search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையம் பள்ளியில் ரத்ததான முகாம்
    X

    ரத்ததான முகாமை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    ராஜபாளையம் பள்ளியில் ரத்ததான முகாம்

    • ராஜபாளையம் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது.
    • தளவாய்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை தேராபந்த் யுவக் பரிசத் இணைந்து இந்த முகாமை நடத்தியது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தளவாய்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை தேராபந்த் யுவக் பரிசத் இணைந்து ரத்த தான முகாமை நடத்தியது. இதை தனுஷ்குமார் எம்.பி., தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அதனைத்தொடர்ந்து மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் அம்மையப்பநாடார் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    இந்த நிகழ்வில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், மாணவ- மாணவிகள் அனைவரும் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் விளையாட்டிலும் முக்கியத்துவம் வழங்கி உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

    அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புக்கள் கிடைக்கும். அதனை சிறப்பாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்றார்.

    இதில் ஊர்த்தலைவர் உதயசூரியன், பள்ளி தாளாளர்கள் ரவிசந்திரன், பாலாஜி, ராஜ்பாபு தலைமை ஆசிரியர்கள் தனபால், செலினாபாய் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், தி.மு.க. கிளை செயலாளர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×