நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Published on

விருதுநகர்

விருதுநகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் மதுரையில் 20-ந் தேதி நடைபெற உள்ள எழுச்சி மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசியதா வது:-

விருதுநகர் மாவட்டம் என்றும் அ.தி.மு.க. கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும். தமிழகத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் திரளான பேர் இதில் கலந்து கொள்ள வேண்டும். விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகி களும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்துள்ள ஏற்பாடு களையும் கேட்ட றிந்தார். இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கலாநிதி, விருதுநகர் நகர செயலாளர் முகமதுநயினார், ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்ச ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com