search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணன்கோவில் பகுதிகளில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம் 

    கிருஷ்ணன்கோவில் பகுதிகளில் நாளை மின்தடை

    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    • இந்த நேரத்தில் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது.

    நாகர்கோவில்:

    பார்வதிபுரம் மின் வினியோக உதவி செயற்பொறியாளர் ரமணி பாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வடசேரி, கிருஷ்ணன் கோவில், ஆசாரிபள்ளம் உள்ளிட்ட மின் வினியோக பிரிவுகளில் நாளை (7-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கிருஷ்ணன்கோவில், திருப்பதி நகர், பெருவிளை, மேல பெருவிளை, கீழ பெருவிளை, கீழ ஆசாரிபள்ளம், மேல ஆசாரிபள்ளம், பாம்பன் விளை, வேம்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    மேலும் ஆசாரிபள்ளம் மின் வினியோக பிரிவில் நாளை மறுநாள் (8-ந்தேதி) பராமரிப்பு பணி நடைபெறுவதால் தம்மத்துகோணம், அனந்தன்நகர், எறும்புகாடு உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலையத்தில் வருகிற 9-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை,

    மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், முருங்கவிளை புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரை விளை, பருத்தி விளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காதோப்பு, வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு , சர்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில் சந்திப்பு, ராமவர்மபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது. மேலும் சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றும் பணிகளும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×