search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை"

    • பகவதி அம்மன் கோவில் தேரோட்டத்தில் சுற்றுலா பயணிகள் பங்கேற்க ஏற்பாடு
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத்திரு விழாவை யொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி. மே.31-

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத்திரு விழாவை யொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது. காலை 8-30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

    இந்த தேரோட்டத்தில் விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் விவேகானந்த கேந்திர தொழிலாளர்கள் குடும்பத்துட ன்பங்கேற்பதற்கு வசதியாகவும் சுற்றுலாப் பயணிகள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டு தேர் இழுப்பதற்கு வசதியாகவும் நாளை காலை 8 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுபோக்கு வரத்து தொடங்குவதற்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கு கிறது. இந்த தகவலை கன்னியா குமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீ பத்மநாபன் தெரிவித்து உள்ளார்.

    • இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வானது தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
    • இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    சேலம்:

    இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீAட் தேர்வானது தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதற்காக நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு தேர்வு மைய ஹால் டிக்கெட் இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது.

    மொத்தம் 499 நகரங்க ளில் நடக்கும் இத்தேர்வினை எழுத, 18.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை நடப்பாண்டு 1.50 லட்சம் பேர் நீட் தேர்வினை எழுதுகின்றனர். நாளை மதியம் 2 மணிக்குதொடங்கி, மாலை 5.20 மணிவரை தேர்வு நடக்கிறது.

    சேலம்

    சேலம் மாவட்டத்தில் 10,488 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். சேலம் அம்மாபேட்டை சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி, சின்னதிருப்பதி ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, ஜாகீர் அம்மாபாளையம், செந்தில் பப்ளிக் பள்ளி, அயோத்தியாபட்டினம் வித்யாமந்திர் மேல்நி லைப்பள்ளி, தேவியாக்கு றிச்சி தாகூர்பப்ளிக் பள்ளி, ஆத்தூர் பாரதியார் ஹைடெக் இன்டர்நேசனல் பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 17 தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்லில் 7 மையங்கள்

    நாமக்கல் மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 5 ஆயிரத்து 276 பேர் தேர்வு எழுத உள்ளனர். நாமக்கல் ட்ரினிட்டி இன்டர்நேஷனல் பள்ளியில் 668 பேரும், நேஷனல் பப்ளிக் பள்ளியில் 600 பேரும், நவோதயா அகாடமி பள்ளியில் 768 பேரும், ஸ்பெக்ட்ரம் அகா டமி பள்ளியில் 672 பேரும், ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் 1,032 பேரும், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். அக்ஷரா அகாடமியில் 432 பேரும், பாவை பொறியியல் கல்லூரியில் 1,104 பேரும் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

    • உயர் மின் அழுத்த பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    திருவாரூர் உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உயர்மின் அழுத்த பாதையில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே வலங்கைமான் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வலங்கைமான், ஆண்டான்கோவில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்குபட்டம், வடக்கு பட்டம், மருவத்தூர், வீராணம், கீழஅமராவதி, நார்த்தாங்குடி, திருவோணமங்கலம், தென்குவளைவேலி, பூந்தோட்டம், பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அழைப்பு
    • நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜி.சுகுமாரன் தலைமை தாங்குகிறார். 25-வது வார்டு கவுன்சிலர் எஸ்.அக்சயா கண்ணன் வ ரவேற்று பேசுகிறார்.

    கூட்டத்தில் நான் (தள வாய் சுந்தரம் எம்.எல்.ஏ.), அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ராஜலெட்சுமி, அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.பச்சைமால், தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி முருகேசன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆர்.கிருஷ்ணதாஸ், வக்கீல் பிரிவு துணை செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட இணை செயலாளர் இ.சாந்தினி பகவதியப்பன், மாவட்ட பொருளாளர் ஆர்.ஜெ.கே.திலக், மாவட்ட துணை செயலாளர் எம்.பார்வதி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் எஸ்.மெர்லியன்ட் தாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளு மாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    ஈரோடு:

    கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46புதுார்,

    ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய க்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம்,

    ஆண்டகோத்தாம்பா ளையம், ஆணைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம்,

    திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பா ளையம், சாவடி பாளையம் புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான்வலசு போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கரை திரும்பும் மீனவர்கள்

    கன்னியாகுமரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன் பிடிக்க நாளை முதல் தடை அமுலுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து நாளை முதல் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்படுகிறது.

    இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் 2 மாதகாலம் களை இழந்து வெறிச்சோடி காணப்படும். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கும். இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவார்கள். வள்ளம் மற்றும் கட்டு மரங்களில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். இதனால் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர்ரக மீன்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு இல்லை.

    இந்த 2 மாத காலமும் உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தினால் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் அபாயநிலை ஏற்படும்.

    இந்த மீன்பிடி தடை காலத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி அந்நிய செலாவணி வருவாய் இழப்பும் ஏற்படும். நாளை தடை காலம் தொடர்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் விசைப்படகுகளுடன் நேற்று முதல் அவசர அவசரமாக சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கரைக்கு திரும்பிய வண்ணமாக உள்ளனர்.

    • நள்ளிரவு வலிய படுக்கை பூஜை நடக்கிறது.
    • குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்க ளில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக் கோவிலில் இந்த ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த 5-ந் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 14 ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.

    விழாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநில ங்களில் இருந்து அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித தீர்த்தமாடி நேர்ச்சை கடன் செலுத்தி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

    இதைத்தொடர்ந்து 8-ம் கொடை விழா கடந்த 21 ந் தேதி நடந்தது. 25-ந் தேதி (சனிக்கிழமை) அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று பரணிக் கொடைவிழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு பஞ்சாபி ஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை நேர்ச்சை, உச்சகால பூஜை, குத்தியோட்டம், தொடர்ந்து மாலையில் தங்கரதம் உலாவருதல், திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழபூஜை, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது.

    நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது. இப்பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாளான வெள்ளிக்கிழமை, பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவான நாளை (சனிக்கிழமை) மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 தடவை நடக்கிறது. பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    விழாவில் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கோவிலிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் பொங்கலிட்டு வழிபடுவார்கள். விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடைவிழாவில் பக்தர் கள் காணிக்கை செலுத்து வதற்காக கோவிலின் முன்பு வைக்கப் பட்டிருந்த திறந்த வார்ப்பு குமரி மாவட்ட திருக்கோ வில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், சுயஉதவிக்குழு பெண் கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அதில் ரூ.3,87,205 ரொக்கமாக கிடைக்கப்பெற்றது.

    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
    • ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரவுபதிமுர்மு நாளை (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் உயர் அதிகாரிகள் முக்கிய விருந்தினர்கள் வரவேற்கிறார்கள்.

    வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு அவர் அங்கு இருந்து கார்மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகு துறைக்கு செல்கிறார். அங்கிருந்து தனிப்படகு மூலம் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார். அவரை விவேகானந்த கேந்திர அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கேந்திர நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.

    பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு விவே கானந்தர் நினைவு மண்ட பத்தை சுமார் 30 நிமிடம் சுற்றி பார்க்கிறார். அதன் பிறகு அங்கிருந்து அதே படகு மூலம் கரைக்கு திரும்புகிறார்.பின்னர் கார் மூலம் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்கிறார். அங்குள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை பார்வையிடுகிறார். அதன் பின்னர் பாரத மாதா கோவிலுக்கும்செல்கிறார். பின்னர் காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் வருகையொட்டி பலத்த போலீஸ் பாது காப்பு ஏற்பாடு செய் யப்பட்டு உள்ளது. பாது காப்புபணியில் 1500 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். ஜனாதிபதி வருகையை யொட்டி கன்னியாகுமரி நகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் ஹெலிகாப்டர் தளம், அவர் தங்கி இருக்கும் அரசு விருந்தினர் மாளிகை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை, விவே கானந்தர் நினைவு மண்ட பம், விவேகானந்த கேந்திரா வில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண் காட்சி கூடம் மற்றும் பாரத மாதா கோவில்ஆகிய இடங் களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தி வருகிறார்கள்.மேலும் போலீஸ் மோப்பநாய் மூலமும் போலீசார் அவர் செல்லும் பாதைகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ஜனாதிபதி வருகையை யொட்டி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது. கூட்டத்துக்கு குமரி மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதுகாப்பு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன், பயிற்சி உதவி கலெக்டர் குணால்யாதவ், பத்ம நாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாக பொறுப்பாளர் ராஜ்குமார், கேந்திர நிர்வாக அதிகாரிஅனந்த ஸ்ரீபத்மநாபன், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், பூம்பு கார் கப்பல் போக்கு வரத்து கழக மேலாளர் செல்லப்பா, குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ் குமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் உதயகுமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில் குமார் உள்பட அனைத்து துறைகளைச் சேர்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் ஜனாதிபதி ஓய்வெடுக்கும் புதிய அரசு விருந்தினர் மாளிகை புதுப்பிக்கும் பணிதீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தைசுற்றிலும் உள்ள பகுதி சீரமைக்கப் பட்டு வருகிறது. அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தை சுற்றி புதர்மண்டி கிடந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்லும் படகுகள்நிறுத்தி வைக்கப்படும்படகுதுறை க்குசெல்லும்சாலைஇரவு-பகலாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திரா வளாகத்திலும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    • 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை, 46 மின் வினியோக பிரிவு அலுவலகங்களில் நடைபெறும்
    • இணைய தளம் வழியாக விண்ணப்பித்து பின்னர் மின் வாரிய சிறப்பு முகாமுக்கு வர வேண்டும்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் எம். ஆர். பத்மகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் இணைப்பின் உரிமையாளர் தங்களது மின் இணைப்பினை தங்களது பெயரில் மாற்றம் செய்யாமல் அனுபவித்து வரும் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளை பெயர் மாற்றம் செய்து கொள்ள ஏதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 46 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம் வரும் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பெயர் மாற்றம் செய்து கொள்ள தேவைப்படும் நுகர்வோர்கள் உரிய ஆவணங்களுடன் இணைய தளம் வழியாக விண்ணப்பித்து பின்னர், ஆவண நகல்களுடன் மின் வாரிய சிறப்பு முகாமுக்கு வரும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    பெயர் மாற்றம் செய்ய வேண்டிய மின் நுகர்வோர் கள் கவனிக்க வேண்டிய விதிமுறைகள்:-

    கிரையம், பாகப்பிரிவினை, சமரசம், நன்கொடை மூலம் உரிமை கிடைக்க பெற்ற மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய தற்போதைய வரி ரசீது (உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி) உறுதிமொழி படிவம் 4, படிவம் 2, பெயர் மாற்றம் பெற பழைய உரிமையாளரின் ஒப்புதல் (படிவம்2) வழங்கப்படாத பட்சத்தில் வைப்பு தொகை பெற்று பெயர் மாற்றம் செய்து தரப்படும்.

    வாரிசுதாரர்களால் பயன் பெற்று வரும் மின் இணைப்புகளுக்கு வாரிசுதாரரின் பெயரில் உள்ள தற்போதைய வரி ரசீது, வாரிசு சான்றிதழ், மற்ற வாரிசுதாரர்களிடம் இருந்து தடையில்லாத சான்றிதழ் அல்லது படிவம் 3 வழங்க வேண்டும்.

    மின் இணைப்பின் பெயரில் உள்ளவரின் வாரிசுகள் அனைவரின் பெயரிலும் சேர்த்து பெயர் மாற்றம் செய்திட வாரிசு சான்றுடன் இணைய தளம் வழி விண்ணப்பம் பதிவு செய்து, அதன் நகல்களை அலுவலகத்தில் ஒப்படைக்கவும். எவ்வித வகைகளில் தாங்கள் பெயர் மாற்றம் செய்ய வேண்டி உள்ளது என் பதை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையிலான ஆவணங்களுடன் இணைய தளம் மூலம் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் பதிவு செய்து, அதற்குண்டான கட்டணம் செலுத்தியவுடன் 46 மின் வினியோக பிரிவு அலுவலகங்களில் செயல்படும் சிறப்பு முகா மில் ஏற்கனவே பதிவேற்றம் செய்த ஆவணங்களின் நகல்கள் ஒப்படைத்த ஒரு சில மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து தரப்படும்.

