என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அறிஞர் அண்ணா கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ரத்ததான முகாம்
- அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் ஹெச்.டி.எப்.சி. வங்கியும் இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.
- ரத்ததான முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குருதிக்கொடை வழங்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் வேப்பனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் ஹெச்.டி.எப்.சி. வங்கியும் இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. ரத்ததான முகாமிற்கு நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெகன் வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமை உரையில், மாணவர்கள் படிக்கும் பொழுதே பொதுச் சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். முகாமில் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவ அதிகாரி டாக்டர் வசந்தகுமார் ,வேப்பன பள்ளி வட்டார மருத்துவ அலுவலரான சரவணன் ,அய்யனார் ,சுகாதார ஆய்வாளர்கள் உமாசங்கர்,ஜெயசெல்வம் , பிரதீப் , ஹெச்.டி.எப்.சி. வங்கியின் துணை மேலாளரான விஜய்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரத்ததான முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குருதிக்கொடை வழங்கினர்.ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரான ஸ்டீபன் விக்டர் ஆண்டனி செய்திருந்தார். விழாவின் நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.ரத்ததான முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்