search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூற்றாண்டு விழா"

    • மதுரை வாடிப்பட்டி ஜெமினி பூங்கா முன்பு மூவேந்தர் முன்னேற்ற கழக கொடியேற்று விழா நடந்தது.
    • மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி ஜெமினி பூங்கா முன்பு மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தந்தை மாரியப்ப வாண்டையாரின் நினைவு தினம் மற்றும் பி.கே.மூக்கையா தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் நாகராஜன், மாநில இணை தலைவர் ஆறுமுக நாட்டார், மாவட்ட தலைவர் கணேசன் முன்னிலை வகித்துனர்.

    மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன் வரவேற்றார். தென் மண்டல தலைவர் குஷி செந்தில் கொடியேற்றினார். மறத்தமிழர் சேனை மாநில துணை பொதுச்செயலாளர் ஆதி முத்துக்குமார், மாவட்ட செயலாளர் மருதுபாண்டி, நிர்வாகிகள் வையாபுரி, கருப்பையா, முத்துமணி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் மருதுபாண்டி நன்றி கூறினார்.

    • விழாவுக்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
    • சபாநாயகர் அப்பாவு பள்ளிக்கு நிலம் மற்றும் அரங்கம் அளித்த நன்கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து கவுரவித்து, பள்ளி நூற்றாண்டு மலரை வெளியிட்டார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலை யரங்கத்தில் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் பள்ளி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு பள்ளிக்கு நிலம் மற்றும் அரங்கம் அளித்த நன்கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து கவுரவித்து, பள்ளி நூற்றாண்டு மலரை வெளியிட்டார். முதல் பிரதியை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பெற்றுக் கொண் டார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    1930-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்திற்குத் ராவ் பகதூர் ஈசுவரன் பிள்ளை தலைவரானார். தென்காசி போர்டு உயர்நிலைப் பள்ளிக்கு சிறந்த கட்டிடம் ஒன்று கட்டவேண்டுமென்று நினைத்தார். அதற்காக பொதுமக்களை அழைத்து பேசி, சமாதான முறையிலேயே இன்றுள்ள பள்ளிக் கூடத்தை சுற்றியுள்ள 20 ஏக்கர் நிலத்தை வாங்கி வழங்கினார்.

    தற்காலிகமாக 1934-ல் ஒரு கட்டிடத்தையும் கட்டித் தந்தார். தண்ணீர் வசதிக்காக இப்பொழுதுள்ள கிணற்றையும் வெட்டித் தந்தார். ஈஸ்வரன் பிள்ளை அவர்களின் மருமகனான சிதம்பரம் தன் மாமனாரைப் போல வள்ளலாகவே வாழ்ந்து காட்டியவர். ஆன்மீகம், கல்வி, ஏழை களுக்கு உதவுதல், பசியால் வாடுகிறவர்களுக்கு தினந்தோறும் வீட்டில் வாழை இலை விருந்து படைத்த வருமாவார் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்து பல்வேறு சமூகப் பணியும் ஆற்றியவர்.

    கேடில் விழுச்செல்வ மாகிய கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வளவு பெரிய மைதானத்தை இப்பள்ளிக்கு வழங்கி பல லட்சக்கணக்கான மாணவர்களிடத்தில் அறிவெனும் தீபமேற்றி அவர்கள் வாழ்வில் வெற்றி நடை போட காரணமாக இருந்த ராவ்பகதூர் இ.சி.ஈஸ்வரன் பிள்ளை புகழ் உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும் என்று கூறி அன்னாரின் பெயரில் செயல்படும் இந்த பள்ளியானது நூறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்நன்னாளில், இப்பள்ளியில் பணியாற்றிய முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவச் செல்வங்கள், தற்போது பணியாற்றும் தலைமை யாசிரியர், இருபால் ஆசிரியர்கள் அனைவரையும் வாழ்த்தி இப்பள்ளி மேலும் பல சாதனைகளைப் படைத்து கல்வியில் சிகரம் தொட்டு சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தூர் பாண்டி வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார் (தென்காசி), ராஜா (சங்கரன் கோவில்), தி.சதன் திருமலைக்கு குமார் (வாசு தேவநல்லூர்) தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் பொ. சிவ பத்மநாபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தாமஸ் தனராஜ் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், முன்னாள் ஆசிரி யர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சோலூர்மட்டம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தேனாடு ஊராட்சி தலைவர் ஆல்வின் கலந்து ெகாண்டார். கோத்தகிரி வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன், பள்ளி மேலாண்மை குழு தலைவி மலர்விழி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் டோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு ஆகியவை வழங்கப்பட்டது.

    • சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
    • சமூக நீதிக்காகவும், மனிதர்களின் ஒற்றுமையை மேம்படுத்திடவும் கல்வி உதவுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள கார்மல் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று பள்ளி மைதானத்தில் நடந்தது.

    விழாவிற்கு பள்ளி வளாக பொருளாளர் குமார் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஜேசு நேசம் வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியர் மரியா பாஸ்டின் துரை ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குழந்தைகளின் திறமை களை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்கு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ளது. நான் (அப்பாவு) நெல்லை மாவட் டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினேன் ஆசிரியர் பணி என்பது ஒரு தன்னலமற்ற பணியாகும்.

    திறன் மிக்க மனிதர்கள், பல அறிஞர்கள், தலைவர்களையும் உருவாக்கியது பள்ளிகள் தான்.

    கேரளாவுடன் குமரி இணைந்திருந்தபோது, கல்வி உரிமை மறுக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக குமரி மாவட்டம் திகழ்கிறது. குமரி மாவட்டத்தில் முதன் முதலில் கல்வியை கொண்டு வந்த பெருமை பங்குதந்தைகளை சேரும். அதாவது 1806-ம் ஆண்டு குமரி மாவட்டம் மயிலாடியில் பங்குதந்தைகளால் முதன் முதலில் பள்ளி கொண்டு வரப்பட்டது.

    தி.மு.க.எப்போதும் மக்களின் நலனுக்காக பாடுபடும் கட்சி. மாணவர்களின் கல்வி, விவசாயிகள், சிறுபான்மையினர், மாநிலத்தின் வளர்ச்சிக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கி வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சி, சமூக நீதியை தி.மு.க. அரசு இரு கண்களாக கொண்டு ஆட்சி செய்து வருகிறது.

    சாதி, மதம் கொண்டு அரசியல்செய்யும் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது தி.மு.க. அரசு. சமூக நீதிக்காகவும், மனிதர்களின் ஒற்றுமையை மேம்படுத்திடவும் கல்வி உதவுகிறது.

    'இந்த கல்வியை வியாபாரமாக சிலர் செய்வது வேதனை அளிக்கிறது. அய்யா வைகுண்டர் குமரி மாவட்டத்தில் சாதி வேற்றுமையை ஒழித்தார். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் தமிழக மக்கள்.

    சாதி, மதம் வைத்து அரசியல்செய்ய நினைப்பவர்களுக்கு தமிழகத்தில் இடம் கிடையாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அதிக என்ஜினீயரிங் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பது தி.மு.க. அரசு தான். காமராஜரை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத்தொடர்ந்து பள்ளிகளில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு சபாநாயகர் அப்பாவு மற்றும் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, பள்ளி தாளாளர் ஜெரோம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, வடக்கு பகுதி தி.மு.க. செயலாளரும், 16-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஜவஹர், தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் லீனஸ்ராஜ், 33-வது வார்டு வட்ட செயலாளர் அமலராஜா, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி மரிய ஜான் கென்னடி, வக்கீல் பாபா, சீலன்ஸ் பல் மருத்துவமனை டாக்டர் பிராங்கிளின் ஜெயசீலன், சிவா மருத்துவமனை சிவக்குமார் மற்றும் ஆனந்த ஜெபஸ்டிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
    • அனைத்து பொருட்களையும் வாங்க நிதிகளை திரட்டினர்.

