search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "paal kudam"

    • மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
    • கெங்கையம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை குடியாத்தம் முத்தாலம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்து கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்துவது வழக்கம்.

    அதன்படி ஆனி மாத கடைசி வெள்ளியான நேற்று கெங்கையம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெற்றன.

    தொடர்ந்து 1,501 பெண்கள் பால்குடம் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கெங்கையம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் தேவகி கார்த்திகேயன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பால்குட ஊர்வலத்தை முன்னிட்டு மூலவர் கெங்கையம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கோவில் வளாகத்தில் ஆணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வேப்பிலைக்காரி அம்மனாக பக்தர்களுக்கு கெங்கையம்மன் காட்சியளித்தார்

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி டி.திருநாவுக்கரசு, ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.எஸ். சம்பத், தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன் உள்ளிட்ட விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    • பத்ரகாளியம்மனுக்கு கரக உற்சவம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் காமராஜர் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் பால்குடம் மற்றும் காவடி திருவிழா நடந்தது. முன்னதாக மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரை துலா கட்டத்தில் புனித நீராடிய பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க காப்பு கட்டி பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்த பால்குடத்திற்கு வீடு, வீடாக பக்தர்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

    பின்னர் பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. அங்கு பத்ரகாளியம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால்குடத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பத்ரகாளியம்மனுக்கு கரக உற்சவம் நடந்தது.

    • தெலுங்கு வருட பிறப்பு வெகு விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
    • சடையப்பன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    திருப்பூர் :

    ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தெலுங்கு வருட பிறப்பு வெகு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு யுகாதி பண்டிகையானது இன்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் துவங்கப்படும் காரியங்கள் பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்கும் என்பதால் ஏராளமானோர் புதிய தொழில்களை இந்த நாளில் தொடங்கினர்.

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வது வார்டு வாலிபாளையம் பகுதியில் பழமையான சடையப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம். யுகாதி திருவிழாவை முன்னிட்டு வாலிபாளையம் பகுதியில் உள்ள சடையப்பன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். 

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகை பப்ளிக் ஆபிஸ் ரோட்டில் அனிச்சியக்குடி முச்சந்தி மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பொங்கல் விழா மற்றும் முளைப்பாரி விதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று காலை தர்மகோவில் தெருவில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து மதியம் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம், அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • இரவு வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து கோவிலை வந்தடைந்தது.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் வைகாசி பெருந்திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி புறப்பாடு நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம், அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம், அக்னி சட்டி எடுத்து கொண்டு கோவிலுக்கு வந்தனர்.

    அதே போல உருவபொம்மை, ஆயிரங்கண்பானை, 21 அக்னிச்சட்டி, கரும்புதொட்டிலில் குழந்தைகளை எடுத்துவருதல், கரும்புள்ளி, செம்புள்ளிகுத்தி வருதல், அலகு குத்தி வருதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனையும் பக்தர்கள் செலுத்தினார்கள். சோழவந்தான் பேரூராட்சி சார்பாக வைகை ஆற்றை சுத்தம் செய்து கூடுதலாக மின்விளக்கு, குடிநீர்வசதி, கழிப்பறைவசதி செய்திருந்தனர்.

    பக்தர்கள் செல்லக்கூடிய இடங்களில் டிராக்டர்களில் வாட்டர் டேங்க் அமைத்து ரோடுகளில் தண்ணீர் தெளித்தனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சோழவந்தான் முஸ்லிம் ஜமாத் மற்றும் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் பக்தர்களை வரவேற்று பேனர் வைத்திருந்தனர். இரவு வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து கோவிலை வந்தடைந்தது. சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    கொடைக்கானல் நகர் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவில் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.
    கொடைக்கானல் நகர் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவில் பெருந்திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் சார்பில் மண்டகப்படிகள் நடைபெற்றது. அத்துடன் திருக்கல்யாணம், மலர்வழிபாடு விழா, ஊஞ்சல் உற்சவம், பூச்சொரிதல் நடந்தது.

