search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேர்த்திக்கடன்"

    • குதிரை வாகனத்தில் முனீஸ்வரன் வீதிஉலா நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி சிங்கப்பெருமாள் குத்தகையில் உள்ள காமாட்சி அம்மன், முனீஸ்வரர் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக முனீஸ்வ ரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    பின், குதிரை வாகனத்தில் முனீஸ்வரன் வீதிஉலா வந்து தீக்குண்டம் முன்பு எழுந்தருளினார்.

    பின்னர், ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும், அப்பகுதி பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மாதானம் கிராமத்தில் புகழ்பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது.

    இங்கு 500 வருடங்களுக்கு முன்பு துண்டு துண்டாக வெட்டி போடப்பட்டிருந்த புளியமரம் மீண்டும் துளிர்த்து மரமாக இருந்து வருவதை இன்றும் கோயில் வளாகத்தில் பார்க்கலாம்.

    அன்று முதல் இக்கோயிலுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

    வருடம் தோறும் ஆடி மாத கடை வெள்ளியில் நடைபெறும் தீமிதி திருவிழாவில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

    மேலும் இங்கு தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலிருந்தும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

    வருடம் தோறும் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

    கடந்த காலங்களில் மாதானம் தீமிதி திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த நடைமுறையை பின்பற்றி இந்த ஆண்டும் ஆகஸ்ட 11ம் தேதி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்திட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 7 நாள் விரதம் இருந்து அரிவாள்கள் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • தயார் செய்யப்பட்ட அரிவாள்களுக்கு பூஜை செய்யப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அரிவாள் செய்யும் பட்டறைகள் உள்ளன. இங்கு கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அரிவாள்கள் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜெயங்கொண்டநிலை பகுதியை சேர்ந்த குடும்பத்தார்கள் சார்பில் நேர்த்திகடனுக்காக மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு 18 அடி உயரத்தில், 200 கிலோவில் 2 அரிவாள்கள் செய்ய இங்குள்ள சேகர் அரிவாள் பட்டறையில் உத்தரவு வழங்கப்பட்டது.

    இதனை செய்ய பட்டறை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் 7 நாள் விரதம் இருந்து பணியில் ஈடுபட்டனர். தயார் செய்யப்பட்ட அரிவாள்களுக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அந்த அரிவாள்கள் லாரி மூலம் அழகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    • பக்தர்கள் சார்பில் 355 ஆடுகள் மற்றும் ஏராளமான கோழி, சேவல்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன.
    • தயாரிக்கப்பட்ட அசைவ உணவு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த ஆர்.கோம்பை கிராமத்தில் வந்தவழி பெரியகருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த வருடத்திற்கான திருவிழாவை முன்னிட்டு கோவிலில் நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் ஆடுகள், அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கினர்.

    பக்தர்கள் சார்பில் 355 ஆடுகள் மற்றும் ஏராளமான கோழி, சேவல்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன. இவற்றை கொண்டு ராட்சத அண்டாக்களில் அசைவ உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றது. பெரியகருப்பசாமிக்கு படையல் இடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    அதனைதொடர்ந்து தயாரிக்கப்பட்ட அசைவ உணவு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. பிற்பகலில் தொடங்கிய இந்த விருந்து இரவு வரை நீடித்தது. இந்த விழாவில் ஆர்.கோம்பை மட்டுமின்றி சுற்றுப்புரத்தை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு கருப்பசாமியை வழிபட்டு சென்றதுடன் விருந்திலும் பங்கேற்று உணவருந்தி சென்றனர்.

    • தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கவியரசன் அழைத்து வரப்பட்டார்.
    • கவியரசன் முழு உடல் தகுதியுடன் வர வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலை விபத்தில் சிக்கியவர் கோமா நிலையில் இருந்து மீண்டு முழு உடல் நலம் பெற வேண்டி கிராம மக்கள் அனைவரும் கூடி திருஷ்டி பரிகாரம் செய்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பே, தாதம்பட்டியை சார்ந்தவர் கவியரசன் (வயது 24). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று சுஜி என்ற மனைவியும் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி கவியரசன் தனது உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வரும்போது, எதிர்பாராத விதமாக கோட்டைமேடு என்ற இடத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    ஆபத்தான நிலையில் தலையில் அடிபட்ட அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 4 மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் திருமணம் ஆகி 3 ஆண்டுகளில் விபத்தில் சிக்கி தனது கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவது அவரது மனைவி சுஜிக்கு பெருத்த மனவேதனை ஏற்படுத்தி உள்ளது.

    இதை தனது தாயிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதை அறிந்த சுஜியின் தாயார் தனது மருமகன் உடல் நலத்துடன் மீண்டு வர வேண்டும் என்றால் குலதெய்வத்திடம் நேர்த்திக்கடன் செலுத்தி ஆடிப் பண்டிகை என்பதால் அம்மனுக்கு பலியிட்டு திருஷ்டி கழித்தோம் என்றால் உடல் நலத்துடன் வருவார் என்று நம்பிக்கையூட்டியுள்ளார்.

