மாணவிகளுக்கான கல்வி கருத்தரங்கம்

மாணவிகளுக்கான கல்வி கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாணவிகளுக்கான கல்வி கருத்தரங்கம்
Published on

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மற்றும் தொண்டி அஹ்லுஸ் ஸுன்னா மகளிர் கல்லூரி இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான கல்வி கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் சுமையா தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய விடுதலைப் போரில் மறைக்கப்பட்ட முகங்கள் என்ற தலைப்பில் பேசினார். சச்சார் கமிட்டி அறிக்கை குறித்து பேராசிரியர் அருணன் பேசினார்.

நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உமரி, த.மு.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com