அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது தி.மு.க. மகளிர் அணியினர் புகார்

மகளிர் அணி நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆபாசமாகவும், அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையில் பாட்டு பாடியும் உள்ளார்கள்.
மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம். 
மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம். 
Published on

திருப்பூர்:

தி.மு.க. மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளரும் தலைமை பொதுக்குழு உறுப்பினருமான உமா மகேஸ்வரி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மதுரையில் நடந்த அதி.மு.க.வின் மாநாட்டில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரை மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையில் பாட்டு பாடியும், அநாகரிகமான முறையில் பேசியும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டதை அனைத்து அ.தி.மு.க.வின் தலைவர்களும் ரசித்து ஏளனமாக கைதட்டி சிரித்து உற்சாகபடுத்தினர். லட்சக்கணக்கான அ.தி.மு.க.வின் தொண்டர்கள் மத்தியில் இப்படி பேசியதை பார்த்த எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் ஏற்பட்டுள்ளது.

எனவே மாநாடு நடத்திய அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com