search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எல்.ஏ. பேச்சு"

    • பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரையில் நடந்தது.
    • தி.மு.க. அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திகழ்கிறது என விழாவில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

    மதுரை

    மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள கலைஞர் திடலில் மதுரை வடக்கு, தெற்கு, மாநகர் ஆகிய மாவட்டங்கள் சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    விழாவுக்கு மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தின ராக தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 1,200 கிரிக்கெட் அணிையச் சேர்ந்த 13 ஆயிரத்து 200 வீரர்களுக்கு கிரிக்கெட் கிப்ட்டுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசும்போது கூறியதா வது:-

    இளைஞர் அணி பொறுப்புக்கு வருவதற்கு முன்பு நான் மதுரையில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினேன்.

    அதனை ஒரு மாநாடு போல் அவர் நடத்தினார். தற்போது பேராசிரியருக்கு நூற்றாண்டு விழா நடத்த வேண்டும் என்று சொன்னேன். இந்த குறுகிய காலகட்டத்திற்குள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி ஒரு மாபெரும் மாநாடு போல் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்.

    தி.மு.க. அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திகழ்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு பார்த்து பார்த்து பல திட்டங்களை செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தமிழக அரசியலில் இளைஞர்களின் தவிர்க்க முடியாத சக்தியாக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்து உள்ளார். மதுரையில் தி.மு.க. இளைஞரணி மாநாட்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், வேலுச்சாமி, குழந்தை வேல், எஸ்ஸார் கோபி, மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகு பாண்டி,சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான், சிறை செல்வன், மேயர் இந்திராணி, இளைஞரணி மாநில துணைச்செயலாளர் ஜி.பி.ராஜா, மாணவரணி அமைப்பாளர் மருது பாண்டி, மூவேந்திரன், மதன்குமார், விமல், கார்த்திக், திருப்பாலை பகுதி செயலாளர் சசிகுமார், மன்றத்தலைவர் வாசுகி சசிகுமார், மேற்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் வீரராகவன், தி.மு.க. தீர்மானக்குழு செயலாளர் அக்ரி.கணேசன், அவனியாபுரம் கிழக்குப்பகுதி இளைஞரணி அமைப்பாளர் கவுன்சிலர் காளிதாஸ், திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், திருமங்கலம் நகர்மன்ற துணைத்தலைவர் ஆதவன் அதியமான், நகர செயலாளர் மு.சி.சோ. பா.ஸ்ரீதர், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் கோபி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வைகை மருதுராஜா, சிங்கை சே.ம.பிரதீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டதற்காக மக்கள் வருந்துகிறார்கள் என பொதுக்கூட்டத்தில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
    • அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பில் நிலையூர் கைத்தறி நகரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

    மதுரை

    அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பில் நிலையூர் கைத்தறி நகரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

    ஒன்றிய செயலாளர் கவுன்சிலர் நிலையூர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் வரவேற்று பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமைகழக பேச்சாளர் நடிகர் வையாபுரி ஆகியோர் பேசினர்.

    ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கடந்த சட்டசபை தேர்தலில் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்றார்கள். முதியோர் ஓய்வூதியம் உயர்த்தி வழங்குவோம் என்றார்கள். பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்றார்கள். சிலிண்டர் மானியம் 100 ரூபாய் கொடுக்கப்படும் என்றார்கள்.

    இப்படி எந்த ஒரு வாக்குறுதியையும் அவர்கள் இதுவரை நிறைவேற்ற வில்லை. தி.மு.க.வினர் சொன்ன பொய்களை எல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

    கடந்த தேர்தலில் சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தா லும் அந்த கட்சிக்கு வாக்க ளித்ததற்காக மக்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தில் இப்போது எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு அமைதி குலைந்து இருக்கிறது.

    ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை யெல்லாம் மறைத்து தின மும் விளம்பரம் தேடிக்கொண்டிருக்கி றார். அமைச்சர்கள் மக்கள் நலனை பற்றி கவலைப்படுவதில்லை.

    தங்களது வளர்ச்சிக்கா கவே நிர்வாகத்தை செய்கி றார்கள். எனவே எப்போது மீண்டும் தேர்தல் வரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

    நான் நிச்சயமாக கூறுகிறேன். வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும். அந்த தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தில் நிரந்தர முதலமைச்சராக அரியணையில் அமரும் வகையில் மகத்தான வெற்றியை தருவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.என்.ராஜேந்திரன், ஓம். கே.சந்திரன், பூமி பாலகன், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது.
    • தளவாய்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை தேராபந்த் யுவக் பரிசத் இணைந்து இந்த முகாமை நடத்தியது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தளவாய்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை தேராபந்த் யுவக் பரிசத் இணைந்து ரத்த தான முகாமை நடத்தியது. இதை தனுஷ்குமார் எம்.பி., தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அதனைத்தொடர்ந்து மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் அம்மையப்பநாடார் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    இந்த நிகழ்வில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், மாணவ- மாணவிகள் அனைவரும் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் விளையாட்டிலும் முக்கியத்துவம் வழங்கி உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

    அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புக்கள் கிடைக்கும். அதனை சிறப்பாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்றார்.

    இதில் ஊர்த்தலைவர் உதயசூரியன், பள்ளி தாளாளர்கள் ரவிசந்திரன், பாலாஜி, ராஜ்பாபு தலைமை ஆசிரியர்கள் தனபால், செலினாபாய் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், தி.மு.க. கிளை செயலாளர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×