    கோத்தகிரி

    கோத்தகிரி பகுதியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பள்ளி புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியாகும். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றினைக்கும் பணியை கடந்த 3 மாதங்களாக மேற்கொண்டு 50 சதவிகித மாணவர்களை ஒன்றிணைத்து இந்த பள்ளியின் நூற்றாண்டு விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர். விழாவிற்கு வந்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு விளையாட்டு பொருட்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பள்ளிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க நிதிகளை திரட்டினர்.  

    • 100 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
    • மாணவர்களின் 150 அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான 2 நாள் அறிவியல் கண்காட்சி நேற்று தொடங்கியது. பள்ளி தலைமையாசிரியர் மரிய பாஸ்டின் துரை தலைமை தாங்கினார். ஆசிரியர் அலுவலர் செயலாளர் பபிலன் முன்னிலை வகித்தார். கார்மல் அறிவியல் மன்றத்தின் தலைவர் பாபு சைமன்ராஜ் வரவேற்றார். மாணவர்கள் இறைவணக்கம் பாடினர்.

    பள்ளி தாளாளர் ஜெரோம் பேசினார். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி சவேரியார் ஆராய்ச்சி மைய இயக்குனரும் பூச்சியியல் துறை விஞ்ஞானியுமான இன்னாச்சிமுத்து பேசியதாவது:-

    மாணவர் பருவம் மகத் தான பருவம். எதனையும் கேள்விகளுக்கு உட்படுத்தி ஆராய்ச்சி செய்து பார்க்கும் பருவமாகும். உலகில் சிறந்த படைப்புகள் அனைத்தும் ஏன்? எதற்கு? எப்படி? போன்ற கேள்விகளை கேட்பதன் மூலமே உருவாகியுள்ளன. எனவே நாம் காணும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கேள்விகளுக்கு உட்படுத்தி அவற்றிற்கான தீர்வுகளை கண்டறிய முயல வேண்டும்.

    அதற்கு இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகள் உறு துணையாக அமையும். அறிவியல் தொழில் நுட்பங்கள் இன்றி உலகு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகள் தான் மாற்றத்திற்கான அடித்தளமாக உள்ளது. அந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் கண் டு பிடிப்பதற்கு இது போன்ற அறிவியல் கண்காட்சிகள் உந்து சக்தியாக அமையும்.

    இந்த கண்டுபிடிப்புகளை பார்க்கும் மாணவர்கள் நாமும் புதியவற்றை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர் டேவிட்ராஜ் எழுதி இசை அமைத்த கார்மல் பள்ளி நூற்றாண்டு விழா இசை சி.டி.யை இன்னாசிமுத்து வெளியிட உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் பெற்றுக் கொண்டார். அறிவியல் கண்காட்சியின் ஒருங்கி ணைப்பாளர் ஜெகசீலன் நன்றி கூறினார். நிகழ்ச்சி களை ஆசிரியர்கள் பினு மோன், ராஜ்குமார் ஆகி யோர் தொகுத்தனர்.

    கண்காட்சியில் 100 பள்ளிகளில் இருந்து 150 அறிவியல் கண்டு பிடிப்புகள் காட்சி படுத்தப்பட்டு உள்ளன. பல்வேறு கல்லூரிகள் சார்பாக அரங்கம் அமைக்கப்பட்டு கல்லூரி மாணவர்களது படைப்புகள் காட்சி படுத்தப்பட்டு இருந்தன. மேலும் கூடங்குளம் அணு மின் நிலையம், மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை நிறுவனம், கேரளாவில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப கழகம், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், வேளாண்மை துறை, மாவட்ட தொழு நோய் விழிப்புணர்வு திட்ட மையம், தமிழ் நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை சார்பாக அரங்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

    இந்த கண்காட்சி இன் றும் நடைபெற்றது. இதில் பங்கேற்றுள்ள பள்ளி களில் நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பிரிவு 3 பிரிவுக ளிலும் முதல் 3 இடங் களை பெறுபவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப் படும். இங்கு வைக்கப்பட்டுள்ள அறிவியல் கண்டு பிடிப்பு களை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவி கள், பொதுமக்கள் பார்த்து சென்றனர்.

