search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாகிகள்"

    • நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்று பெறும்.
    • கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வல்லம்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி வல்லம் பேரறிஞர் அண்ணா சீரணி கலையரங்கில் திமுக பொதுக்கூட்டம் நடந்தது.

    தஞ்சை மத்திய மாவட்டம், தஞ்சை தெற்கு ஒன்றியம், மற்றும் வல்லம் பேரூர் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

    தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய துணைத் தலைவரு மான அருளானந்த சாமி வரவேற்றார்.தஞ்சை சட்டமன்ற உறுப்பினர்.

    டி.கே.ஜி.நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம் .ராமச்சந்திரன் து.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கலந்து கொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்று பெறும் என பேசினார்.

    இதில் மாநில நிர்வாகிகள் இறைவன், எல்.ஜி அண்ணா,தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி சிங்.இரா.அன்பழகன்,சுந்தர்ராஜ், துணை செயலாளர் கோவிந்த ராஜ், ராஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் வல்லம் நகர செயலாளர் கல்யாண சுந்தரம் நன்றி கூறினார்.

    • மதுரையில் 27-ந்தேதி தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநில மாநாடு குறித்த செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாவட்டம் முழுவதும் மேலும் எழுச்சியுடன் கொண்டாடுவது மற்றும் சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் எழுச்சி யுடன் பங்கேற்று சிறப்பிப் பது உள்ளிட்ட கட்சி ஆக்கப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திருப்பாலை பெண்கள் கல்லூரி அருகே அமைந்துள்ள குறிஞ்சி திருமண மஹாலில் நடக்கிறது.

    மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை தாங்குகிறார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் கழக, பேரூர் செயலாளர், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பேசினார்.
    • மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் அமைய குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேலவஸ்தா சாவடி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியேற்று விழா நடந்தது.

    இதில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறும்போது,

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கைகள், லட்சியத்தை நிறைவேற்றுவதற்காகவும், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவதற்காகவும் தான் அ.ம.மு.க. தொடங்கப்பட்டது.

    மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் அமைய குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக அ.ம.மு.க.வை ஆட்சியில் அமர செய்ய வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், ஒன்றிய செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் அணி நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
    • ஆபாசமாகவும், அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையில் பாட்டு பாடியும் உள்ளார்கள்.

    திருப்பூர்:

    தி.மு.க. மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளரும் தலைமை பொதுக்குழு உறுப்பினருமான உமா மகேஸ்வரி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் நடந்த அதி.மு.க.வின் மாநாட்டில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரை மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையில் பாட்டு பாடியும், அநாகரிகமான முறையில் பேசியும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டதை அனைத்து அ.தி.மு.க.வின் தலைவர்களும் ரசித்து ஏளனமாக கைதட்டி சிரித்து உற்சாகபடுத்தினர். லட்சக்கணக்கான அ.தி.மு.க.வின் தொண்டர்கள் மத்தியில் இப்படி பேசியதை பார்த்த எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் ஏற்பட்டுள்ளது.

    எனவே மாநாடு நடத்திய அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ, தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ, மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், நகர செயலாளர் சுப்பராயலு, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, ஒன்றிய குழு சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், தாமோதரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் மதுரையில் 20-ந் தேதி நடைபெற உள்ள எழுச்சி மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசியதா வது:-

    விருதுநகர் மாவட்டம் என்றும் அ.தி.மு.க. கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும். தமிழகத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் திரளான பேர் இதில் கலந்து கொள்ள வேண்டும். விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகி களும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்துள்ள ஏற்பாடு களையும் கேட்ட றிந்தார். இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கலாநிதி, விருதுநகர் நகர செயலாளர் முகமதுநயினார், ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்ச ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வி.சி.க. வடக்கு மாவட்ட வி.சி.க. நிர்வாகிகளுடன் புதிய மாவட்ட செயலாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நகர நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வி.சி.க. வடக்கு மாவட்ட செயலாளராக இளைய கவுதமன், தெற்கு மாவட்ட செயலாளராக பாலையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இளைய கௌதமன் அக்கட்சியின் நிர்வாகிகளை சந்தித்தார். மூத்த உறுப்பினரான மண்டேலா மாதவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

    புதிய மாவட்ட செயலாளருக்கு ஒன்றிய, நகர நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, சுண்ணாம்பிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, மாவட்ட நிர்வாகி மண்மேல் சந்திரன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ரவி, காட்டாம்பூர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகளை இளைய கவுதமன் சந்தித்து வருகிறார்.

    • மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
    • சீர்காழி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    சீர்காழி:

    மதுரையில் வருகிற 20ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனிடையே மாநாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து எழுச்சி மாநாட்டிற்கு பொதுமக்க ளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேனர், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி சீர்காழி பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்றது.