    இதன் பேரில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் கவியரசனை மருத்துவமனையின் அனுமதியுடன் விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாக வரவழைக்க முடிவு செய்தனர். அதன்படி சேலம் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கவியரசன் அழைத்து வரப்பட்டார்.

    விபத்து நடந்த கோட்டைமேடு பகுதியில் பே.தாதம்பட்டி கிராம மக்கள் ஒன்று கூடி அவர்களின் குலதெய்வமான காளியம்மன், வேடியப்பன் ஆகிய இரு தெய்வங்களையும் தேரில் அமர வைக்கப்பட்டு மிகவும் பயபக்தியுடன் பரிகார பூஜைகள் செய்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து விபத்தில் சிக்கி காயம் அடைந்த கவியரசன் முன்பு ஆட்டு கிடா வெட்டி திருஷ்டி கழித்தனர்.

    அப்போது சக்தி வாய்ந்த காளியம்மன் மற்றும் வேடியப்பன் சாமியை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருக்கும் கவியரசனை சுற்றி பல சுற்றுகள் சுற்றினர், பின்பு சாமி முன்பு கிராம மக்கள் ஒன்று கூடி மீண்டும் கவியரசன் முழு உடல் தகுதியுடன் வர வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சி அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • வல்லாளபட்டியில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
    • கொட்டும் மழையில் சேம குதிரை, நேர்த்திக்கடன் குதிரைகளுடன் பொதுமக்கள், பக்தர்கள், கிராம இளைஞர்கள், ஊர்வலமாக சென்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வவல்லாளப்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 10-ந் தேதி திருவிழா தொடங்கியது. 11-ந் தேதி சாமி சிலைகளை தலையில் ஏந்தியபடி ஆற்றுக்காலில் அமைந்துள்ள வட முகத்து கருப்பு கோவிலுக்கு சென்று வழிபட்டனர். 4-வது நாளில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு களரி எடுத்துச் சென்றனர்.

    தொடர்ந்து வல்லாளப்பட்டி நடுவளவு மந்தையிலிருந்து அரிட்டாபட்டியில் உள்ள பெரியகுளத்து கண்மாய் கரையில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்கு பெண்கள் பழைய பாரம்பரிய முறைப்படி பொங்கல் பானையை தலையில் சுமந்து சென்றனர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம், மாவிளக்கு எடுத்து நடுவளவு கோவிலில் இருந்து புறப்பட்டு அரிட்டாபட்டிக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து காமாட்சியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து, சாமியாட்டம் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் 5-வது நாளில் செகுட்டு அய்யனார் கோவிலுக்கு புரவி எடுப்பு விழா நடைபெற்றது. கொட்டும் மழையில் சேம குதிரை, நேர்த்திக்கடன் குதிரைகளுடன் பொதுமக்கள், பக்தர்கள், கிராம இளைஞர்கள், ஊர்வலமாக சென்றனர்.

    • பத்ரகாளியம்மனுக்கு கரக உற்சவம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் காமராஜர் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் பால்குடம் மற்றும் காவடி திருவிழா நடந்தது. முன்னதாக மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரை துலா கட்டத்தில் புனித நீராடிய பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க காப்பு கட்டி பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்த பால்குடத்திற்கு வீடு, வீடாக பக்தர்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

    பின்னர் பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. அங்கு பத்ரகாளியம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால்குடத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பத்ரகாளியம்மனுக்கு கரக உற்சவம் நடந்தது.

    • சக்தி கரகம், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.
    • அம்மன் வீதி உலா வந்தார்.

    கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உற்சவ விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று சக்தி கரகம், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. மின் அலங்கார தேர் பவனியில் அம்மன் வீதி உலா வந்தார். மேலும் பாம்பார்புரம், செல்லபுரம், அப்சர்வேட்டரி, புதுக்காடு ஆகிய இடங்களில் நடந்த மண்டகபடிகளில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

    இதேபோல் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தீச்சட்டி எடுத்து பக்தி பரவசத்துடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அலகு குத்தி பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர் ஒருவர், 20 அடி நீள அலகு குத்தி வந்து மெய்சிலிர்க்க வைத்தார். பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் பவனியாக வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் இறுதி நாளான வருகிற 20-ந்தேதி மறு பூஜை, பாலாபிஷேகம், பால்குடம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியாளர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் பால் குடம் சுமந்தும் காவடி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்,

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற மஹா காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது. இதனையடுத்து தினமும் பல்வேறு நிகழ்சிகள் சிறப்பு அபிசேகம் ஆராதனைகள் நடந்தது.

    அதனை தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் பால் குடம் சுமந்தும் காவடி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர் அம்மனுக்கு பால்குடம் அபிஷேகம் நடைபெற்று.