    பெயர் மாற்றம் செய்ய வேண்டியவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை, 46 மின் வினியோக பிரிவு அலுவலகங்களில் நடை பெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளவும். தாங்கள் பதிவு செய்யும் ஆவணங்களின் அடிப்ப டையில் பெயர் மாற்றம் செய்வதால், பதிவு செய்த ஆவணங்களில் முறைகேடுகள் ஏதும் பின்னர் கண்டறியப்பட்டால் மறு அறிவிப்பின்றி பெயர் மாற்றம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    • இந்த நேரத்தில் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது.

    நாகர்கோவில்:

    பார்வதிபுரம் மின் வினியோக உதவி செயற்பொறியாளர் ரமணி பாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வடசேரி, கிருஷ்ணன் கோவில், ஆசாரிபள்ளம் உள்ளிட்ட மின் வினியோக பிரிவுகளில் நாளை (7-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கிருஷ்ணன்கோவில், திருப்பதி நகர், பெருவிளை, மேல பெருவிளை, கீழ பெருவிளை, கீழ ஆசாரிபள்ளம், மேல ஆசாரிபள்ளம், பாம்பன் விளை, வேம்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    மேலும் ஆசாரிபள்ளம் மின் வினியோக பிரிவில் நாளை மறுநாள் (8-ந்தேதி) பராமரிப்பு பணி நடைபெறுவதால் தம்மத்துகோணம், அனந்தன்நகர், எறும்புகாடு உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலையத்தில் வருகிற 9-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை,

    மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், முருங்கவிளை புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரை விளை, பருத்தி விளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காதோப்பு, வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு , சர்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில் சந்திப்பு, ராமவர்மபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது. மேலும் சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றும் பணிகளும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சபாநாயகர் அப்பாவு பங்கேற்கிறார்
    • 1922-ம் ஆண்டு கொல்லம் ஆயராக இருந்த அலாசியுஸ் பென்சிகரால் நடுநிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராஜாக்க மங்கலம் ரோட்டில் உள்ள ராமன்புதூரில் கார்மல் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இது 1922-ம் ஆண்டு கொல்லம் ஆயராக இருந்த அலாசியுஸ் பென்சிகரால் நடுநிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது.

    1932-ம் ஆண்டு கோட்டார் ஆயராக இருந்த லாரன்ஸ் பெரேராவால் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. அதைத் தொடர்ந்து மேல்நிலைப்பள்ளியானது. இந்த பள்ளி தொடங்கி நூற்றாண்டு நிறைவு விழா இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இன்று பகல் 2 மணிக்கு முன்னாள் மாணவர்கள் இயக்கம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிக்கு குருகுல முன் னாள் முதல்வர் பால்லியோன் தலைமை தாங்கி பேசுகிறார். வளாக பொருளாளர் குமார் சடேனிஸ், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேசு நேசம், முன்னாள் மாணவர் இயக்க துணைத்தலைவர் பால்டுவின் புரூஸ், ஆசிரியர் அலுவலர் செயலாளர் பபிலன் ஆகியோர் முன் னிலை வகிக்கிறார்கள். முன்னாள் மாணவர் இயக்க இயக்குனரும், பள்ளி தலைமை ஆசிரியருமான மரிய பாஸ்டின் துரை வரவேற்கிறார். செயலாளர் ஜான் உபால்டு அறிக்கை சமர்ப்பிக்கிறார். பள்ளியின் தாளாளர் ஜெரோம் ஆசியுரை வழங்குகிறார்.

    முன்னாள் மாணவரும் தபால் துறையின் முன்னாள் இயக்குனருமான மெர்வின் அலெக்சாண்டர், பொருளா தார நிபுணரும், சபையின் முன்னாள் தூதருமான ஜெப மாலை வினான்சி ஆராய்ச்சி ஆகியோர் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசி ரியர் மற்றும் அலுவலர்களை சிறப்பிக்கிறார்கள். இதில் தாம்பரம் போலீஸ் கமிஷ னர் அமல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாதனை யாளர் களை கவுரவிக்கிறார். ஸ்டெல்லா மேரீஸ் குழுமங் களின் தலைவர் சார்லஸ், இயேசு சபை மதுரை மறை மாநில தலைவர் டேனிஸ் பொன்னையா கார் மல் பள்ளியின் நலம் விரும்பிகள், பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், முன்னாள் மாணவர் இயக்க செயற்குழு உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். முன்னாள் மாணவர் இயக்க தலைவர் டாக்டர் டங்ஸ்டன் ரமேஷ் நன்றி கூறுகிறார்.