    இதற் கான ஏற்பாடுகளை கார்மல் பள்ளி நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேசுநேசம் தலைமையில், ஆசிரியர், அலுவலர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    • ரெயில்வே வளர்ச்சி குழு நிர்வாகிகள் கூட்டம் அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
    • திருச்செந்தூர் - சென்னைக்கு நேரடி விரைவு ரெயில் இயக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் ரெயில்வே வளர்ச்சி குழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தங்கமணி முன்னிலை வகித்தார். அமிர்தராஜ் வரவேற்று பேசினார்.

    நெல்லை - திருச்செந்தூர் இடையில் மின்சார ரெயில் திட்டத்தை வேகப்படுத்தி செயல்முறைக்கு கொண்டு வந்துள்ள தென்னக ரெயில்வே மண்டல மேலாளரை பாராட்டியும், இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நூற்றாண்டு விழா கொண்டாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் நெல்லை - திருச்செந்தூர் இடையிலான ரெயில்வே திட்டத்தை கொண்டுவர அயராது பாடுபட்ட அப்போதைய நெல்லை ஜில்லா போர்டு மெம்பரான ஆறுமுகநேரியை சேர்ந்த டோகோ. பொன்னையா நாடாருக்கு நினைவுத்தூண் அமைப்பது என்றும், ஆறுமுகநேரி ரெயில் நிலைய அணுகு சாலையை தார் சாலையாக மாற்றக் கோரியும், திருச்செந்தூர் - சென்னைக்கு நேரடி விரைவு ரெயில் இயக்க வலி யுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நிர்வாகிகள் முருகேச பாண்டியன், சுகுமார், நடராஜன், வெங்க டேசன், மனோகரன்,கற்பக விநாயகம், கணேஷ் மூர்த்தி, சண்முக சுந்தரம், கந்தபழம், குருசாமி, சீனிவாசன், தங்கேஸ்வரன், சுந்தர், லிங்க பாண்டி, கணேசன் ஆகி யோர் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.

    • உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமையில் பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

    இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் அணி சார்பில் பொதுமக்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் பழச்செடிகள் மற்றும் விதைகளை மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ர மணன், ஜி.கே.உலக பள்ளி இயக்குனர் சந்தோஷ் காந்தி, மாவட்ட துணை செயலாளர் அமுதா, நகர செயலாளர் பூங்காவனம், வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, வாலாஜா நகர செயலாளர் தில்லை, நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார், மாவட்ட விவசாய அணி வெங்கடேசன், திமுக நிர்வாகிகள் வேதா சீனிவாசன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து முத்துக்க டையில் நகர திமுக சார்பில் அல ங்கரிக்கப்பட்ட அன்பழகன் உருவபடத்திற்கு வினோத் காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

    • அரக்கோணம் நகர தி.மு.க. சார்பில் நடந்தது
    • நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் சுவால்பேட்டை பகுதி பிள்ளையார் கோயில் அருகே பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம நகர செயலாளர் வி.எல்.ஜோதி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் பங்கேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர். வினோத் காந்தி, தலைமை கழக பேச்சாளர் சேப்பாக்கம் பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மு கண்ணையன், முன்னாள் மாவட்ட துணைத் செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், சௌந்தர், வடிவேலு பசுபதி, பெருமாள், நாகராஜன், ஜனார்த்தனன், என் ஆர் சீனிவாசன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சிட்டிபாபு, கிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடி நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி பேசினார்.

    காரைக்குடி

    காரைக்குடி நகர தி.மு.க. சார்பில் முன்னாள் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் 5 விளக்கு அருகில் நடந்தது. மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி பேசினார். நகர்மன்ற தலைவர் முத்துதுரை வரவேற்றார். நகர செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர்கள் தாமரை பாரதி, அறந்தை செல்வம், பா.கணேசன், ஓசூர் அப்துல் பாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாவட்ட துணை செயலாளர் ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சசிவர்ணன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதாசெந்தில், ஒன்றிய செயலாளர்கள் கே.ஆர்.ஆனந்தன், சின்னதுரை, பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் சத்யா ராஜா, நகர தலைவர் சன்சுப்பையா, கவுன்சிலர்கள் அன்னை மைக்கேல், பேராசிரியை கலாகாசிநாதன், ஹரிதாஸ், தனம்சிங்கமுத்து, திவ்யாசக்தி, பூமிநாதன், கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதிகள் சேவியர், சொக்கலிங்கம், முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ், வட்ட செயலாளர்கள் முகமதுகனி, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    • சோழவந்தானில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்த கூட்டம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுகூட்டம் நடந்தது.

    அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்,சோழவந்தான் ரெயில்வே மேம்பால பணிகள் முடிந்து 3 மாதங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தலைமை கழக பேச்சாளர்கள் கம்பம் பாண்டியன், ஆற்காடு அகிலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன்மாறன், பால.ராஜேந்திரன், தனராஜ், பேரூர் செயலாளர்கள் சத்தியபிரகாஷ், சேர்மன் பால்பாண்டி, ரகுபதி, பொதுகுழு ஸ்ரீதர், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன், நகரத் துணைச் செயலாளர் ஸ்டாலின், பேரூராட்சி துணை தலைவர்கள் லதாகண்ணன், கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணி, வசந்தகோகிலா சரவணன், கார்த்திகா ஞானசேகரன், ரேகா வீரபாண்டி, பேரூர் கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின், முத்துசெல்வி சதீஷ், கொத்தாளம் செந்தில் குருசாமி, சிவா, ஊராட்சி தலைவர்கள் சிறுமணி, துணை தலைவர் கேபிள் ராஜா, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், வார்டு செயலாளர் நாகேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரையில் நடந்தது.
    • தி.மு.க. அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திகழ்கிறது என விழாவில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

    மதுரை

    மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள கலைஞர் திடலில் மதுரை வடக்கு, தெற்கு, மாநகர் ஆகிய மாவட்டங்கள் சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    விழாவுக்கு மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தின ராக தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 1,200 கிரிக்கெட் அணிையச் சேர்ந்த 13 ஆயிரத்து 200 வீரர்களுக்கு கிரிக்கெட் கிப்ட்டுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசும்போது கூறியதா வது:-

    இளைஞர் அணி பொறுப்புக்கு வருவதற்கு முன்பு நான் மதுரையில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினேன்.

    அதனை ஒரு மாநாடு போல் அவர் நடத்தினார். தற்போது பேராசிரியருக்கு நூற்றாண்டு விழா நடத்த வேண்டும் என்று சொன்னேன். இந்த குறுகிய காலகட்டத்திற்குள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி ஒரு மாபெரும் மாநாடு போல் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்.

    தி.மு.க. அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திகழ்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு பார்த்து பார்த்து பல திட்டங்களை செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தமிழக அரசியலில் இளைஞர்களின் தவிர்க்க முடியாத சக்தியாக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்து உள்ளார். மதுரையில் தி.மு.க. இளைஞரணி மாநாட்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், வேலுச்சாமி, குழந்தை வேல், எஸ்ஸார் கோபி, மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகு பாண்டி,சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான், சிறை செல்வன், மேயர் இந்திராணி, இளைஞரணி மாநில துணைச்செயலாளர் ஜி.பி.ராஜா, மாணவரணி அமைப்பாளர் மருது பாண்டி, மூவேந்திரன், மதன்குமார், விமல், கார்த்திக், திருப்பாலை பகுதி செயலாளர் சசிகுமார், மன்றத்தலைவர் வாசுகி சசிகுமார், மேற்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் வீரராகவன், தி.மு.க. தீர்மானக்குழு செயலாளர் அக்ரி.கணேசன், அவனியாபுரம் கிழக்குப்பகுதி இளைஞரணி அமைப்பாளர் கவுன்சிலர் காளிதாஸ், திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், திருமங்கலம் நகர்மன்ற துணைத்தலைவர் ஆதவன் அதியமான், நகர செயலாளர் மு.சி.சோ. பா.ஸ்ரீதர், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் கோபி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வைகை மருதுராஜா, சிங்கை சே.ம.பிரதீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×