    மேலும் பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி, பறவைக் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
    மகா முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்றில் இருந்து பால் குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
    ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார்நத்தத்தில் உள்ள மகா முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்றில் இருந்து பால் குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும், விழா கமிட்டியினரும் இணைந்து செய்திருந்தனர். விழாவையொட்டி கிராமம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி, 1,008 சுமங்கலி பூஜை நடந்தது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் காலை 7.30 மணிக்கு கணபதி வழிபாடு, விநாயகர் வேள்வி, இளைஞர் பூஜை, நிறை அவி அளித்தல், 9 மணிக்கு நவக்கிரக வழிபாடு, 10 மணிக்கு குபேர வழிபாடு, செல்வ வழிபாடு, பசு பூஜை, 10.30 மணிக்கு லட்சுமி ஹோமம், 11 மணிக்கு 1,008 கலச பூஜை, இறைவி வேள்வி, திருமுறைகள் ஓதுதல், மதியம் 12 மணிக்கு 1,008 கலசம் சிறப்பு நன்னீராட்டு, சிறப்பு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு 1,008 சுமங்கலி பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

    தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு 1,008 சங்கு பூஜை, இறைவன் வேள்வி, வேதம் திருமுறை ஓதுதல், அன்னதானம், 10 மணிக்கு சூரசம்ஹார கடற்கரையில் இருந்து 504 பால்குட ஊர்வலம், மதியம் 12 மணிக்கு 1,008 சங்காபிஷேகம், 504 பால்குட அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மதியம் 1 மணிக்கு திருமண தோஷம் விலக வேண்டி சிறப்பு அர்ச்சனை, மாலை 6.30 மணிக்கு 5004 மாவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு இறைவன், இறை விக்கு புஷ்பாஞ்சலி, அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தன. ஏற்பாடுகளை குலசை முத்தாரம்மன் தசரா குழு மற்றும் தமிழ்நாடு கல்வி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் விமான கலசங்களுக்கும், சுவாமி-அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி, வருசாபிஷேகம் நடந்தது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் வருசாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 11 மணி அளவில் கோவில் விமான கலசங்களுக்கும், சுவாமி-அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி, வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் சங்காபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

    மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அம்மன் தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியன், கட்டளைதாரர் சலவையாளர், கலா தசரா குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
    பெரிய காளியம்மன் கோவில் திருவிழாவின் இறுதிநாளான நேற்று நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குடத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்தனர்.
    கொடைக்கானல் நகர் டோபிகானல் பகுதியில் பெரிய காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பொங்கல் வைத்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் இறுதிநாளான நேற்று நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குடத்துடன் டெப்போ காளியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் டோபிகானல் இளைஞர் அணியினர் செய்து இருந்தனர்.
    பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் மற்றும் அன்ன அபிஷேகம் நடந்தது.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவையொட்டி 2 ஆயிரத்து 7 பால்குட ஊர்வலம் நடந்தது. முன்னதாக காந்திரோட்டில் உள்ள பாண்டிய வேளாளர் சமூக திருமண மண்டபத்துக்கு, பழனி நகரின் 33 வார்டுகளை சேர்ந்த பெண்கள் மஞ்சள் புடவை அணிந்து பால்குடத்துடன் நேற்று காலை வந்தனர்.

    பின்னர் அங்கு பால்குடத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு நடந்த உச்சிக்கால பூஜையில் மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    அதன்பிறகு மாலை 4 மணி அளவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மாரியம்மனுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. மாலை 5 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது, அன்ன அபிஷேகம் மற்றும் அலங்காரங்களை பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய குருக்கள் கோவில் முறை பண்டாரங்கள் செய்தனர்.

    விழாவையொட்டி 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் தனசேகர், பழனிவேல், கார்த்திக், பாண்டிய வேளாளர் சங்க பிரமுகர் பெருமாள், சாய்கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் சுப்புராஜ், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், கொங்குவேளாளர் பிரமுகர் மாரிமுத்து, வக்கீல் கல்யாணசுந்தரம் மற்றும் பழனி வ.உ.சி. மன்றம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மிராஸ் பண்டாரங்கள் சங்கம், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சங்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    பால்அபிஷேகம் செய்து தெய்வங்களை நாம் குளிர்ச்சிப்படுத்தினால் அவர்கள் மனம் குளிர்ந்து வரம் தருவார்கள் என்பது நம்பிக்கை.
    அம்பிகைக்கும், ஆறுமுகப் பெருமானுக்கும் நேர்த்திக் கடனாகப் பால்குடம் எடுப்பது வழக்கம். இதுபோன்ற நேர்த்திக் கடன்களின் வாயிலாக, நம்முடைய வாழ்வில் ஏற்படும் துயரங்களில் இருந்து விடுபட இயலும்.

    பால் வெண்மை நிறம் உடையது. நம்முடன் பழகுபவர்கள் வெள்ளை மனம் படைத்தவர்களாக அமைந்து, நமக்கு வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்பதற்கான பரிகாரம் இது.

    மேலும் இந்தப் பால்அபிஷேகம் செய்து தெய்வங்களை நாம் குளிர்ச்சிப்படுத்தினால் மனம் குளிர்ந்து வரம் தரும் என்பது நம்பிக்கை.
    ×