முனீஸ்வரர் கோவிலில் தீமிதி விழா

இக்கோவிலில் 32 அடி உயரத்தில் வாழ்முனீஸ்வரரின் பிரம்மாண்ட சுதையினால் செய்யப்பட்ட சிலை மிகவும் பிரபலமான ஒன்றாகும்.தீமிதி திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முனீஸ்வரர் கோவிலில் தீமிதி விழா
Published on

நாகப்பட்டினம்:

நாகை அருகே மகிழியில் அமைந்துள்ள 32அடி உயரவாழ் முனீஸ்வரர் கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த மகிழி கிராமத்தில் புகழ்பெற்ற வாழ்முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 32அடி உயரத்தில் வாழ்முனீஸ்வரரின் பிரம்மாண்ட சுதையினால் செய்யப்பட்ட சிலை மிகவும் பிரபலமான ஒன்றாகும்.கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆனி ஆண்டுத் திருவிழா கடந்த 17-ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.

முக்கிய விழாவான தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து பம்பை மேள வாத்தியங்களுடன் பூந்தேர் மற்றும் பூங்கரகம் புறப்பாடாகி அழைத்துச் சுற்றி வலம் வந்தது. அதைத்தொடர்ந்து வாழ்முனீஸ்வரர் மற்றும் காத்தாயி அம்மனுக்கு சிறப்பு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com