search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்மல் மேல்நிலைப்பள்ளி"

    • சபாநாயகர் அப்பாவு பங்கேற்கிறார்
    • 1922-ம் ஆண்டு கொல்லம் ஆயராக இருந்த அலாசியுஸ் பென்சிகரால் நடுநிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராஜாக்க மங்கலம் ரோட்டில் உள்ள ராமன்புதூரில் கார்மல் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இது 1922-ம் ஆண்டு கொல்லம் ஆயராக இருந்த அலாசியுஸ் பென்சிகரால் நடுநிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது.

    1932-ம் ஆண்டு கோட்டார் ஆயராக இருந்த லாரன்ஸ் பெரேராவால் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. அதைத் தொடர்ந்து மேல்நிலைப்பள்ளியானது. இந்த பள்ளி தொடங்கி நூற்றாண்டு நிறைவு விழா இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இன்று பகல் 2 மணிக்கு முன்னாள் மாணவர்கள் இயக்கம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிக்கு குருகுல முன் னாள் முதல்வர் பால்லியோன் தலைமை தாங்கி பேசுகிறார். வளாக பொருளாளர் குமார் சடேனிஸ், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேசு நேசம், முன்னாள் மாணவர் இயக்க துணைத்தலைவர் பால்டுவின் புரூஸ், ஆசிரியர் அலுவலர் செயலாளர் பபிலன் ஆகியோர் முன் னிலை வகிக்கிறார்கள். முன்னாள் மாணவர் இயக்க இயக்குனரும், பள்ளி தலைமை ஆசிரியருமான மரிய பாஸ்டின் துரை வரவேற்கிறார். செயலாளர் ஜான் உபால்டு அறிக்கை சமர்ப்பிக்கிறார். பள்ளியின் தாளாளர் ஜெரோம் ஆசியுரை வழங்குகிறார்.

    முன்னாள் மாணவரும் தபால் துறையின் முன்னாள் இயக்குனருமான மெர்வின் அலெக்சாண்டர், பொருளா தார நிபுணரும், சபையின் முன்னாள் தூதருமான ஜெப மாலை வினான்சி ஆராய்ச்சி ஆகியோர் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசி ரியர் மற்றும் அலுவலர்களை சிறப்பிக்கிறார்கள். இதில் தாம்பரம் போலீஸ் கமிஷ னர் அமல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாதனை யாளர் களை கவுரவிக்கிறார். ஸ்டெல்லா மேரீஸ் குழுமங் களின் தலைவர் சார்லஸ், இயேசு சபை மதுரை மறை மாநில தலைவர் டேனிஸ் பொன்னையா கார் மல் பள்ளியின் நலம் விரும்பிகள், பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், முன்னாள் மாணவர் இயக்க செயற்குழு உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். முன்னாள் மாணவர் இயக்க தலைவர் டாக்டர் டங்ஸ்டன் ரமேஷ் நன்றி கூறுகிறார்.

    மாலையில் பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் 'இன்றைய இளைஞர் போக்கு வாழத் தக்கதா? வருந்தத்தக் கதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெ றுகிறது. முன்னாள் மாணவர் இயக்க பொருளாளர் அமல் ராஜ் நன்றி கூறுகிறார். மாண வர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆசிரியர் அருள் ராஜன், ஐ.எம்.வி. ஜெரோம், சந்தான இருதயராஜ், பீட்டர் ஷா ஆகியோர் நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கு கிறார்கள்.

    நாளை மாலை 5 மணிக்கு நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இதற்கு தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி விழா மலரை வெளியிட்டு உரை யாற்றுகிறார். சிறப்பு விருந்தி னர்களாக நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் மகேஷ், கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, தொழில் அதிபர் மைக் கேல் ஆண்டனி, இயேசுசபை மன்ற மாநில தலைவர் டேனிஸ் பொன்னையா ஆகியோர் பரிசு வழங்கி, வாழ்த்தி பேசுகிறார்கள்.