    தொடர்ந்து கரகம் எடுத்தல், அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனையும் சிங்க வாகனத்தில் அம்மன் வீதியுலா காட்சிகள் நடந்து அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரம் மாவுக்கு போடுதல் அர்ச்சனை சிறப்பு அபிசேகம், அன்னதானம் நடைபெற்றது.

    இரவும் கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது

    . இதில் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துக் கொண்டனர்.

    • 7-ந்தேதி தேரில் அம்பாள் சமயபுரத்துக்கு எழுந்தருள்கிறார்.
    • 16-ந்தேதி விடையாற்றி விழா நடக்கிறது.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் பிரசித்திப்பெற்ற ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனுக்கென்று தனி சன்னதி கிடையாது. ஆண்டு முழுவதும் அகல் விளக்கு தீபமாக காட்சி தரும் அம்மனுக்கு வைகாசி மாதத்தில் 13 நாட்கள் நடைபெறும் திருவிழா பிரசித்திப்பெற்ற திருவிழாக்களுள் ஒன்றாகும்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற நாச்சியார் கோவில் ஆகாசமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் (மே) 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு சமயபுரத்திலிருந்து அம்மன் கோவிலுக்கு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 27-ந் தேதி வீற்றிருந்த திருக்கோலத்திலும், 28-ந் தேதி தஞ்சாவூர் மகாராஜாவால் விருது அளிக்கப்பட்ட லட்சுமி அலங்காரத்திலும், 29-ந் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும் ஆகாசமாரியம்மன் அருள்பாலித்தார்.

    30-ந் தேதி மதன கோபால அலங்காரத்திலும், 31-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், 1-ந் தேதி சேஷ சயன அலங்காரத்திலும், 2-ந் தேதி அம்பாள் அந்தம் வரை வளர்ந்து ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் ஏகாந்த வைபவத்தையொட்டி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

    விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று பெரிய திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தல் உள்பட பல்வேறு விதமான நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    நாச்சியார்கோவில் வீதிகள் அனைத்தும் பக்தர்கள் தலைகளாக காட்சி அளித்தது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து தொட்டில் கட்டியும், பாடை காவடி எடுத்தும், அலகு காவடி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவு வரை பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ஆகாசமாரியம்மன் அருள்பாலிக்கிறார்.

    7-ந் தேதி (புதன்கிழமை) இரவு தேரில் அம்பாள் சமயபுரத்துக்கு எழுந்தருள்கிறார். அப்போது நின்ற திருக்கோலத்தில் வெள்ளிக்குடம் சுமந்தவாறு சமயபுரம் புறப்படுகிறார். வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு விடையாற்றி விழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் துரை. சீனிவாசன் அறங்காவலர்கள் டாக்டர்.எஸ். கோபாலகிருஷ்ணன், டி. ராஜு மற்றும் புராதன கவரையர்கள் செய்து வருகின்றனர்.

    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம், அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • இரவு வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து கோவிலை வந்தடைந்தது.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் வைகாசி பெருந்திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி புறப்பாடு நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம், அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம், அக்னி சட்டி எடுத்து கொண்டு கோவிலுக்கு வந்தனர்.

    அதே போல உருவபொம்மை, ஆயிரங்கண்பானை, 21 அக்னிச்சட்டி, கரும்புதொட்டிலில் குழந்தைகளை எடுத்துவருதல், கரும்புள்ளி, செம்புள்ளிகுத்தி வருதல், அலகு குத்தி வருதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனையும் பக்தர்கள் செலுத்தினார்கள். சோழவந்தான் பேரூராட்சி சார்பாக வைகை ஆற்றை சுத்தம் செய்து கூடுதலாக மின்விளக்கு, குடிநீர்வசதி, கழிப்பறைவசதி செய்திருந்தனர்.

    பக்தர்கள் செல்லக்கூடிய இடங்களில் டிராக்டர்களில் வாட்டர் டேங்க் அமைத்து ரோடுகளில் தண்ணீர் தெளித்தனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சோழவந்தான் முஸ்லிம் ஜமாத் மற்றும் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் பக்தர்களை வரவேற்று பேனர் வைத்திருந்தனர். இரவு வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து கோவிலை வந்தடைந்தது. சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம்அருகே திருப்பனந்தாள் ஒன்றியத்தி லுள்ள அணைக்கரை அருகே ஒழுகச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயில்மி கவும் பிரசித்தி பெற்றது.

    ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவில் நூற்றுக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து வருகின்றனர். காப்பு கட்டுதல் தொடங்கி தினமும் மண்டகப்படி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    அப்போது ஒழுகச்சே ரியை சேர்ந்த புது தெரு சந்திரகாசு மனைவி சரஸ்வதி (வயது 50) என்ற பெண் தீ குண்டத்தில் நிலைதடுமாறி தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×