search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Politely"

    • ஆயக்காரன்புலம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்றது.
    • மாவிளக்கு போடுதல், பால்குடம், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    முன்னதாக அம்மனுக்கு அர்ச்சனை செய்தல், மாவிளக்கு போடுதல், பால்குடம், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.

    தொடர்ந்து, அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று.

    பின்னர், வண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்டு தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதிஉலா நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த ஆடுதுறை மாமரத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா கடந்த 5-ந்தேதி காப்பு கட்டுதல், பூச்சொரிதலுடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதிஉலா நடைபெற்றது.

    விழாவில் அம்பாள் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டு வீதிஉலா நடைபெற்றது.

    தொடர்ந்து, விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், அழகு காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர், தீமிதி விழா நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து, சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் மாவிளக்கு போட்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டாண்மைகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • ஆடி கடைசி வெள்ளியை யொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்ததிக்கடன் செலுத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதானம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி துண்டுகளாக போடப்பட்ட புளியமரம் மீண்டும் துளிர்விட்டு பெரிய மரமாக காட்சியளித்து வருகிறது.

    இந்த கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி க்கிழமையையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மாலை சித்தர்கள் கரகம் மற்றும் காவடி எடுத்து வந்து கோயில் முன்புறம் உள்ள கீழ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 10,000 பேர் கலந்துகொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்ததிக் கடன் செலுத்தினர்.

    விழாவை முன்னிட்டு சீர்காழி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சீர்காழி மற்றும் சிதம்பரத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா விற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுது றை ஏ.டி.எஸ்.பி வேனு கோபால் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை ஈடுபட்டிருந்தனர்.

    சீர்காழி தீயணைப்பு அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுக ளை கிராம மக்கள் சார்பில் முத்து மாரியம்மன் கோயில் ஆலய அறங்காவலர் நடராஜ் செய்திருந்தார்.

    • குதிரை வாகனத்தில் முனீஸ்வரன் வீதிஉலா நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி சிங்கப்பெருமாள் குத்தகையில் உள்ள காமாட்சி அம்மன், முனீஸ்வரர் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக முனீஸ்வ ரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    பின், குதிரை வாகனத்தில் முனீஸ்வரன் வீதிஉலா வந்து தீக்குண்டம் முன்பு எழுந்தருளினார்.

    பின்னர், ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும், அப்பகுதி பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அரையபுரம் தட்டுமால் படுகையில் உள்ள சுந்தர காளியம்மன் கோவிலில் 7-ம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    அது சமயம், குடமுருட்டி ஆற்றில் இருந்து கரகம், பால்குடம், அழகு காவடி எடுத்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    ×