    கார்மல் இல்ல அதிபர் ஜெரோம், அருட்பணியாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேசுநேசம் வரவேற்கிறார். பள்ளி தலைமை ஆசிரியர் மரியபாஸ்டின்துரை ஆண்ட றிக்கையை சமர்ப்பிக்கிறார். அதைத்தொடர்ந்து மாண வர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முடிவில் ஆசிரியர் அலுவலர் செய லாளர் பபிலன் நன்றி கூறுகிறார்.

    • 100 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
    • மாணவர்களின் 150 அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான 2 நாள் அறிவியல் கண்காட்சி நேற்று தொடங்கியது. பள்ளி தலைமையாசிரியர் மரிய பாஸ்டின் துரை தலைமை தாங்கினார். ஆசிரியர் அலுவலர் செயலாளர் பபிலன் முன்னிலை வகித்தார். கார்மல் அறிவியல் மன்றத்தின் தலைவர் பாபு சைமன்ராஜ் வரவேற்றார். மாணவர்கள் இறைவணக்கம் பாடினர்.

    பள்ளி தாளாளர் ஜெரோம் பேசினார். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி சவேரியார் ஆராய்ச்சி மைய இயக்குனரும் பூச்சியியல் துறை விஞ்ஞானியுமான இன்னாச்சிமுத்து பேசியதாவது:-

    மாணவர் பருவம் மகத் தான பருவம். எதனையும் கேள்விகளுக்கு உட்படுத்தி ஆராய்ச்சி செய்து பார்க்கும் பருவமாகும். உலகில் சிறந்த படைப்புகள் அனைத்தும் ஏன்? எதற்கு? எப்படி? போன்ற கேள்விகளை கேட்பதன் மூலமே உருவாகியுள்ளன. எனவே நாம் காணும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கேள்விகளுக்கு உட்படுத்தி அவற்றிற்கான தீர்வுகளை கண்டறிய முயல வேண்டும்.

    அதற்கு இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகள் உறு துணையாக அமையும். அறிவியல் தொழில் நுட்பங்கள் இன்றி உலகு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகள் தான் மாற்றத்திற்கான அடித்தளமாக உள்ளது. அந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் கண் டு பிடிப்பதற்கு இது போன்ற அறிவியல் கண்காட்சிகள் உந்து சக்தியாக அமையும்.

    இந்த கண்டுபிடிப்புகளை பார்க்கும் மாணவர்கள் நாமும் புதியவற்றை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர் டேவிட்ராஜ் எழுதி இசை அமைத்த கார்மல் பள்ளி நூற்றாண்டு விழா இசை சி.டி.யை இன்னாசிமுத்து வெளியிட உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் பெற்றுக் கொண்டார். அறிவியல் கண்காட்சியின் ஒருங்கி ணைப்பாளர் ஜெகசீலன் நன்றி கூறினார். நிகழ்ச்சி களை ஆசிரியர்கள் பினு மோன், ராஜ்குமார் ஆகி யோர் தொகுத்தனர்.

    கண்காட்சியில் 100 பள்ளிகளில் இருந்து 150 அறிவியல் கண்டு பிடிப்புகள் காட்சி படுத்தப்பட்டு உள்ளன. பல்வேறு கல்லூரிகள் சார்பாக அரங்கம் அமைக்கப்பட்டு கல்லூரி மாணவர்களது படைப்புகள் காட்சி படுத்தப்பட்டு இருந்தன. மேலும் கூடங்குளம் அணு மின் நிலையம், மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை நிறுவனம், கேரளாவில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப கழகம், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், வேளாண்மை துறை, மாவட்ட தொழு நோய் விழிப்புணர்வு திட்ட மையம், தமிழ் நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை சார்பாக அரங்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

    இந்த கண்காட்சி இன் றும் நடைபெற்றது. இதில் பங்கேற்றுள்ள பள்ளி களில் நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பிரிவு 3 பிரிவுக ளிலும் முதல் 3 இடங் களை பெறுபவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப் படும். இங்கு வைக்கப்பட்டுள்ள அறிவியல் கண்டு பிடிப்பு களை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவி கள், பொதுமக்கள் பார்த்து சென்றனர்.

    இதற் கான ஏற்பாடுகளை கார்மல் பள்ளி நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேசுநேசம் தலைமையில், ஆசிரியர், அலுவலர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    ×