    மாவட்ட அவை தலைவர் பி.வி. பாரதி தலைமையில், நகர செயலாளர் எல்.வி.ஆர் வினோத் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , பைக், ஆட்டோ, வேன் , கார், உள்ளிட்டவற்றில் அ.தி.மு.க எழுச்சி மாநாடு குறித்த ஸ்டிக்கர் மற்றும் பேனரை ஒட்டிப் பணிகளை அவை தலைவர் பி.வி. பாரதி தொடக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சீர்காழி முன்னாள் நகர செயலாளர் பக்ரிசாமி , ஜெ.பேரவை செயலாளர் ஏ.வி. மணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு பரணிதரன், தொழில் அதிபர் சீனிவாசன் , நகர்மன்ற உறுப்பினர்கள் நாகரத்தினம் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, பொறு ப்பாளர்கள் வக்கீல்கள் நெடுஞ்செழியன், மணிவ ண்ணன் மற்றும் சுரேஷ், ரவி சண்முகம், நகர மகளிர் அணி செயலாளர் லெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • மாணவிகளுக்கான கல்வி கருத்தரங்கம் நடந்தது.
    • மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மற்றும் தொண்டி அஹ்லுஸ் ஸுன்னா மகளிர் கல்லூரி இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான கல்வி கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் சுமையா தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய விடுதலைப் போரில் மறைக்கப்பட்ட முகங்கள் என்ற தலைப்பில் பேசினார். சச்சார் கமிட்டி அறிக்கை குறித்து பேராசிரியர் அருணன் பேசினார்.

    நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உமரி, த.மு.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரை சோழவந்தான் அருகே பா.ஜ.க. சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
    • பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கியும், தி.மு.க. அரசை கண்டித்தும் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மேலக்காலில் மதுரை கிழக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மண்டல் பாரதீய ஜனதா கட்சி சார்பில் சாதனை விளக்க கூட்டமும், தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டமும் நடந்தது. மண்டல் தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் குகனேஷ்வரன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கியும், தி.மு.க. அரசை கண்டித்தும் மாவட்ட செயலாளர் கண்ணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் தங்கவேல் சாமி, மாவட்ட நிர்வாகி கோசா பெருமாள் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள் முருகேஸ்வரி, தேவி, வர்த்தக அணி தசரத சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு முடிவுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள்.
    • அ.தி.மு.க. கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ. பேசினார்.

    மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் கிழக்கு-தெற்கு ஒன்றியத்தின் சார்பில் அ.தி.மு.க. கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆண்டார் கொட்டாரத்தில் நடைபெற்றது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    எத்தனை பெரிய பொறுப்புகள் இருந்தாலும் இயக்கத்தின் அடித்தளம் கிளைக்கழகம் தான். இந்த ஒன்றியத்தில் 177 கிளை கழகங்கள் உள்ளது அவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அம்மாவின் அரசு மக்களுக்காக குறிப்பாக பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தந்தது. இதனை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது. அது மட்டுமல்லாது.

    மதுரை மாவட்டத்திற்கு அம்மா ஆட்சியில் செய்த சாதனை திட்டங்களை நாம் கூற முடியும். நாம் கொண்டு வந்த திட்டங்களை தான் மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். அதேபோல் அம்மா உணவகங்களை பாதிக்குமேல் மூடிவிட்டனர் தி.மு.க. மக்களுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை. ஆனால் கருணாநிதி பெயரில் மதுரையில் நூலகம், பல்வேறு இடங்க ளில் கருணாநிதி சிலை என்று அவரது தந்தையார் பெயரில் திட்டங்களை செய்ததை தவிர எந்த சாதனையும் ஸ்டாலின் செய்யவில்லை.

    தினந்தோறும் 5 கொலைகள், கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றம் என சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் விட்டது.தி.மு.க. ஆட்சிக்கு வரும் முன்பு ஒன்றிய அரசு எனச்சொன்னார்களா?

    அ.தி.மு.க. என்றாலே ராணுவக்கட்டுப்பாடு.நேற்று கட்சி அலுவலகத்தில் ஆரோக்கியமான விவாதம் நடை பெற்று உள்ளது.தலைமை கழகமும், பொதுக்குழுவும் எந்த முடிவு எடுத்தாலும் அதை தலைவர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கட்டுப்படு வார்கள். ஒற்றைத்தலைமை குறித்து தனிப்பட்ட கருத்தை நிர்வாகிகள், பொறு ப்பாள ர்கள் சொல்லவில்லை. தொண்டர்களின் கருத்தை சொல்லி உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடி ஊராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. 

    ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ரியாஸ்கான், நகர் செயலாளர் ராஜபிரபு, அவை தலைவர் அய்யணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார்.
     
    ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். 
    மாற்று கட்சியில் இணைந்த உறுப்பினர்களை நீக்கி புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கி கிளைகளை பலப்படுத்தி ஊராட்சியில் கட்சியின் கொடி ஏற்றுவது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    ×