    மாலையில் பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் 'இன்றைய இளைஞர் போக்கு வாழத் தக்கதா? வருந்தத்தக் கதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெ றுகிறது. முன்னாள் மாணவர் இயக்க பொருளாளர் அமல் ராஜ் நன்றி கூறுகிறார். மாண வர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆசிரியர் அருள் ராஜன், ஐ.எம்.வி. ஜெரோம், சந்தான இருதயராஜ், பீட்டர் ஷா ஆகியோர் நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கு கிறார்கள்.

    நாளை மாலை 5 மணிக்கு நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இதற்கு தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி விழா மலரை வெளியிட்டு உரை யாற்றுகிறார். சிறப்பு விருந்தி னர்களாக நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் மகேஷ், கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, தொழில் அதிபர் மைக் கேல் ஆண்டனி, இயேசுசபை மன்ற மாநில தலைவர் டேனிஸ் பொன்னையா ஆகியோர் பரிசு வழங்கி, வாழ்த்தி பேசுகிறார்கள்.

    கார்மல் இல்ல அதிபர் ஜெரோம், அருட்பணியாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேசுநேசம் வரவேற்கிறார். பள்ளி தலைமை ஆசிரியர் மரியபாஸ்டின்துரை ஆண்ட றிக்கையை சமர்ப்பிக்கிறார். அதைத்தொடர்ந்து மாண வர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முடிவில் ஆசிரியர் அலுவலர் செய லாளர் பபிலன் நன்றி கூறுகிறார்.

    • 27 யாக குண்டங்கள் அமைப்பு
    • கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் கும்பாபி ஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. 5 மணிக்கு தீபாராதனையும் மாலை 7 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 8 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை பிரவேச பலி பூஜை தீபாராதனை நடக்கிறது.

    23-ந்தேதி காலை 7 மணிக்கு பூர்ணகிரி, கோ பூஜை, தீபாராதனை மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு லட்சுமி பூஜை ,தனலட்சுமி பூஜை, லட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை இரவு 8 மணிக்கு வயலின் இசை நடக்கிறது.

    24-ந்தேதி காலை 7 மணிக்கு அஸ்வ பூஜை, கஜ பூஜை, காலை 8 மணிக்கு புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 7 மணிக்கு கும்ப அலங்காரம், முதல் காலயாக வேள்வி ஆரம்பம் நடக்கிறது.

    25-ந்தேதி காலை 8 மணிக்கு 2-ம் யாகசாலை கிரியா பூஜை ஆரம்பம், காலை 10 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், மாலை 6.30மணிக்கு சமய சொற்பொழிவு, 3-ம் கால யாக சாலை பூஜை இரவு 7 மணிக்கு பரதநாட்டியம் நிகழ்ச்சி நடக்கிறது.

    26-ந்தேதி காலை 5 மணிக்கு 4-ம் கால யாக சாலை கிரிய பூஜை காலை 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து கடகம் எடுத்து வந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மூலஸ்தான மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக தீபாராதனை நடைபெறும். அபிஷேகம் அலங்கார தீபாராதனை அன்னதானம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபோக முகூர்த்தமும் நடைபெறும்.

    கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம் பி ,தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடு களை இணை ஆணை யர் ஞானசேகர் தலைமை யில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். கும்பாபி ஷேகத்தையொட்டி திருப்பணிகள் முடிந்து தற்போது கோவில் வளாகத் தில் 27 யாக குண்டங்கள் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.

    கொடிமரத்தை சுற்றி செம்பால் ஆன வெண்டயம் புதுப்பிக்கப்பட்டு கொடி மரத்தில் பொருத்தப்பட்டது. கொடி மரத்தின் மேல் பகுதி யில் நந்தி தேவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    ×