search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nirthikkadan"

    • வல்லாளபட்டியில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
    • கொட்டும் மழையில் சேம குதிரை, நேர்த்திக்கடன் குதிரைகளுடன் பொதுமக்கள், பக்தர்கள், கிராம இளைஞர்கள், ஊர்வலமாக சென்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வவல்லாளப்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 10-ந் தேதி திருவிழா தொடங்கியது. 11-ந் தேதி சாமி சிலைகளை தலையில் ஏந்தியபடி ஆற்றுக்காலில் அமைந்துள்ள வட முகத்து கருப்பு கோவிலுக்கு சென்று வழிபட்டனர். 4-வது நாளில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு களரி எடுத்துச் சென்றனர்.

    தொடர்ந்து வல்லாளப்பட்டி நடுவளவு மந்தையிலிருந்து அரிட்டாபட்டியில் உள்ள பெரியகுளத்து கண்மாய் கரையில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்கு பெண்கள் பழைய பாரம்பரிய முறைப்படி பொங்கல் பானையை தலையில் சுமந்து சென்றனர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம், மாவிளக்கு எடுத்து நடுவளவு கோவிலில் இருந்து புறப்பட்டு அரிட்டாபட்டிக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து காமாட்சியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து, சாமியாட்டம் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் 5-வது நாளில் செகுட்டு அய்யனார் கோவிலுக்கு புரவி எடுப்பு விழா நடைபெற்றது. கொட்டும் மழையில் சேம குதிரை, நேர்த்திக்கடன் குதிரைகளுடன் பொதுமக்கள், பக்தர்கள், கிராம இளைஞர்கள், ஊர்வலமாக சென்றனர்.

    • இக்கோவிலில் 32 அடி உயரத்தில் வாழ்முனீஸ்வரரின் பிரம்மாண்ட சுதையினால் செய்யப்பட்ட சிலை மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
    • தீமிதி திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே மகிழியில் அமைந்துள்ள 32அடி உயரவாழ் முனீஸ்வரர் கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த மகிழி கிராமத்தில் புகழ்பெற்ற வாழ்முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 32அடி உயரத்தில் வாழ்முனீஸ்வரரின் பிரம்மாண்ட சுதையினால் செய்யப்பட்ட சிலை மிகவும் பிரபலமான ஒன்றாகும்.கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆனி ஆண்டுத் திருவிழா கடந்த 17-ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.

    முக்கிய விழாவான தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து பம்பை மேள வாத்தியங்களுடன் பூந்தேர் மற்றும் பூங்கரகம் புறப்பாடாகி அழைத்துச் சுற்றி வலம் வந்தது. அதைத்தொடர்ந்து வாழ்முனீஸ்வரர் மற்றும் காத்தாயி அம்மனுக்கு சிறப்பு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×