search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலசேகரன்பட்டினம்  முத்தாரம்மன் கோவிலில் 1,008 சுமங்கலி பூஜை
    X

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 1,008 சுமங்கலி பூஜை

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி, 1,008 சுமங்கலி பூஜை நடந்தது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் காலை 7.30 மணிக்கு கணபதி வழிபாடு, விநாயகர் வேள்வி, இளைஞர் பூஜை, நிறை அவி அளித்தல், 9 மணிக்கு நவக்கிரக வழிபாடு, 10 மணிக்கு குபேர வழிபாடு, செல்வ வழிபாடு, பசு பூஜை, 10.30 மணிக்கு லட்சுமி ஹோமம், 11 மணிக்கு 1,008 கலச பூஜை, இறைவி வேள்வி, திருமுறைகள் ஓதுதல், மதியம் 12 மணிக்கு 1,008 கலசம் சிறப்பு நன்னீராட்டு, சிறப்பு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு 1,008 சுமங்கலி பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

    தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு 1,008 சங்கு பூஜை, இறைவன் வேள்வி, வேதம் திருமுறை ஓதுதல், அன்னதானம், 10 மணிக்கு சூரசம்ஹார கடற்கரையில் இருந்து 504 பால்குட ஊர்வலம், மதியம் 12 மணிக்கு 1,008 சங்காபிஷேகம், 504 பால்குட அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மதியம் 1 மணிக்கு திருமண தோஷம் விலக வேண்டி சிறப்பு அர்ச்சனை, மாலை 6.30 மணிக்கு 5004 மாவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு இறைவன், இறை விக்கு புஷ்பாஞ்சலி, அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தன. ஏற்பாடுகளை குலசை முத்தாரம்மன் தசரா குழு மற்றும் தமிழ்நாடு கல்வி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×