search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்ததான முகாம்"

    • ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு விருதுநகர் கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
    • பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு குருதி பரிமாற்று குழுமம், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் தேசிய தன்னார்வ ரத்ததான தின நிகழ்ச்சி நடந்தது. இதில் 140 ரத்ததான முகாம் அமைப்பா ளர்கள், அரசு ரத்த வங்கி ஊழியர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கங்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறிய தாவது:-

    ரத்தம் உயிரின் நாடி என்பதால், ரத்த தானம் செய்வது விலைமதிப்பற்ற மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ரத்த தானத்தின் அவசியத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து, தமிழ்நாட்டில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

    சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முதல் 350 மில்லிலிட்டர் (ஒரு யூனிட்) ரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த ரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி ரத்த தானம் செய்யலாம்.எனவே, பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) யசோதாமணி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, மாவட்ட திட்ட மேலாளர் வேலய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினார்கள்
    • முகாம் ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எஸ்.சுதாகர் செய்திருந்தார்.

    என்.ஜி.ஓ.காலனி :

    அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி கழகத்தின் தலைவர் கே.எஸ்.மணி, செயலாளர் ராஜன், கல்லூரி முதல்வர் டாக்டர். ஆர்.ஐ. ராம்குமார், கல்லூரியின் நிர்வாக அலுவலர் ஐ.முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் டாக்டர் ராகேஷ், ரத்ததான முகாமை நடத்தினார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினார்கள். முகாம் ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எஸ்.சுதாகர் செய்திருந்தார்.

    • ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு கேணிக் கரை கிரசெண்ட் (பிறை) ரத்த வங்கியில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் (கி) தேனி சை.அக்கீம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தனதாஸ் மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரசெண்ட் (பிறை) ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உரிமையாளர் பயாஸ் அகமது வரவேற்றார்.

    பசுமை தாயகத்தின் மாநில துணைச்செயலாளர் பொறியாளர் கர்ண மஹாராஜா, ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா, மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் ஷரீப், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன்,இளைஞர் சங்க செயலாளர் துல்கர்,இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும் கான், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம் ,மாணவர் சங்க செயலாளர் சந்தோசம்,கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி,உழவர் பேரியக்கம் தலைவர் ஐ.பி.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    • மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
    • கல்லூரியை சேர்ந்த 200 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

    கல்லூரி யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார்.

    பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் வரதராஜன், மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் என்.விஜயகுமார், நிலைய மருத்துவர் கோவிந்தராஜ், கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமை திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலைமங்கலம் பாலு தொடங்கி வைத்தார்.

    பாரதிதாசன் பல்கலைக்கழக மண்டல இணை இயக்குனர் தஞ்சை தனராஜன் சிறப்புரையாற்றினார்.

    ரத்ததான முகாமில் கல்லூரியை சேர்ந்த 200 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது.

    அவர்களில் தேர்வு செய்யப்பட்ட 50 ரத்த தானம் வழங்கினர்.

    இரத்தம் சேகரிக்கும் பணியை மன்னார்குடி ரத்த வங்கி பொறுப்பு மருத்துவர் காத்தி காயினி தலைமையிலான மருத்துவ குழுவினர் இரத்தம் சேகரித்தனர்.

    ரத்ததான முகாமை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மன்னார்குடி வட்ட கிளை துணைத்தலைவர் என். ராஜப்பா, மன்னார்குடி இரத்தக்கொடையாளர்கள் ஒருங்கிணைப்பு மைய பொறுப்பாளர் கார்த்தி கேயன், கவிஞர் தங்கபாபு ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

    • சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது.
    • முடிவில் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் இளங்கோவன், சூரியா, வெங்கடேஷ்வரி, பிரியதர்ஷினி, கீதா பால சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியர் அன்பரசி வரவேற்றார். டாக்டர் தனசேகரன் முகாமை தொடங்கி வைத்து ரத்ததான வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

    உசிலம்பட்டி அரசு மருத்துவமனை ரத்ததான வங்கி மருத்துவர் உஷாராணி தலைமையில் மருத்துவகுழுவினர், செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். முன்னாள் கவுன்சிலர் சீனிராஜா, முன்னாள் கூட்டுறவுசங்கதலைவர் பொன்ராம், ஜெயலலிதாபேரவை பேரூர் செயலாளர் தனசேகரன், அ.தி.மு.க.வார்டு செயலாளர் லில்லி, ராஜேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சூரியா, வெங்கடேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.

    • இடையகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் கோபி கிருஷ்ணா தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    இடையகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் கோபி கிருஷ்ணா தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் அபிநயா கலந்து கொண்டார்.

    ரத்ததான முகாமில் இடையகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    மேலும் ரத்ததானம் செய்த நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
    • முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டமும், ஜே.சி.ஐ. மதுரை லயன்ஸ் இணைந்து ஒருநாள் ரத்ததான முகாமை இன்று நடத்தியது.

    கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வாழ்த்துரை வழங்கினார். சுயநிதி பிரிவு இயக்குநர் பிரபு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். காசிநாததுரை வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக ஜே.சி.ஐ. முன்னாள் தலைவர் ராஜலிங்கம், காமராஜர் பல்கலைகழக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பா ளர்கள் சிலம்பரசன், வெங்கடேஷ் பாரதி, பெரியகருப்பன், திருஞான சம்பந்தம், மற்றும் வெங்க டேஷ நரசிம்ம பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • இதில் 202 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
    • முகாமில் ரத்ததானம் செய்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி நகர அரிமா சங்கம், சேவா பாரதி தமிழ்நாடு சிவராம்ஜி ரத்த வங்கி மற்றும் தனியார் டியூசன் சென்டர் ஆகிய அமைப்பினர் இணைந்து ரத்ததான முகாமை நடத்தினர்.

    இதில் 202 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். அதில் 40 யூனிட் ரத்தம் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கிக்கும், மீதி சிவராம்ஜி ரத்த வங்கிக்கும் வழங்கப்பட்டது.

    முகாமில் ரத்ததானம் செய்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    இதில் சேவா பாரதி மாவட்ட தலைவர் விவேகானந்தன், கல்பனா, சந்திரசேகர், பத்திரி நாராயணன், ராஜ சேகர், விக்ரமன், வினோத், ப்ரூத்திவராஜ், சேவா பாரதி ஆதிமூலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல்லில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் பேகம்பூர் அடுத்துள்ள பூச்சிநாயக்கம்பட்டி மாநகராட்சி பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் பேகம்பூர் அடுத்துள்ள பூச்சிநாயக்கம்பட்டி மாநகராட்சி பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஷேக் பரீத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நைனா முகமது, செயலாளர் நியாஜ்தீன், பொருளாளர் நத்தம் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளர் ஜமால் முகமது ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

    முகாமில் அரசு ரத்த வங்கி டாக்டர் புவனா, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில ஊடகப் பிரிவு செயலாளர் அப்துல் ஹாலிக், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முகமது யாசின், மாநகர பொருளாளர் சேக் முகமது, வைகறை தொழிற்சங்க செயலாளர் பாபுஜி, காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், தி.மு.க. மேற்கு மண்டல செயலாளர் பஜ்லூல் ஹக், கவுன்சிலர் ஹசீனா காஜா மைதீன், சமூக ஆர்வலர் சித்தாரா அன்சாரி, மாநகர தலைவர் சாதிக்கலி, ஊடக பிரிவு பொருளாளர் சஹின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவிகளுக்கு உடல்நலம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
    • முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் ரத்ததானம் வழங்கினர்.

    நாசர்கோவில் :

    நாசர்கோவில் ஹோலிகிராஸ் (தன்னாட்சி) கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. பத்மனாப்புரம் அரசு தலைமை மருத்துவமனை ரத்த மைய மருத்துவ அலுவலர் டாக்டர் சாஸ்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லூரி முதல்வர் சகாயசெல்வி வாழ்த்துரை வழங்கினார். கிறிஸ்துதாஸ் வில்லியம்ஸ், மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மாணவிகளுக்கு உடல்நலம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

    சகாய செல்வராஜன், ரத்ததான ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரசன் கேப்ரீனா மற்றும் மருத்துவ குழுவினர் இணைந்து முகாமை வழிநடத்தினர். இதில் மாவட்ட ரத்ததான கழக தலைவர் நாஞ்சில் ராஜ், கல்லூரி தாளாளர் மேரி ஹில்டா, உதவி முதல்வர்கள் லீமா ரோஸ், சத்யா ஆகியோர் கலந்துகொண்டனர். ஹோலிகிராஸ் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெபிஜா மின்னி, பேராசிரியை கிரேசிலின் லிடியா மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் தன்னார்வலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் ரத்ததானம் வழங்கினர்.

    • ரத்த தானம் செய்வதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு
    • ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் என 50 பேர் ரத்ததானம்

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் பம்மத்தில் அமைந்துள்ள சேக்ரட் ஹார்ட் இன்டர்நே ஷனல் பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. நிம்ஸ் மருத்துவ கல்லூரியின் ரத்த வங்கி குழுவினர், பள்ளி முதல்வர் மணி சுரேஷ், நிர்வாக அலுவலர் அருள் ததேயுஸ் ராஜ், ஒருங்கிணைப் பாளர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஜெனிஷியா வரவேற்றார்.

    நிம்ஸ் மருத்துவ கல்லூரியின் ரத்த வங்கி தலைவர் ருபீனா மருத்துவ ரீதியிலான தகவல்களையும், ரத்த தானம் செய்வதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துரைத்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.

    இதில் ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் என 50 பேர் ரத்ததானம் செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்தினர். முடிவில் ஆசிரியர் சோனியா நன்றி கூறினார்.

    • நீதிமன்ற வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
    • மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் தாய் பாசம் அறக்கட்டளை, கல்வித்தந்தை மருத்துவர் இ.எம்.அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம், மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்தான முகாம் மற்றும் தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டா ளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி விஜயா தலைமை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஷேக் இபுராஹிம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நீதிபதி நிரந்தர மக்கள் நீதிமன்றம் பரணிதரன், மாவட்ட அமர்வு நீதிபதி விரைவு மகளிர் நீதிமன்றம் கோபிநாத், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி மனோஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தாய்பாசம் அறக்கட்டளையின் நிறுவனர் பாதுஷா நூருல் சமது ஒருங்கிணைத்தார். மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

    ×