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீஸ்காரர் அந்த இளம்பெண்ணை காரில் ஏற்ற முயன்றுள்ளார்.
    • ஒருதலை காதல் விவகாரத்தில் அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் வலுக்கட்டாயமாக கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

    நெல்லை:

    கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் முப்புடாதி. இவரது மகன் மாரியப்பன்(வயது 26). இவர் மணிமுத்தாறு 9-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    மாரியப்பன் கடையம் பகுதியை சேர்ந்த ஒரு 25 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண் தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

    அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாரியப்பன் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் பெண்ணின் பெற்றோரிடம் போய் திருமணத்திற்கு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் திருமணம் செய்து வைக்க சம்மதிக்கவில்லை.

    இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு இளம்பெண் வந்துள்ளார். அப்போது அவருக்கு வேறொருவருடன் நிச்சயமாகி உள்ளது. இதனை அறிந்த மாரியப்பன் நேற்று இரவு தன்னுடன் பட்டாலியனில் பணிபுரியும் சக போலீஸ்காரர் மற்றும் தனது நண்பர்களான கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த 2 வாலிபர்களுடன் சேர்ந்து ஒரு காரில் சென்றுள்ளார்.

    அப்போது பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீஸ்காரர் அந்த இளம்பெண்ணை காரில் ஏற்ற முயன்றுள்ளார்.

    அதனை தடுக்க வந்த அவரது பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இளம்பெண்ணை இழுத்து சென்றுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டுவந்து மாரியப்பனை சுற்றிவளைத்தனர்.

    இதனால் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாரியப்பனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாாரித்தனர். அதில் ஒருதலை காதல் விவகாரத்தில் அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் வலுக்கட்டாயமாக கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி, ஆட்கடத்தல் முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அவரது நண்பர்கள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சின்ன கண்மாய் பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம் என்பவர், பிளஸ்-1 மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.
    • மணிரத்தினம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பெட்ரோல் அந்த மாணவி வீட்டின் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.

    மதுரை:

    மதுரை மேலஅனுப்பானடியில் உள்ள ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் சின்ன கண்மாய் பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம் என்பவர், பிளஸ்-1 மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இதனை அந்தப் பெண் ஏற்கவில்லை. எனவே மணிரத்தினம் தொடர்ந்து மாணவிக்கு டார்ச்சர் கொடுத்து வந்தார். எனவே அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் போலீசார் மணிரத்தினத்தை கைது செய்தனர். அதன் பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த நிலையில் மணிரத்தினம் பிளஸ்-1 மாணவியை சந்தித்து, "காதலர் தினம் அன்று நீ என் காதலை ஏற்க வேண்டும். என்னுடன் வெளியே வர வேண்டும்" என்று கூறி உள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுத்ததோடு கண்டித்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணிரத்தினம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பெட்ரோல் அந்த மாணவி வீட்டின் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மணிரத்தினம், மேலஅனுப்பானடி, வாசுகி தெரு வேல்முருகன் மகன் பார்த்தசாரதி (வயது 19), ஜெய், திலீப், ஜவகர் ஆகிய 5 பேரையும் தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்.

    • கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் பணியை முடித்துவிட்டு சோனு அருகில் உள்ள விடுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சோனுவை வழிமறித்த நவீன் திடீரென தாக்குதலில் ஈடுபட்டார்.
    • மறைத்து வைத்திருந்த பாட்டிலை உடைத்து சோனுவின் முகத்திலும், கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களிலும் சரமாரியாக குத்தினார்.

    சென்னை:

    கேரள மாநிலம் ஆம்பூரி கர்த்தனக்கல் பகுதியை சேர்ந்தவர் சோனு. 20 வயது இளம்பெண்ணான இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்துள்ளார்.

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டலில் கடந்த 3 மாதங்களாக வேலை செய்து வருகிறார். ஓட்டல் அருகிலேயே விடுதியில் தங்கி உள்ளார்.

    சோனுவுக்கும் சென்னையை சேர்ந்த நவீன் என்ற வாலிபருக்கும் இடையே பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. இருவரும் நேரில் சந்தித்து பேசிக் கொண்டனர். கப்பல் படையில் வேலை செய்வதாக நவீன் கூறியுள்ளார்.

    சோனு, நவீனுடன் நட்பு ரீதியாக பழகியுள்ளார். ஆனால் இதனை தவறாக புரிந்து கொண்ட நவீன், சோனுவை ஒருதலையாக காதலித்துள்ளார். இந்த காதலை சோனுவிடம், நவீன் வெளிப்படுத்தி உள்ளார்.

    இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத சோனு, கொஞ்சம் கொஞ்சமாக நவீனை விட்டு விலகியுள்ளார். இது நவீனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதன் பின்னர் சோனுவுக்கு போன் செய்து நவீன் மிரட்டலும் விடுத்துள்ளார். அப்போது தன்னை காதலிக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் பணியை முடித்துவிட்டு சோனு அருகில் உள்ள விடுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சோனுவை வழிமறித்த நவீன் திடீரென தாக்குதலில் ஈடுபட்டார். மறைத்து வைத்திருந்த பாட்டிலை உடைத்து சோனுவின் முகத்திலும், கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களிலும் சரமாரியாக குத்தினார். சோனுவின் முகத்தை சிதைக்கும் எண்ணத்தில் பல இடங்களில் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த சோனு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சாய்ந்தார். இதைபார்த்ததும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஓடி வந்தனர்.

    இதனால் பயந்து போன நவீன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சோனுவை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சோனுவை பரிசோதித்த டாக்டர்கள் 25 இடங்களில் காயம் இருந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு தையல் போடப்பட்டு சோனுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நவீனை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் சோனுவை நவீன் திட்டமிட்டு தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. சோனு வேலை செய்த ஓட்டலுக்கு முன் கூட்டியே வந்து காத்திருந்த நவீன் வேலை முடித்து சோனு விடுதிக்கு சென்ற போது பின்தொடர்ந்து சென்று கொடூரமாக தாக்கியதும் தெரியவந்தது.

    இதற்காக பல நாட்கள் நவீன் திட்டமிட்டதும் அம்பலமாகி உள்ளது. சோனுவின் முகத்தில் குத்துவதற்காக காலி மதுபாட்டில் ஒன்றை நவீன் பயன்படுத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோனுவை கொலை செய்யும் நோக்கத்தில் நவீன் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நவீனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சோனு, விமான பணிப்பெண்ணாக ஆசைப்பட்டதும், தன்னை காதலிக்காத காரணத்தால் விமானப் பெண் வேலையில் அவர் சேருவதை தடுக்கும் வகையில் நவீன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    • பிளஸ்-2 மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    • தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் தும்சா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து வரும் பிளஸ்-2 மாணவியை ஜார்க்கண்ட் வாலிபர் ஷாருக் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். இந்த காதலை ஏற்க மாணவி மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஷாருக் சம்பவத்தன்று மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் மாணவி அலறினார்.

    உடல் கருகிய நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி அறிந்த மாணவியின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். சம்பந்தப்பட்ட வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தும்ஷா நகரில் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இச்சம்பவம் தொடர்பாக ஷாருக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிளஸ்-2 மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ×